Tamilnadu

News March 17, 2024

தர்மபுரி அருகே சோகம்

image

பாலக்கோடு அடுத்த கோவிலூரான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் 35. இவர் மனைவி தெய்வானை. குடிப்பழக்கம் உடைய கணேசனை கண்டித்து கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதில் மணமுடைந்த கணேசன் கொசு மருந்து குடித்து மயங்கி நிலையில் கிடந்தார். அவரை தர்மபுரி ஜி.ஹெச்-சுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். பாலக்கோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 17, 2024

ரத்து: திருப்பத்தூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததால் 18.03.2024 நாளை நடைபெறவிருந்த மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 17, 2024

மீண்டும் மாணிக்கம் தாகூர் போட்டி?

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே விருதுநகரில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள எம்பி மாணிக்கம் தாகூருக்கு மீண்டும் விருதுநகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ஆதரவாக தேர்தல் களப்பணியை காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக துவங்கியுள்ளனர்.

News March 17, 2024

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையால் புதிதாக அலைபேசி எண் (8525852636) அறிமுகப்படுத்தப்பட்டு தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்களோ அல்லது சம்மந்தப்பட்ட நபர்களோ உண்மைக்கு புறம்பான செய்தியின் மீது நடவடிக்கை எடுக்க மேற்கண்ட அலைபேசி எண்ணில் புகார் அளிக்க காவல்துறை சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News March 17, 2024

திருப்பூரில் விவசாயிகள் சார்பில் பேரணி

image

திருப்பூர்,பல்லடம் சாலை லட்சுமி திருமண மண்டபத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை இன்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை பேரணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடைகளில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் நிலக்கடலை எண்ணெய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.

News March 17, 2024

காஞ்சி: குழப்பத்தில் தேர்தல் பறக்கும் படை 

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் அண்ணா பேருந்து நிலையம் எதிரில் இன்று மாலை 5 மணிக்கு தமிழர் விடுதலைக் கட்சியின் சார்பில் மக்களுக்காக அரசா? மாபெரும் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு பொதுக்கூட்டம் நடத்தி வருவது பெரும் குழப்பத்தில் தேர்தல் அதிகாரிகள் உள்ளனர். இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

News March 17, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு, தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் C-VIGIL என்ற தொலைபேசி செயலி மூலம் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கலாம் என தெரிவித்தார்.

News March 17, 2024

திருச்சியில் அதிரடி சோதனை

image

திருச்சி மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்கவும் , அரசியல் கட்சிகள் பரிசு பொருட்களை தடுக்கவும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் இந்நிலையில் திருச்சி குடமுருட்டி சோதனை சாவடியில் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகன ஓட்டிகளிடம் வாகனங்களில் முன்புறமுள்ள கட்சி கொடிகளை அகற்ற அறிவுறுத்தினர்.

News March 17, 2024

ஈரோடு மக்களவை தொகுதியில் 15 இலட்சம் வாக்காளா்கள்

image

ஈரோடு மக்களவை தொகுதியில் மொத்தம் 15,28,426 வாக்காளா்கள் உள்ளனா். இதில் ஈரோடு மக்களவை தொகுதிக்கு உட்பட்ட குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் 2,55,717 பேர், ஈரோடு கிழக்குத் தொகுதியில் 2,30,470 பேர், ஈரோடு மேற்கு தொகுதியில் 2,95,773 பேர், மொடக்குறிச்சி தொகுதியில் 2,27,966 பேர், தாராபுரம் தொகுதியில் 2,58,819 பேர், காங்கயம் தொகுதியில் 2,59,681 பேர் என மொத்தம் 15,28,426 வாக்காளா்கள் உள்ளனா்.

News March 17, 2024

நாட்டுதுப்பாக்கி மற்றும் கரி மருந்து பறிமுதல்  

image

வேலூர், பேரணாம்பட்டு மொரசப்பள்ளி கிராமத்தில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்த பிச்சாண்டி என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கி மற்றும் கரி மருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்த பேரணாம்பட்டு வனத்துறையினர் பிச்சாண்டியை பேரணாம்பட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!