India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார். இதனையொட்டி கோவில்பட்டியில் சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நகர திமுக அலுவலகத்தில் வைத்து நகர சபை தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
தி.மலை மாவட்டம் போளூர் நகரத்தில் ஆரணி மக்களவை தொகுதியின் திமுக வேட்பாளர் தரணிவேந்தன் திமுக மாநில மருத்துவரணி துணை தலைவரும், போளூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளருமான மரு. எ.வ.வே.கம்பன், வணிகர் சங்கத்தினரை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு,அதிமுக கூட்டணியில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளர் சிவக்கொழுந்துவிற்கு ஆதரவாக இன்று மாலை 6 மணிக்கு கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
ஏலகிரி மலை பஞ்சாயத்து அலுவலகத்தில் புதிய வாக்காளர் அடையாள அட்டை பெயர் சேர்த்தல், கைபேசி எண் இணைத்தல், முகவரி மாற்றுதல், புதியதாக சாதி சான்றிதழ் பெறுவதற்கு இன்று, மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் முகாம் நடைபெறும் என ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் உதகை சுதந்திர நினைவு திடல் முன்பு இன்று (மார்ச் 30) மதியம் 12.30 மணியளவில் வருமான வரித்துறையின் செயலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.கணேஷ் அறிக்கையில் கூறியுள்ளார்.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் நிகழாண்டுக்கான திருவிழா ஏப்.12 முதல் 23 வரை நடைபெறுகிறது. ஏப்.12 கொடியேற்றத்துக்குப் பின், ஒவ்வொரு நாள் மாலையும் சுவாமி அம்பாளுடன் சிம்மம்கமலம்,அன்னம்,யாழி, காமதேனு, பொன்மான் வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது. சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் ஏப்.21, அடுத்த நாள் தேரோட்டமும் நடைபெறுகிறது. ஏப்.23 தீா்த்தவாரியுடன் நிறைவடைகிறது.
கள்ளக்குறிச்சி, சங்கராபுரத்தில் உள்ள தனியார் மஹாலில் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் அதிமுக தேர்தல் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான மோகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்தும் பிரச்சார வியூகம் குறித்தும் பல்வேறு விதமான ஆலோசனைகளையும் முன்னாள் அமைச்சர் மோகன் வழங்கினார்.
மன்னார்குடி ஜேசி சங்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி பேருந்து நிலையத்தில் நேற்று (29/3/24) மாலை நடைபெற்றது. இதில் ஜே சி தலைவர் வினோத் தலைமை வகித்தார். வட்டாட்சியர் மகேஷ் முன்னிலை வகித்தார் கோட்டாட்சியர் கீர்த்தனாமணி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் (ம) செல்பி ஸ்டான்டு (ம) வாக்காளர் விழிப்புணர்வு வீடியோ படக்காட்சி ஆகியவற்றை தொடங்கி வைத்தார். ஜே.சி செயலாளர் கருணாகரன் நன்றி கூறினார்.
கிருஷ்ணகிரியில், பெங்களூரு ரோடு அருகே அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு நேற்று (மார்ச் 29) காலை 7 மணி அளவில் சிலுவைப்பாதை நடைபெற்றது. பின் மாலை 6:30 மணி அளவில் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் ஆலயத்திற்கு வருகைபுரிந்து ஆராதனையில் பங்கேற்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ். இளங்கோவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தேர்தல் ஆணையம் மோடியின் கொத்தடிமை கைப்பாவையாக செயல்படுகிறது. ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வாக்களர்களுக்கு கொடுக்க பல கோடி ரூபாய் சேலைகளை குடோனில் பதுக்கியுள்ளார். எனவே ஈரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.