India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோபிசெட்டிபாளையம் கலிங்கியம் அவ்வையார்பாளையத்தை சேர்ந்தவர் அலமேலு (72). இவர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நோய் குணமடையவில்லை. இதனால் வலி பொறுக்க முடியாமல் பெரும் சிரமப்பட்டார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது அலமேலு தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கோபி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபிசெட்டிபாளையம் கலிங்கியம் அவ்வையார்பாளையத்தை சேர்ந்தவர் அலமேலு (72). இவர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நோய் குணமடையவில்லை. இதனால் வலி பொறுக்க முடியாமல் பெரும் சிரமப்பட்டார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது அலமேலு தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கோபி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் மின்பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று (ஜன.3) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பொட்டப்பாளையம், திருபுவனம், ஆ.காளாப்பூர், சிங்கம்புணரி, திருப்பாச்சேத்தி உள்ளிட்ட துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப தங்கள் பணிகளை அமைத்து கொள்ளவும். SHARE IT

சிவகங்கை மாவட்டத்தில் மின்பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று (ஜன.3) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பொட்டப்பாளையம், திருபுவனம், ஆ.காளாப்பூர், சிங்கம்புணரி, திருப்பாச்சேத்தி உள்ளிட்ட துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப தங்கள் பணிகளை அமைத்து கொள்ளவும். SHARE IT

மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த வணிகர்கள் நல சங்க தலைவரும், பிரபல பாத்திரக்கடை உரிமையாளருமான ராஜேந்திரன் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது திருப்பைஞ்ஞீலி பேருந்து நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை வழிமறித்து தலையின் பின் பகுதியில் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் சாலையை கடக்கும்போது கைபேசி பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தி உள்ளனர். மேலும் ஒரு வழி பாதையில் எதிர்ப்புறமாக வாகனங்களை இயக்குவது சட்டப்படி குற்றம் எனவும் இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மாவட்ட காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில், கடந்த வாரத்தில் போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்படி பொது இடங்களில் மது அருந்திய குற்றத்திற்காக 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 73 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மது அருந்திய குற்ற வழக்குகளில் 129 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக எஸ்.பி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சனிக்கிழமை (ஜனவரி 03) எம்.எம்.டி.ஏ, அரும்பாக்கம், அழகிரி நகர், சூளைமேடு, மேத்தா நகர், என் எம் சாலை, எம் எச் காலனி, ரயில்வே காலனி, அம்பா ஸ்கைவாக், நெல்சன் மாணிக்கம் சாலை, திருநீலகண்டன் தெரு, கோடம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் (2.01.2026) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் (2.01.2026) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
Sorry, no posts matched your criteria.