India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட இன்று (மார்ச் 26) ஒரே நாளில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர், சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 13 வேட்பாளர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை வேலூர் தொகுதியில் போட்டியிட 31 பேர் மனு தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி பாமக பெண் வேட்பாளர் செளமியா அன்புமணி வழிபாடு செய்தார். அப்போது தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி. வெங்கடேஸ்வரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இன்று (26.03.2024) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் (காவல் பார்வையாளர்) பரத்ரெட்டி பொம்மாரெட்டியுடன் 2024 ஆம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ் ஆகியோர் உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு அவர்கள் தலைமையில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் சார்பாக 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தர்மபுரி தேர்தல் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டி இன்று நாம் தமிழர் கட்சியினர் 2 மணி அளவில், தேர்தல் அதிகாரியுமான மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி அவர்களிடம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் நாம் தமிழர் கட்சியின் கூட்டணி இருக்கும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மௌன்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று (26.03.2024) பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. பொதுத்தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தேர்வு கண்காணிப்பாளர் மற்றும் ஆசிரியர் உடன் இருந்தனர்.
கோடை வெப்ப அலையை சமாளிக்க வெப்ப காலத்தில் ஏற்படும் நோய்களை சமாளிக்கவும் அவற்றுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் புதுவையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆகவே மக்கள் அதிக சூர்ய வெப் பத்தால் உருவாகும் அயர்ச்சி மற்றும் பக்கவாதத்தை தடுத்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று புதுவை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
மல்லூர் ரயில்வே யார்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், வருகின்ற மார்ச் 30-ம் தேதி வரை சேலம் – கரூர் ரயில்கள் இருமார்க்கத்திலும் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் சேலம் – கரூர் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடக்க கல்வி பட்டய தேர்வு எழுத விரும்பும் தனி தேர்வர்கள் மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வர்கள் ஒட்டன்சத்திரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (DIET) மூலம் இணைய வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
நெல்லை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் நாளை (மார்ச் 27) மதியம் 12 மணியளவில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதையடுத்து, வேட்புமனுத் தாக்கல் நிகழ்ச்சியில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்படி கிழக்கு மாவட்ட தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.