Tamilnadu

News March 28, 2024

பாஜக வேட்பாளர் மனுவை நிராகரிக்க கோரிக்கை

image

நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் வக்கீல் மகராஜன் செய்தியாளர்களை இன்று (மார்ச் 28) சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, இன்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தனது வேட்பு மனுவில் 2023இல் தன் மீது உள்ள வழக்கை மறைத்து மனு தாக்கல் செய்ததாகவும், இதனால் அவருடைய வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு மனு தேர்தல் அதிகாரியிடம் அளித்துள்ளதாக கூறினார்.

News March 28, 2024

செங்கல்பட்டில் கலை கட்டிய தெருக்கூத்து

image

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் 100% வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பாக நாடக கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. இதனை அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

News March 28, 2024

தருமபுரி: லாரி மோதி 2 பேர் பலி

image

தருமபுரி மாவட்டம் கடகத்தூர் அடுத்த செல்லியம்பட்டி பகுதியில் நேற்று(மார்ச் 27) மாலை லாரி மற்றும் டெம்போ நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. சேலத்தில் இருந்து பாலக்கோடு செல்லும் வழியில், டெம்போ மேல் லாரி ஏறியதில் டெம்போ டிரைவர் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். லாரி டிரைவர் மற்றும் கிளீனர் தப்பி ஓடினர். சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

News March 28, 2024

ஸ்ரீபெரும்புதூர்: ஆபத்தான நிலையில் பயணிக்கும் மாணவர்கள்

image

ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இன்று காலை கண்டெய்னர் லாரியின் பின்புறமாக நின்று ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கும்படி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News March 28, 2024

ராணிப்பேட்டை: நேருக்கு நேர் மோதி விபத்து!

image

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, காவேரிப்பாக்கம் அடுத்த கொண்டாபுரம் பகுதியில் கண்டெய்னர் லாரி ஒன்று நின்றிருந்தது. இந்நிலையில் இன்று(மார்ச் 18) சென்னையில் இருந்து வேலூர் நோக்கி வந்த இன்னொரு லாரி, நின்று இருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News March 28, 2024

விடுதியில் ரூ.4.49 லட்சம் பறிமுதல்

image

தேனியில் உள்ள தனியாா் தங்கும் விடுதிகளில் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியா் முத்துமாதவன் தலைமையில் அலுவலா்கள் நேற்று (மார்.27) சோதனை நடத்தினா். அதில் தேனி பெரியகுளம் சாலையில் உள்ள தனியாா் விடுதி ஒன்றில் தங்கியிருந்த காா்த்திக் என்பவா் உரிய ஆவணங்களின்றி ரூ.4,49500 வைத்திருந்துள்ளார். அதனை பறிமுதல் செய்து பெரியகுளம் சாா் நிலை கருவூலத்தில் ஒப்படைத்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

News March 28, 2024

22 பேர் வேட்பு மனு தாக்கல்

image

அரியலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வந்த நிலையில் இன்று வரை 22 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசிக  திருமாவளவன், பாஜக கார்த்தியாயினி, அதிமுக சந்திரகாசன், நாதக ஜான்சிராணி உள்ளிட்டோர் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 28, 2024

பாரளுமன்றம் தேர்தல் புறக்கணிக்க அரசு ஊழியர் முடிவு

image

திருப்பத்தூர் அருகே சகாயம் நகரை சேர்ந்தவர் ஜெகநாதன்.இவர் கல்வி துறையில் கண்காணிப்பு அலுவலராக ஒய்வு பெற்றவர்.இயற்கை உபாதை கழித்துவிட்டு வாளியில் கொண்டு சென்று வீட்டுக்கு வெளியே கொட்டும் அவல நிலையில் கடந்த 25 ஆண்டு காலமாக போராடி வருகிறார்.சாலையை ஆக்கிரமிப்பு செய்ததால் கால்வாய் வசதி இல்லாததால் அவதிப்பட்டு வருவதாகவும் கழிவு நீர் கால்வாய் வசதி அமைக்கவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறியுள்ளார்

News March 28, 2024

ஈரோடு மக்களவை தொகுதியில் 44 பேர் வேட்புமனு தாக்கல்

image

ஈரோடு மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. ஈரோடு ஆட்சியர் அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் கடைசி நாளான நேற்று மாலை வரை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள், தேசிய கட்சிகள்,அங்கிகாரம் பெற்ற மற்றும் பெறாத கட்சிகள்,சுயேட்சை வேட்பாளர்கள் என 44 பேர் ஈரோடு மக்களவை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

News March 28, 2024

தென்காசி திமுக வேட்பாளர் மனு ஏற்பு

image

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியின் வேட்பாளராக திமுக சார்பில் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் வேட்புமனு பரீசீலனை இன்று காலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது

error: Content is protected !!