India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை பாராளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், கோவை யாஸ்மின் நகர், ராமர் கோவில் வீதியில் இன்று (மார்ச்.28) பிரச்சாரத்தில் ஈடுபட்டு உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். உடன் கோவை மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக், மேயர் கல்பனா ஆனந்த் குமார் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் திமுக கழக தொண்டர்கள் இருந்தனர்.
திருப்பூர் மாநகர காவல் துறையின் KVR நகர் சரகத்தின் சார்பில் சரக காவல் உதவி ஆணையர் நாகராஜ் தலைமையில் கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கேவிஆர் நகர் காவல் நிலையம் முன்பு துவங்கிய கொடி அணி வகுப்பு செல்லம் நகர், பழ குடோன், கருவம்பாளையம், மங்கலம் உள்ளிட்ட பதற்றமான வாக்குச்சாவடி உள்ள பகுதிகளில் காவல்துறை மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் சார்பாக கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்கு ஒன்றியம் ஆண்டியூர் முருகன் கோயிலில், அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே முனுசாமி, உள்ளிட்ட பலர் வழிபாடுசெய்து பிரச்சாரத்தை துவக்கினர். பின்னர் மாரம்பட்டி கிராமத்தில் வயலில் களை எடுக்கும் பெண்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
திருநெல்வேலி பாதிரியார் ஒருவர் பாராளுமன்ற தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். திருநெல்வேலியைச் சேர்ந்த பாதிரியார் காட்புரே நோபல் நெல்லை மற்றும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதனை அடுத்து இன்று (மார்ச் 28) தனது ஆதரவாளர்களுடன் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் எஸ்.டி.ஆர் விஜயசீலன் நேற்று மனு தாக்கல் செய்தார். அதில் பிரமாண பத்திரத்தில் தனக்கு அசையும்,அசையா சொத்துக்கள் வங்கி கணக்கு என மொத்தம் ரூ.71 கோடியே 10 லட்சம் இருப்பதாகவும். மனைவி பெயரில் ரூ.13 கோடியை 80 லட்சம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் 873 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளன்று கோடை வெயிலை கருத்தில் கொண்டும், வாக்காளர்களின் நலன் கருதியும் இந்த வாக்குச்சாவடி மையங்கள் அருகே முதலுதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூா் மக்களவை தொகுதியில் நேற்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்குமாா் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக கையில் நெற்கதிா்கள், கரும்புகளை ஏந்தி வந்தார். வேட்பாளா் செந்தில்குமாருடன், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலா் பி.ஆா்.பாண்டியன், தலைவா் எல். பழனியப்பன் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ராணுவத்தில் பணியாற்றும் 2868 பேருக்கு தபால் ஓட்டு உள்ளது. இவர்கள் ஆன்லைனில் வாக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .இறுதி வேட்பாளர் பட்டியல் முடிந்ததும் ஆன்லைனில் அனுப்பி வைக்கப்படும் தபால் ஓட்டுக்களை ராணுவ வீரர்கள் பதிவிறக்கம் செய்து வாக்களித்து அதனை தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய, முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை மாலை தர்மபுரி வருகின்றார். தர்மபுரி திமுக வேட்பாளர் மணி மற்றும் கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து பிரச்சார பொது கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசுகிறார்.
திருச்சி அதிமுக வேட்பாளர் தன்னுடைய பிரச்சாரத்தின் போது ருச்சி தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.திருச்சி தொகுதி மக்களின் குரலாக பாராளுமன்றத்தில் ஒலித்து மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவேன் என தெரிவித்தார். இந்தியாவில் முன்மாதிரியான தொகுதியாக திருச்சியை மாற்ற நடவடிக்கை நிச்சயம் எடுப்பேன் என வாக்குறுதிகள் கொடுத்து தீவிர பிரச்சாரம் செய்கிறார்.
Sorry, no posts matched your criteria.