Tamilnadu

News March 16, 2024

சேலத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பு

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று(மார்ச்.15) மாவட்டத்தில் அதிகபட்சமாக 103.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

News March 16, 2024

திண்டுக்கல்லில் கருத்தடை திட்டத்துக்கு அழைப்பு

image

திண்டுக்கல் ஆட்சியர் அறிக்கையில், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் ஒரு பெண் குழந்தையுடன் பெற்றோர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தால், குழந்தையின் பெயரில் ரூ.50 ஆயிரம், 2 பெண் குழந்தைக்கு பின் செய்தால் குழந்தைகள் பெயரில் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்புத்தொகை, ரசீது வழங்கப்படுகிறது.இதற்கு ஆதார் நகல் , குடும்ப புகைப்படத்துடன் இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கேட்டுள்ளார்.

News March 16, 2024

புதுச்சேரியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு

image

புதுச்சேரியில் வரும் கல்வியாண்டு முதல் அனைத்து வகுப்புகளிலும் சிபிஎஸ்இ பாட திட்டம் அமுல் படுத்துவதால் மாணவர் சேர்க்கை வரும் மார்ச் 25 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தற்போது நடைபெறும் தேர்வுகள் முடிந்ததும், மார்ச்.24 முதல் 31 ஆம் தேதி வரையிலும், மே.01 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டு ஜூன் 03ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி அறிவித்துள்ளது.

News March 16, 2024

திண்டுக்கல் தேர்தலை முன்னிட்டு போஸ்டர் அகற்றம்

image

இன்று பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து,
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின்படி, நகரமைப்பு அலுவலர் ஜெயக்குமார், உதவி நகரமைப்பு அலுவலர் வள்ளி ராஜம், ஆய்வாளர் வெங்கடேஷ், சுகாதார ஆய்வாளர் தக்ஷிணாமூர்த்தி மற்றும் சுகாதார பணியாளர்களை கொண்டு மாநகராட்சிக்கு சொந்தமான காமராஜர் பேருந்து நிலையத்தில் அரசியல் கட்சி சார்பாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை அகற்றினர்.

News March 16, 2024

விருதுநகர் அருகே மகளிர் தினம் கொண்டாட்டம்

image

ராஜபாளையம் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 16ஆம் தேதி அய்யனார் கோயில் சாலையில் உள்ள மகளிர் என்ற ஒரு நாள் விவசாயி நகர்மன்ற தலைவி AAS பவித்ரா ஷியாம் தலைமையில் நகர்மன்ற மகளிர் உறுப்பினர்கள் கலந்து கொண்டு டிராக்டரில் மூலம் பயணம் செய்து வயலில் நாற்று நடவு, வயலில் நீர் பாய்ச்சல் போன்ற நகர மன்ற தலைவி நகரமன்ற உறுப்பினர்கள் விவசாயம் செய்து மகளிர் தினத்தை கொண்டாடினார்கள். விவசாயிகள் கலந்து கொண்டனர்.

News March 16, 2024

திருச்சி: மரங்களை நட்ட அமைச்சர்!

image

திருச்சியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கல்லூரி விழாக்களில் பங்கேற்பதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று சென்றிருந்தார். அப்போது கல்லூரி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நடு விழாவில் மரம் நட்டார்.அப்போது வெயில் அதிகமாகி விட்ட நிலையில் நிழலுக்காக மரங்களை தேடும் நாம், நம் எதிர்காலத்திற்கு மரங்கள் வளர்க்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

News March 16, 2024

தென்காசி: வட்டார அளவிலான விளையாட்டு போட்டி

image

பாவூர்சத்திரம் த.பி சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேரு யுவகேந்திரா மற்றும் வெஸ்டர்ன் கார்ட்ஸ் இந்தியன் அகாடமி இணைந்து நடத்திய வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டி இன்று நடந்தது. விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

News March 16, 2024

புதுகை: மாணவர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை

image

கொப்பனாபட்டி அரசு உதவி பெறும் நாராயணன் செட்டியார் அரசுப்பள்ளியில் இன்று வனத்துறை , தீயணைப்பு, மருத்துவதுறை மற்றும் ஸ்டெப் அறக்கட்டளை சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் வனத் மேலாண்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு வனச்சரக அலுவலர் ராமநாதன் தலைமை வகித்தார்.பொன்னமராவதி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மணிகண்டன், ஸ்டெப் அறக்கட்டளை இயக்குனர் பசுமை பாரதி உள்ளிட்டோர் உள்ளனர்.

News March 16, 2024

ஆரணி: அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்

image

தமிநாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளதாக இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலை ஓரங்களில் ஒட்டப்பட்டிருக்கும் அரசியல் கட்சிகளின் போஸ்டர்களை வருவாய்த்துறை அதிகாரிகள் கிழித்தெறிந்து அப்புறப்படுத்தும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

News March 16, 2024

மதுரை: 322 வாகனங்களுக்கு அபராதம்

image

மதுரையில் விதிகளை மீறி இயங்கும் வாகனங்கள் மீது போக்குவரத்து மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இணைந்து 10 இடங்களில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டுதல் 15, காப்பீடு செய்யாமை 21, வாகனத்தில் அதிக உயரம் 37, சரக்கு வாகனத்தில் பயணிகள் ஏற்றுதல் 39, இதர வழக்குகள் 189 என மொத்தம் 322 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் ரூ.2,68,500 விதிக்கப்பட்டது.

error: Content is protected !!