India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புலியூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (75). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் வெளியே சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை அப்பகுதி ஏரியில் கிருஷ்ணனின் உடல் மிதப்பதை கண்ட அப்பகுதியினர் அவரின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளா் வழக்குரைஞா் கே.பாலு தனது சொத்து விவரத்தை தெரிவித்துள்ளாா். இதில் தனது பெயரில் ரூ. 1 கோடி 63 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகள் வங்கிகளில் இருப்புத் தொகை ரூ.1.58 லட்சம், தனது மனைவி பெயரில் ரூ. 2 கோடி 12 லட்சம் 49 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துகளும் மேலும் தனது பெயரில் ரூ. 42 லட்சம் கடன் உள்ளதாகவும் வேட்புமனு உறுதி மொழி பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக திருமணம் பத்திரிகை அடிப்பது போல் பத்திரிகை அடித்து பொதுமக்களை வாக்களிக்க வருமாறு அழைப்பிதழ் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் மதுரையில் பத்திரிகையில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் மக்களவை தேர்தல் திருவிழாவில் தாங்கள் தங்கள் சுற்றமும் வருகை தந்து தவறாமல் வாக்குகளை பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், நாகையில் இன்று பாஜக நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ்-க்கு ஆதரவாக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்கிறார். நாகை அவுரித்திடலில் பகல் 12 மணிக்கு மாநில தலைவர் வருகை தர உள்ளதாக கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 30 இன்று நாடாளுமன்றத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு 100 சதவீத வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கிராமிய கலை குழுவினருடன் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி தர்மபுரி உழவர் சந்தையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்காளர் கையேடுகளை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார் எனது வாக்கு விற்பனைக்கு இல்லை தெரிவித்தனர்.
விருதுநகர் மதுரை சாலையில் உள்ள கேவிஎஸ் மேனேஜிங் போர்ட் பொருட்காட்சி மைதானத்தில் கே வி எஸ் 76 ஆவது பொருட்காட்சி துவக்க விழா நேற்று நடைபெற்றது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை வகித்து பொருட்காட்சியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் மாதவன், பள்ளி செயலாளர் கார்த்திகேயன், செயலாளர் முரளிதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நீலகிரியில் வருகிற மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் வாக்கு செலுத்த ஏதுவாக வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஊட்டியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை இன்று (மார்ச் 30) நீலகிரி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான மு.அருணா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அவருடன் துறை அலுவலர்கள் சென்றனர்.
திருச்சி ராம்ஜி நகர் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (18) இவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் இளம்பெண் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்துகொண்டு நேற்று தண்ணீர கேட்பது போல் சென்று பலாத்காரம் செய்ய முயன்றார். இளம் பெண் சத்தம் கேட்டு பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் வாலிபர் தப்பி ஓடினார்.புகாரின் பேரில் கன்டோன்மென்ட் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.
கடலூர் மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கான ஒருங்கிணைந்த பள்ளி சார்பில் சிறப்பு எழுத்தறிவு திட்ட தேர்வு நடந்தது. இங்கு 40 சிறைவாசிகள் கற்போராக பயின்று வருகின்றனர். கடந்த 6 மாதங்களாக அவர்களுக்கு சிறப்பு ஆசிரியர் மூலம் எழுத்தறிவு பயிற்சி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 40 சிறைவாசிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைத்து சிறைவாசிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
ராமநாதபுரம் பட்டணம் காத்தான் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ராமநாதபுரம் சட்டமன்றத்திற்குட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக, அமமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.