India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் 39 தொகுதிகளில் வருகின்ற ஏப்ரல்.19 அன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் அனைவரும் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. ஏப்ரல் 19 அன்று அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
அருப்புக்கோட்டை அருகே குல்லம்பட்டியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (24). இந்நிலையில் நேற்று சத்தியமூர்த்தி தனது நண்பர் ராம்குமார் என்பவர் உடன் பைக்கில் அருப்புக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ராமலிங்காமில் அருகே பைக் நிலை தடுமாறி கீழே விழுந்து இருவரும் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
திருச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் கருப்பையா இன்று காலை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மலைக்கோட்டை பகுதியில் உள்ள சின்ன கடை வீதி, பெரிய கடை வீதி பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது மலைக்கோட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலுக்கு ரோப் கார் வசதி செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தார்.
திருப்பத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராய விற்பனை நடப்பதாக மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜானுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட தீவிர குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் மூன்று நபர்களை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் எச்சரித்துள்ளார்.
வந்தவாசி அருகே தெய்யார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மெய்யப்பன் வீட்டில் நேற்று முன் தினம் பூட்டியிருந்த வீட்டில் பின்பக்க கதவை உடைத்து தங்க நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் நேற்று செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் கிராமத்தை சேர்ந்த கல்பனா, காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த மல்லிகா ஆகிய இரண்டு பெண்களை நகை திருடிய வழக்கில் தெள்ளார் போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் சலூன் கடை நடத்தி வருபவர் ஆண்டியப்பன். இவருக்கு மகேஷ் என்பவரின் மனைவியுடன் தொடர்பு இருந்ததால் மகேஷ் கடந்த 2018 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக மகேஷின் அண்ணன் குமாரசாமி நேற்று இரவு ஆண்டியப்பனை கத்தியால் குத்தியுள்ளார் .இதில் காயமடைந்த ஆண்டியப்பன் இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
இன்று சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார் தடா பெரியசாமி.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த தடா பெரியசாமி, தற்போது சிதம்பரம் தொகுதிக்கு சீட் கேட்டு கொடுக்காததால் அதிமுகவில் இணைந்தார் என கூறப்படுகிறது.பாஜகவில் பட்டியல் அணி மாநிலத் தலைவராக இருந்தார் தடா பெரியசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் எம்.பி தொகுதிக்குப்பட்ட கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் பரஞ்ஜோதி, சிவபதி ஆகியோர் வாக்கு சேகரித்தனர். வழியெங்கும் அவருக்கு அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டத்தில் கரட்டுப்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் காராப்பாடியை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு அரசு வழிகாட்டி மதிப்பீடு இல்லாததால் பல முறை மனுக்கள் கொடுத்தும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்துள்ளனர்.
மதுரை: தமிழ்நாட்டில் 9 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி உள்ளது. இந்நிலையில் கரூர் பரமத்தி, தருமபுரி, சேலம் ஆகிய இடங்களில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் வாட்டி வதைத்தது. மேலும், திருச்சி, வேலூர், திருத்தணி, மதுரை நகர், மதுரை விமான நிலைய பகுதிகளில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. இதனால், பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.