Tamilnadu

News March 28, 2024

வேலூர் 13 வேட்பாளர்களின் வேட்பு மனு நிராகரிப்பு

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 50 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் 37 வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்டதாகவும் 13 வேட்பாளர்களின் மனு நிராகரிக்கப்பட்டதாகவும் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலட்சுமி என்று (மார்ச் 28) தெரிவித்துள்ளார்.

News March 28, 2024

வேலூரில் மீண்டும் சதம் அடித்த வெயில்

image

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 96 பாரன்ஹீட் வெயில் பதிவாகி வந்த நிலையில் இன்று (மார்ச் 28) 100.6°F பதிவானது. மேலும் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

News March 28, 2024

திருப்பூரில் 419 பேர் தேர்வு எழுதவில்லை

image

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று ஆங்கில பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில், 31 ஆயிரத்து 87 பேர் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் 419 பேர் தேர்வு எழுதவில்லை என பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 28, 2024

கோவை: வேட்பு மனு ஏற்பு, நிராகரிப்பு விவரம்

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கோவை மக்களவைத் தொகுதியில் 59 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 41 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 18 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் 18 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என கோவை மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

News March 28, 2024

மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மதுரை பாராளுமன்றத் தேர்தலுக்கான பொதுப் பார்வையாளர் (General Observer) முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தேர்தல் தொடர்பான புகார்கள், விதிமீறல்கள் இருந்தால் அங்குள்ள தேர்தல் பொது பார்வையாளர் ராஜேஷ்குமார் யாதவிடம் காலை 10 மணி முதல் 11 மணி வரை நேரிலோ அல்லது 8925925380 அலைபேசி எண்ணிலோ புகார் அளிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News March 28, 2024

சமூக வலைத்தளங்களில் அவதூறாக பிரச்சாரம்

image

காரைக்காலை அடுத்த நெடுங்காட்டில் கௌதமன் என்பவருக்கு சொந்தமான தனியார் ஓட்டல் ஒன்றில் வழங்கப்பட்ட பிரியாணியின் அளவு குறைவாக உள்ளதாக கூறி சண்டைபோட்டு, சமூக வலை தளங்களில் ஓட்டல் வாசலில் பிரியாணியை கொட்டி எடுத்த வீடியோவை அவதூறாக பரப்பி பிரச்சாரம் செய்த தினேஷ், சூர்யாதி , திருமுருகன் மீது ஓட்டல் உரிமையாளர் புகார் அளித்துள்ளார். நெடுங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 28, 2024

திருப்பூரில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்பு மனு அளித்தவர்களுக்கான பரிசீலனை இன்று நடைபெற்றது. மொத்தம் 38 வேட்பு மனுக்கள் அளிக்கப்பட்டிருந்த நிலையில் 15 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும் , பல்வேறு காரணங்களுக்காக 23 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

News March 28, 2024

பெண்கள் விளக்கு ஏற்றி உறுதிமொழி ஏற்பு

image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் செங்கோட்டையில் இன்று (மார்ச் 28) வியாழக்கிழமை தேர்தல் விழிப்புணர்வு இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டன. பெண்கள் தெருக்களில் விளக்கு ஏற்றி விழிப்புணர்வு நடத்தினர். மேலும் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தேர்தல் பணி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News March 28, 2024

திருவாரூர்: மீம்ஸ் போட்டி அறிவிப்பு

image

திருவாரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பாக மீம்ஸ்கள் வரவேற்கப்படுகின்றன. voter education and electoral participation என்ற தலைப்பின் கீழ் தயாரிக்க வேண்டும், மேலதிக விபரங்களுக்கு 9578290250 என்ற வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம். கடைசி தேதி 2/4/24 என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 28, 2024

குள்ளஞ்சாவடியில் நாளை பாமக நிறுவனர் பிரச்சாரம்

image

கடலூர் தொகுதியில் இயக்குநர் தங்கர் பச்சான் பாமக சார்பில் போட்டியிடுகிறார்.  இந்நிலையில், தங்கர் பச்சானை ஆதரித்து நாளை 29ஆம் தேதி குறிஞ்சிப்பாடி வட்டம் குள்ளஞ்சாவடி அண்ணாபாலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!