Tamilnadu

News April 1, 2024

பெரம்பலூர்: லாரி விபத்தில் ஆசிரியர் பலி!

image

குன்னம், அசூர் கிழக்கு தெருவை, சேர்ந்த சூர்யா (20) இவர் ஓட்டுநர் வேலை செய்து வரும் நிலையில் டிப்பர் லாரியில் 4 ரோடு அருகில் உள்ள, சூர்யா ஏஜென்சில் ஜல்லி ஏற்றிக்கொண்டு ஆலம்பாடி நோக்கி சென்று கொண்டுள்ளார்.டிப்பர் லாரியை கவனக்குறைவாக ஒட்டி சென்றதால், எதிரே உள்ள தனியார் உணவு விடுதி முன்பு நின்று கொண்டிருந்த ஆசிரியர் ஜூனோஜா 31, என்பவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News April 1, 2024

தென்காசி: கலெக்டர் அதிரடி ஆய்வு 

image

இலஞ்சி டிடிடிஏ துவக்க பள்ளியில்‌ நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையத்தின் முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று காலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் நேரடியாக சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் வாக்குச்சாவடிக்கான வசதிகள், வாக்காளர்களுக்கான தேவைகள் குறித்த விபரங்களை கேட்டறிந்தார்.

News April 1, 2024

நாமக்கல் அருகே எம்எல்ஏவிற்கு திடீர் நெஞ்சு வலி 

image

நாமக்கல் : சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். கே.பொன்னுசாமி நேற்று காலை 6 மணியளவில் திடிர் மாரடைப்பு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேந்தமங்கலம்(எஸ். டி) சட்டபேரவையில் கடந்த 2021 திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். தற்போது காரவள்ளியில் உள்ள தனது மகன் வீட்டில் வசித்துவருகின்றார்

News April 1, 2024

தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

image

நீலகிரி மாவட்ட கோத்தகிரி கேர்பெட்டா கிராமத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு செல்போன் டவர் கோபுரம் அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மாவட்ட ஆட்சியர் டவர் அமைக்க அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து வருகின்ற மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

News April 1, 2024

போஸ்டர்கள் ஒட்டியவர்கள் மீது வழக்கு பதிவு

image

அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் நேற்று மார்ச் 31 காந்திநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அருப்புக்கோட்டையில் எஸ்.பி.கே 41வது பொருட்காட்சி நடைபெற அரசு தடை விதித்திருப்பது தெரிந்தும் அரசு உத்தரவை மீறி பொருட்காட்சி நடைபெற உள்ளது என சிலர் போஸ்டர் ஒட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து போஸ்டர் ஒட்டியவர்கள் மீது டவுன் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News April 1, 2024

கிருஷ்ணகிரி: 100 பவுன் நகை, ரூ.1.2 கோடி பணம் பறிமுதல்

image

தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின்போது காரில் 10 லட்சம் ரூபாய் சிக்கிய நிலையை வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பெயரில் ஓசூரில் பிரஷர் லோகேஷ் குமார் என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. பல மணி நேரம் நடத்தப்பட்ட சோதனைக்கு பிறகு லோகேஷ் குமார் வீட்டில் இருந்து 100 பவுன் தங்க நகை மற்றும் 1.2 கோடி பணம் பறிமுதல் செய்து அதிகரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 1, 2024

இன்று முதல் வீடு தேடி வரும் பூத் சிலிப்

image

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க திருவண்ணாமலை தொகுதி வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்து பணியை தொடங்கி வைத்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஆரணி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மு. பிரியதர்ஷினி மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News April 1, 2024

ரயில் முன் பாய்ந்து இளம் பெண் தற்கொலை

image

வேலூர் அருகே மேல்பட்டியை சேர்ந்தவர் சசிலேகா (19) இவர் அதே பகுதியில் வசித்து வரும் வாலிபரை காதலித்து வந்த நிலையில் உறவினரான தாய்மாமனை பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். இன்று (ஏப்.1) மேல்பட்டி வளத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ஆலப்புழா – சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 1, 2024

திண்டுக்கல் அருகே விபத்து: 2 பேர் பலி

image

பழனி அருகே உள்ள மானூர் பைபாஸ் சாலையில் நேற்று இரண்டு இருசக்கர வாகனங்கள்
நேருக்கு நேர் மோதியது. இதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் ஒருவர் படுகாயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இவ்விபத்து குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 1, 2024

தூத்துக்குடி அருகே விபத்து: ஒருவர் பலி

image

குலசேகரப்பட்டினத்தை சேர்ந்தவர் மாதேஷ் .நேற்று இவர் தனது நண்பர் விஜய்யுடன் இருசக்கர வாகனத்தில் பரமன்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையின் ஓரத்தில் இருந்த அறிவிப்பு பலகையின் மீது பைக் மோதியதில் மாதேஷ் சம்பவ இடத்திலே பலியானார். விஜய் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!