India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். காதலிக்க மறுத்தால் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை தவறாக பதிவிடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து அச்சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். இதனையடுத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அரக்கோணத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரயிலில் சுசிலா(64) என்பவர் தனது மகனுடன் உட்கார்ந்திருந்தார். ரயில் புறப்பட்ட சில நிமிடங்களில் சுசீலாவின் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் செயினை வாலிபர் ஒருவர் பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவம் குறித்து அரக்கோணம் ரயில்வே போலீசில் நேற்று(மார்ச் 27) இரவு சுசிலா புகார் கொடுத்தன் பேரில், ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலையொட்டி நேற்று சாலையில் பறக்கும்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுவையை மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த 2 பேர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.7 லட்சம் பணம் எடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து உருளையன்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுகாவிற்கு உட்பட்ட வடசென்னிமலை கோயிலில் நேற்று(மார்ச் 27) இரவு சப்தாவர்ணம் நடைபெற்றது. இதனை அடுத்து இன்று(மார்ச் 28) அதிகாலை 2 மணி அளவில் மலையில் கடை வைத்திருந்தவர்கள் பிக்கப் வேனில் கீழே வந்து கொண்டிருந்தனர். அப்போது நிலைத்தடுமாறி வேன் கவிழ்ந்ததில் 12 பேர் காயமடைந்த நிலையில் பழனியப்பன் என்பவர் உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இல்லை தமிழில் நெல்லை பார்லிமென்ட் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணியை ஆதரித்து எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று (மார்ச் 27) பேசினார். அப்போது தமிழகத்தில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி உருவாகி உள்ளது. இந்த கூட்டணியை இபிஎஸ் சிறப்பாக வழி நடத்துகிறார். நாடும் நமதே நாற்பதும் நமதே என்ற வகையில் ஜூன் 4-ஆம் தேதி 40 இடங்களையும் அதிமுக கூட்டணி கைப்பற்றும் என கூறினார்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனில் பணிபுரிந்து வந்த தாசில்தார் முருகேசன் என்பவர் தனது கேபிள் டிவி உரிமத்தை ரத்து செய்ததால் கடமலைக்குண்டை சேர்ந்த வேல்முருகன் என்பவர் 2013 இல் தாசில்தாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுரேஷ்குமார் வேல்முருகனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கடந்த 20ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது. நேற்றைய தினம் மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்ற நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 38 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்டத் தேர்தல் அலுவலர் (திருப்பூர் கலெக்டர்) தெரிவித்துள்ளார்.
நீலகிரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் (மார்ச் 27) முடிவடைந்தது. இதுவரை அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 33 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு மீதான பரிசீலனை இன்று (மார்ச் 28) நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற மார்ச் 30 கடைசி நாளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை நெசப்பாக்கம், கேகே நகர் சந்திப்பில் நேற்று(மார்ச் 27) பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்த ஒரு நபர் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.7 லட்சம் ரொக்கத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அழகியமண்டபம் சந்திப்பில் இன்று(மார்ச் 28) காலை 9.30 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், குமரி மக்களவை தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் மரிய ஜெனிபரை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.