India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 அறிவிப்பு வெளியிடப்பட்ட இன்றிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில்
ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் மற்றும் ரூ.10,000-க்கு மேல் பரிசுப் பொருட்கள் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சங்கீதா தலைமையில் இன்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கான அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் ஆலங்குளம், நெல்லை, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி மற்றும் ராதாபுரம் ஆகிய
ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. தொகுதியில் மொத்தம் 8 லட்சத்து 6 ஆயிரத்து 96 ஆண் வாக்காளர்கள், 8 லட்சத்து 44 ஆயிரத்து 284 பெண் வாக்காளர்களும், 152 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம்16 லட்சத்து 50 ஆயிரத்து 512 வாக்காளர்கள் உள்ளனர். இவ்வாறு கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூரில் இருந்து கூவத்தூர் செல்லும் சாலையில் தட்டம்பட்டு கிராமம் அருகே இன்று காலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மானை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
முதலியார் பேட்டை தொகுதி வேல்ராம்பட்டு இன்ஜினியர்ஸ் காலனி பகுதியில் கட்டப்பட்டுள்ள 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு அடுக்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டி அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கான
மேம்படுத்தப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான திறப்பு விழா சட்டமன்ற உறுப்பினர் சம்பத் தலைமையில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு நீர் தேக்க தொட்டியினை திறந்து வைத்தார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது வீட்டில் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். அப்போது, பாராளுமன்ற சீட்டை ரூ.50 கோடிக்கு பேரம் பேசி விற்க முயற்சிக்கின்றனர். ஒரு அமைச்சர் தொடர்ந்து பல முறை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி அவர் வெளிநாடு சென்று வருவது குறித்து உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பரமக்குடியில் 2,52,642, திருவாடானையில் 2, 92, 214 , ராமநாதபுரத்தில் 3, 14, 236 , முதுகுளத்தூரில் 3,09, 928, அறந்தாங்கியில் 2,27,059, திருச்சுழியில் 2, 09, 971 என 7, 97, 012 ஆண்கள், 8, 08, 955 பெண்கள் என 16, 06, 050 வாக்காளர்கள் உள்ளனர் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு 54 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு ஒளிப்பதிவாளர், 5 அலுவலர்கள் கொண்டு 3 சுற்றுகளாக பறக்கும் படை செயல்படும் என ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார். மேலும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு மூன்று பறக்கும் படை நியமனம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சியின் முதல் சிறப்பு கூட்டம் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த சிறப்பு கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் மாநகராட்சி தலைவர் கலாநிதி துணைத் தலைவர் பூபதி நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் மூப்பனாரின் சிலை உள்ளது. இன்று மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மூப்பனாரின் சிலை துணி கொண்டு மூடப்பட்டது. மேலும் பல இடங்களில் கட்சி கொடிக்கம்பங்களை கட்சியினர் அகற்றி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.