Tamilnadu

News April 1, 2024

திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம் 

image

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் இன்று INDIA கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மலையரசன் தனது தேர்தல் பிரச்சாரத்தை திறந்தவெளி வேனில் நின்றவாறு வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

News April 1, 2024

ஈரோட்டில் ரூ.2.60 கோடி பறிமுதல்

image

ஈரோடு மாவட்டத்தில் மக்களவை தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் இன்று காலை வரை ரூ.2 கோடியே 60 லட்சத்து 97 ஆயிரத்து 386-ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதில் உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு , 1 கோடியே 71 லட்சத்து 89 ஆயிரத்து 595 ரூபாய் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.

News April 1, 2024

நுகர்வோர் ஆணைய தலைவரின் காரில் ரூ.80,200 பறிமுதல்

image

திருப்பூர், காங்கயம் ரோடு புதுப்பாளையம் தனியார் பள்ளி அருகே தேர்தல் கண்காணிப்பு குழு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணைய தலைவர் சித்ரா என்பவரின் காரில் சோதனை நடத்தினர். சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி ரொக்க பணம் ரூ.80 ஆயிரத்து 200 வைத்திருந்தால் அப்பணத்தை பறிமுதல் செய்தனர்.

News April 1, 2024

விழுப்புரம் : தீவிர வாக்கு சேகரிப்பில் அதிமுக வேட்பாளர்

image

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டாரத்தில் உள்ள கொளத்தூர் ஊராட்சி , பெரியசெவலை பகுதிகளில் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் காந்தலவாடி ஜெ. பாக்யராஜுக்கு ஆதரவாக திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய கழக செயலாளர் (தெற்கு) ராமலிங்கம் தலைமையில் இன்று வாக்கு சேகரித்தார். உடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

News April 1, 2024

திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த துணை சேர்மன்

image

புளியங்குடி நகர திமுக சார்பில் நகர்மன்ற துணை தலைவர் அந்தோணிச்சாமி தலைமையில் இன்று புளியங்குடி 3, 4, 5, 6, 7 ஆகிய வார்டுகளில் தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராணிஸ்ரீகுமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கோரி வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த தேர்தல் பரப்புரையில் அவைத்தலைவர் வேல்சாமி பாண்டியன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 1, 2024

தி.மலை: ரேண்டமைஸேன் செய்யும் பணி

image

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலர கூட்டரங்கில் 2024 மக்களவை தேர்தலையொட்டி  தி.மலை மற்றும் ஆரணி மக்களவை தொகுதிகளுக்கு கூடுதலாக மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் ரேண்டமைஸேன் செய்யும் பணி இன்று (01.04.24) ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

News April 1, 2024

திருச்சியில் 100% வாக்களிக்க ராட்சத பலூன்

image

நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது. இதனை தேர்தல் அலுவலர் பறக்க விட்டார். உடன் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மற்றும் தேர்தல் அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.

News April 1, 2024

சுயேட்சை வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

image

திருச்சி பாராளுமன்ற சுயேட்சை வேட்பாளரான S. தாமோதரன் இன்று புதுக்கோட்டை லட்சுமி நகரில் உள்ள அலுவலகத்தில் கேஸ் ஸ்டவ் சின்னத்தினை பொறுப்பாளர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கி, இயற்கை வளங்கள் பாதுகாத்து காக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். இதில் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

News April 1, 2024

திருப்பத்தூர்: சாராயம் கடத்தியவர் கைது

image

திருப்பத்தூர் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருப்பத்தூர் புதுப்பேட்டை மெயின் ரோட்டில், மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் திருப்பத்தூர் அருகே கோனேரிக்குப்பத்தை சேர்ந்த தேவராஜ் (47) என்பதும், சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தேவராஜை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

News April 1, 2024

தி.மலையில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி

image

தி.மலை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கினை இன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் & போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவர்களால் திறக்கப்பட்டு, தி.மலை & ஆரணி பாராளுமன்ற தொகுதிகளுக்கு கூடுதலாக மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணியினை தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.

error: Content is protected !!