Tamilnadu

News March 28, 2024

உதயநிதி பிரச்சார தேதி அறிவிப்பு

image

புதுச்சேரியில் INDIA கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 31-ந் தேதி மாலை புதுச்சேரியில் வில்லியனூர் கிழக்கு மாட வீதி, மரப்பாலம், அண்ணா சிலை சதுக்கம் ஆகிய மூன்று இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

News March 28, 2024

மது விற்ற 16 பேர் கைது

image

திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் திண்டுக்கல் அய்யலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதிகளில் மது விற்ற காளிமுத்து (35), சுப்பிரமணி (44) ஜெயா (48), ரவீந்திரன் (65), திருமுருகன் (29), கார்த்திக் (42), பழனிச்சாமி (70), ராஜ்குமார் (32), ஜெயா (48) உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 191 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

News March 28, 2024

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் ஆட்சியர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் பாதுகாப்பில் காவல்துறையுடன் இணைந்து முன்னாள் ராணுவ வீரர்கள் ஈடுபட உள்ளனர். விருப்பமுள்ள கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 65 வயதுக்குட்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் கடலூர், சப்-ஜெயில் சாலையில் உள்ள முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 04142-220732 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News March 28, 2024

விருதுநகர்:மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி

image

மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு மாநில அளவிலான தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான வினாடி வினா போட்டி விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியில் வரும் 30- ஆம் தேதி நடைபெறுகிறது.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம்.பதிவு செய்ய இன்றே (28-03-2024) கடைசி நாள்.போட்டியில் முதல் பரிசுக்கு 25,000, இரண்டாம் பரிசுக்கு 15,000, மூன்றாம் பரிசுக்கு 10,000 ருபாய் வழங்கப்படுகிறது.

News March 28, 2024

புதுக்கோட்டை அருகே விபத்து; 3 பேரின் நிலை?

image

ஆலங்குடி அருகே கம்மங்காடு மேலப்பட்டியை சேர்ந்தவர்
ராஜேஷ் அவரது மகன் ரோகித் இவர்கள் இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் வாரச்சந்தைக்கு சென்று வீட்டு வீட்டிற்கு திரும்பிய போது அந்த வழியாக மேலப்பட்டியை சேர்ந்த தர்மராஜ் அதேபகுதியை குணா ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளும், ராஜேஷ் வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் ராஜேஷ், ரோகித், விஷ்ணு ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.

News March 28, 2024

திருவள்ளூர்: கொலை… நாயால் சிக்கிய குற்றவாளி!

image

பொன்னேரி அடுத்த கனகவல்லிபுரத்தில் வீட்டில் தனியாக இருந்த சரஸ்வதி (55) என்பவரை மர்ம நபர் கத்தியால் வெட்டி கொலை செய்து கழுத்தில் இருந்த 5 சவரன் நகையை பறித்த நிலையில், பொன்னேரி போலீசார் கொலையாளியை தேடி வந்தனர்.  இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான அசோக் (35) என்பவர் கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை கண்டுபிடித்தது போலீஸ் மோப்ப நாய் டாபி என்பது குறிப்பிடத்தக்கது.

News March 28, 2024

தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை

image

கிருஷ்ணகிரி அருகே கந்திகுப்பம் அடுத்த குருவிநாயனபள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று அதிகாலை முதலே பல்வேறு வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த வாகன சோதனையில் காந்திமதி மகளிர் சமூக நல அலுவலர் கலந்துகொண்டு வாகனங்களை ஆய்வு செய்துவருகின்றார். மேலும் அப்பகுதியில் சந்தேகப்படும் நபர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும்படையினர் ஆய்வு செய்துவருகின்றனர். இப்பகுதி ஆந்திர எல்லையோர பகுதியாகும்.

News March 28, 2024

இன்று எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் பிரச்சாரம்

image

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்யும் நிலையில், இன்று மாலை 7 மணி அளவில் மதுரை பழங்காநத்தம் அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன் ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிக்க உள்ளார். இந்த பிரச்சாரத்தில் தோழமைக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.

News March 28, 2024

4 வெவ்வேறு சாலை விபத்துகளில் 5 பேர் பலி  

image

சேத்துப்பட்டு – ஆரணி நெடுஞ்சாலையில் நேற்று மட்டும் 4 வெவ்வேறு இடங்களில் காலை விபத்துகளில் 5 பேர் பலி. ‌செஞ்சி பெரியகரம் கிராமத்தைச் சேர்ந்த சசிக்குமார், மேல் சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த புவனேஸ்வரர் , வெங்கடேசன், மருத்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த துளசி, இடையகொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பலராமன் ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

News March 28, 2024

ராமேஸ்வரம்: மீனவர்கள் 7 பேர் விடுதலை

image

ராமேஸ்வரத்தை சேர்ந்த 2 படகுகள், அதிலிருந்த மீனவர் 7 பேரை மன்னார் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை மார்ச் 21 அதிகாலை கைதுசெய்தது. மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர் 7 பேரையும் இன்று (மார்ச் 28) வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மீனவர் 7 பேரையும் நிபந்தனையுடன் நீதிபதி லத்தீப் விடுவித்து உத்தரவிட்டார்.

error: Content is protected !!