India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் கிருஷ்ணகிரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (07.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஈரோட்டில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 1 தேர்வுக்கு 90 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. எனவே தேர்வில் பங்கேற்க உள்ள மாணவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
தர்மபுரி மாவட்டத்தில் நாளை (07.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தர்மபுரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அரசின் சார்பில் நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல் மின்சார விபத்து, தீ விபத்து, நிலச்சரிவு ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் வழங்கப்படுகிறது. அதன்படி அக்டோபர் 2022 முதல் 2 ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக்க விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தை தொடர்பு கொள்ள ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருச்சி ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் பயிற்சி மையத்தில் பயின்று, இளங்கலை மருத்துவ படிப்பில் தேசிய தகுதிக்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது.இந்த பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் 6 பேர் 685 மற்றும் 700க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்காளாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் காஞ்சிபுரம், மதுராந்தகம், ஸ்ரீபெரும்புதூர், திருத்தணி, வாலாஜாபேட்டை ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சிவகங்கை சமூக நலத்துறை மற்றும் இதர நலத்திட்ட சேவைகள் வழங்கும் துறைகளின் சார்பில் திருநங்கைகள் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஏதுவாக ஜூன்.21 ஆம் தேதி திருநங்கைகளுக்கான ஒரு நாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. கூடுதல் விபரங்களுக்கு 04575 240426 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் மூலமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு (ஆண் பெண்) ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.பயிற்சி பெற விரும்புபவர்கள்https://tntextiles.tn.gov.in/jobs/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என்றார்.
Sorry, no posts matched your criteria.