Tamilnadu

News June 6, 2024

குமரி: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை மீனவர்களுக்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். தெற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிமீ முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் அதனால் மீனவர்கள் கடலிற்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

News June 6, 2024

தூத்துக்குடி : மீனவர்களுக்கு எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மீனவர்களுக்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். தெற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிமீ முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் அதனால் மீனவர்கள் கடலிற்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

News June 6, 2024

சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் திட்டம்

image

மதுரையில் வரும் ஜூன்.9ஆம் தேதி அன்று காலை பாரம்பரிய நடைபயணம் மேற்கொள்ளும் புதிய திட்டத்தை மாவட்ட சுற்றுலா துறை அறிமுகம் செய்துள்ளது. உள்ளூர் மற்றும் வெளிநாடு, வெளிமாநில சுற்றுலா பயணிகள், மதுரையின் வரலாற்றையும், பாரம்பரியத்தையும் அறிந்து கொள்ள மீனாட்சியம்மன் மேற்கு கோபுரத்தில் இருந்து நந்தி சிலை, விட்டவாசல், ராயகோபுரம் வழியாக பத்து தூண், மகால் வரை அழைத்து செல்லப்பட உள்ளனர்.

News June 6, 2024

ஸ்டாலினை பாராட்டி அழகிரி ஆதரவாளர் போஸ்டர்

image

மக்களவைத்த் தேர்தலில் திமுக கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 வெற்றி பெற்ற நிலையில் மதுரையைச் சேர்ந்த அழகிரியின் ஆதரவாளர் ஒருவர் “இந்தியா 2024 டிஎன் சாம்பியன்ஷிப் டிஎம்கே ” என்ற பெயரில் மதுரை மாநகர் முழுவதும் போஸ்டர் ஒட்டி உள்ளார்.
போஸ்டரில் “மேன் ஆஃப் தி சீரிஸ்” என்ற தலைப்பில் மு க ஸ்டாலினையும் “மேன் ஆப் தி மேட்ச்” என்ற பெயரில் உதயநிதி ஸ்டாலினையும் குறிப்பிட்டுள்ளார்.

News June 6, 2024

கோவை: நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை (07.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.

News June 6, 2024

திருப்பூர்: நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (07.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.

News June 6, 2024

நீலகிரி: நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் நாளை (07.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.

News June 6, 2024

புதுவையில் வரி செலுத்தவில்லை என்றால் அபராதம்

image

புதுச்சேரி நகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரியில் உள்ள நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான வீட்டு வரி மற்றும் சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு வரும் ஜூன்.17 ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரி செலுத்த தவறும்பட்சத்தில் 10% வட்டி விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

News June 6, 2024

அரியலூர் அருகே வெளுத்து வாங்கிய மழை

image

செந்துறை ஒன்றியம் சுற்றியுள்ள பகுதிகளான அங்கனூர், சிவராமபுரம் , சன்னாசி நல்லூர் மற்றும் தளவாய் ஆகிய கிராம பகுதிகளில் இன்று பிற்பகல் இரண்டு மணிமுதல் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது. கடந்த ஒரு வாரமாக அப்பகுதியில் வெப்பமான வானிலை நிலவியது.தற்போது பெய்துள்ள மழையின் காரணமாக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News June 6, 2024

தூத்துக்குடி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி வட்டத்தில் வரும் 11ம் தேதி முதல் 18ம் தேதி வரை வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற உள்ளது. தூத்துக்குடி வட்டத்தில் 1433ம் பசலிக்கான கிராம கணக்குகளை தணிக்கை செய்திடும் வருவாய்த் தீர்வாயம் தூத்துக்குடி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அவர்களால் 11.06.2024 முதல்; தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பிரதி தினம் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!