India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி இன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, பிக்கிலி, கொல்லப்பட்டி, புதுகரம்பு போன்ற இடங்களில் பொதுமக்களிடத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஊர்மக்கள் பூக்களை தூவி வரவேற்பு கொடுத்தனர்.
நீலகிரியில் பறக்கும்படையை சேர்ந்த கீதா என்ற அலுவலரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 25ம் தேதி நீலகிரி மக்களவை தொகுதி வேட்பாளர் ஆ.ராசா எம்பியின் வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது, சரிவர சோதனை செய்யவில்லை என புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று பறக்கும் படை அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய 3 தொகுதிகளிலும் தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக தேவையான ஏற்பாடுகளை செய்ய போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று உத்தரவிட்டு உள்ளார் சென்னையில் மட்டும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாநிலம் முழுவதும் 1½ லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மக்களவை தேர்தலில், வேலூர் தொகுதியில் I.N.D.I.A கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று(மார்ச் 30) அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விருபாட்சிபுரம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம், திருவாடானை தாலுகா சோளியக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு சொந்தமான கருவாட்டு கம்பெனியில் நேற்று(மார்ச் 29) இரவு திடீரென தீ பற்றியுள்ளது. தகவல் அறிந்த திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையிலான குழுவினர், விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து நீண்ட நேர போராட்டத்திறகு பின் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது.
பழனி முருகன் கோயிலில் இன்று பக்தர்கள் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்துள்ளனர். மலை மீது ரூ.100 கட்டணம் தரிசன வழியில் இரண்டு மணி நேரமும் நேரமும், கட்டணமில்லா பொது தரிசனம் வழியில் மூன்று மணி நேரம் காத்திருந்து முருகனை தரிசனம் செய்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் விச்சூர் கிராமம், S.P.நகர் பகுதியில் அரசு மானியத்துடன் வழங்கக்கூடிய, லாரி இன்ஜின்களுக்கு பயன்படுத்தும் கருப்பு ஆயிலை பதுக்கி கள்ள சந்தையில் விற்பதாக குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரிகளுக்கு நேற்று(மார்ச் 29) தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தனிப்படை போலீசார் சுமார் 4.38 லட்சம் லிட்டர் ஆயிலை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.
ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சி வேல் தலைமையிலான பறக்கும் படையினர் மையனூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு நாட்டுத் துப்பாக்கி கொண்டு வேட்டையாடிய சில குழுவினர், அதிகாரிகளை பார்த்து பொருட்களை விட்டுச் சென்றனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து துப்பாக்கி, தோட்டா, 6 பறவைகளை மீட்டனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் துறையின் சார்பாக மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் நேற்று இரவு வாஞ்சுயூரில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், அங்கு பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் பணி புரிகிறார்களா சரியான நேரத்திற்கு பணிக்கு வருகிறார்களா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் அடுத்த வெள்ளைகேட் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ லட்சுமி குபேரர் கோவிலில் பிரபல சீரியல் நடிகை லட்சுமி வருகை தந்து இன்று சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் பிரபல சீரியல் நடிகைக்கு சிறப்பான வரவேற்பும் கோவில் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ஏராளமான குவிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்
Sorry, no posts matched your criteria.