Tamilnadu

News March 27, 2024

தருமபுரி பின்தங்கி உள்ளது – நாம் தமிழர் வேட்பாளர்

image

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் அபிநயா நேற்று(மார்ச் 27) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த அவர், தருமபுரி மாவட்டம் 2 ஆண்டுகளாக மிகவும் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. இங்கு வறட்சி ஏற்பட காரணம் மலைகளை உடைத்தால் எப்படி பருவ மழை வரும் என கூறினார்.

News March 27, 2024

திருச்சியில் சீமான் பிரச்சாரம் அறிவிப்பு

image

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் வரும் ஏப்ரல் 2-ம் தேதி பிரச்சாரம் செய்ய உள்ளார். மேலும் அன்றையதினம் காலை கரூர் நாடாளுமன்ற தொகுதி மணப்பாறை பகுதியில் வேன் பிரச்சாரம் செய்கிறார். மாலை ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, பகுதியில் வாகன பிரச்சாரம் மேற்கொள்கிறார். மேலும் இரவு மலைக்கோட்டை பகுதியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் எனது தகவல் வெளியாகி உள்ளது.

News March 27, 2024

ரங்கநாதர் கோவிலில் பங்குனி விழா இன்று துவக்கம்

image

பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர விழா இன்று முதல் ஏப் 5 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் சுவாமி வீதி உலாவும் 5 ஆம் நாளான மார்ச் 31 இல் கருட சேவை, 7 ஆம் நாள் தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

News March 27, 2024

மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்!

image

நாகப்பட்டினம் மாவட்டம் ஏ.டி.எம் மகளிர் கல்லூரியில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் அவர்கள் இன்று துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ரா . பேபி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ வருவாய் கோட்டாட்சியர் கோ. அரங்கநாதன் ஆகியோர் உள்ளனர்.

News March 27, 2024

தேனி: குடிபோதையில் விஷம் அருந்தியவர் பலி

image

தேனி அருகே அம்மாபட்டியை சேர்ந்தவர் பாண்டி. இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டில் தினமும் மனைவியுடன் சண்டையிட்டு வந்தார். அதை அவரது மகன்கள் தட்டிக் கேட்டபோது, தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி வந்தார். 25ம் தேதி மாலை குடிபோதையில் வீட்டிற்கு வந்தவர் விஷமருந்தி விட்டேன் என கூறி மயங்கினார். மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார்.

News March 27, 2024

காங்கிரஸ் வேட்பாளர் அறிமுக கூட்டம்

image

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கட்சியின் கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் ப.சிதம்பரம் அறிமுக கூட்டம் தேவகோட்டை தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் தலைமையிலும், முன்னால் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ மாங்குடி. கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

News March 27, 2024

ஈரோடு காவல்துறை தேர்தல் பார்வையாளர் நியமனம்

image

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்துக்கு காவல்துறை தேர்தல் பார்வையாளராக, ராம கிருஷ்ண ஸ்வரண்கர் ஐ.பி.எஸ்., நியமிக்கப்பட்டுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரியான ராம கிருஷ்ண ஸ்வரண்கர் இன்று முதல் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பாதுகாப்பு பணி ஆய்வுகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 27, 2024

தென்காசி:காங்கிரஸ் எம்எல்ஏவிடம் வாழ்த்து பெற்ற திமுக வேட்பாளர்

image

தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் டாக்டர் ராணிஸ்ரீ குமார்
தென்காசி எம்எல்ஏவும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எஸ் பழனி நாடாரிடம் வாழ்த்து பெற்றார்.அப்போது அவர்களுடன் நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன்,நகர காங்கிரஸ் தலைவர் எஸ்கேடி ஜெயபால் உள்ளிட்ட பலர் இருந்தனர்

News March 27, 2024

தேர்தல் பிரச்சார துவக்க பொதுக்கூட்டம்

image

புதுவை நாடாளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி அணியை வெற்றி பெறச் செய்வோம் என சிபிஎம் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சார துவக்க பொதுக்கூட்டம் சாரம் ஜீவானந்தம் சிலை அருகில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், இந்திய கம்யூ கட்சியின் மாநில செயலாளர் சலீம், காங்கிரஸ் கட்சியின் நாராயணசாமி, தி.க வீரமணி (ம) ராமகிருஷ்ணன் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஆகியோர் பங்கேற்றனர்.

News March 27, 2024

தி.மலையில் 12டி படிவம் வழங்கிய கலெக்டர்

image

தி.மலையில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு வாக்கு சதவீதம் அதிகரிக்கும் நோக்கில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக நேற்று வேங்கிக்கால் ஊராட்சி ஓம் சக்தி நகரில் உள்ள மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டிற்கு மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று மாற்றுத்திறனாளி நபருக்கு பழ கூடை கொடுத்து 12-D படிவத்தினை வழங்கினார்.

error: Content is protected !!