Tamilnadu

News April 3, 2024

கடலூரில் தங்கியுள்ள வாக்காளர் விபரங்கள் சேகரிப்பு

image

கடலூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட மந்தாரக்குப்பம், கங்கைகொண்டான், பழைய நெய்வேலி, மேல்பாதி, கீழ்பாதி,வடக்கு வெள்ளூர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கேரளா,திருப்பூர், உள்ளிட்ட மற்ற பகுதிகளில் வேலை செய்து வருகின்றனர்.அவர்கள் வேலை செய்யும் இருப்பிடம் குறித்து சேகரித்து வருகின்றனர். அவர்களிடம் தொடர்பு கொண்டு தங்கள் ஓட்டு எங்களுக்கே எனவும் தங்கள் வந்து போகும் செலவை ஏற்று கொள்வதாக கூறி வருகின்றன.

News April 3, 2024

தென்காசி: 2வது நாளாக சதத்தை கடந்த வெயில்

image

தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு வெயில் தாக்கம் முன்னதாகவே தொடங்கி கொளுத்துகிறது. கடந்த ஒன்றரை மாதமாக கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த ஆண்டின் முதல் வெப்ப “சதம்” பதிவு நேற்று ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 2) இரண்டாவது நாளாக வெயில் 100 டிகிரி கடந்தது. பிற்பகல் 3 மணிக்கு அதிகபட்ச வெப்ப பதிவு 100.94 டிகிரியாக உயர்ந்தது. சில பகுதிகளில் அனல் காற்று வீசியது.

News April 3, 2024

கோவை: மோசடியில் ஈடுபட்டவர் கைது

image

சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்தவர் உசைன் ஷெரீப்(40), செல்போன் வியாபாரி. இவரிடம், கடந்த 2024-இல் கோவை காந்திபுரத்தில் செல்போன் கடை நடத்தி வரும் ரகுமான் சுமார் 436 செல்போன்களை வாங்கிவிட்டு பணம் தராமல் ஏமாற்றியுள்ளார். பின் நேற்று உசைன் ஷெரீப் கோவை வந்து ரகுமானிடம் பணத்தை கேட்டபோது நண்பர்களுடன் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

News April 3, 2024

பட்டுக்கோட்டை: 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கு விழிப்புணர்வு

image

மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு கோலப்போட்டி பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று(ஏப்.3) நடந்தது. நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ தலைமை தாங்கினார். வட்டாட்சியர் சுகுமார் முன்னிலை வகித்தார். 40க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோலம் வரைந்தனர்.

News April 3, 2024

தேனி:டிடிவி துணைவியார் தேர்தல் பரப்புரை

image

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களான மீனாட்சிபுரம் அடைக்கப்பட்டனர் பொட்டல் களம் வினோபாஜி காலனி சிலமலை கரட்டுப்பட்டி சில்ல மரத்துப் பட்டி ராசிங்காபுரம் நாகலாபுரம் பகுதிகளில் இன்று தேனி பாராளுமன்ற தொகுதிக்கான தேசிய ஜனநாயக கூட்டணி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் டிடிவி தினகரனை ஆதரித்து அவரது துணைவியார் அனுராதா தினகரன் குக்கர் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்

News April 3, 2024

தி.மலை அருகே இருவர் கைது

image

சாத்தனூர் வனச்சரகம் பூ மலை காப்புக்காட்டில் வனச்சரக பணியாளர்கள் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காப்பு காட்டை ஒட்டி கிணற்றில் விழுந்த சிறிய புள்ளி மானை எடுத்து அறுத்து கூறு போட்டு கறியை விற்பனை செய்து கொண்டிருந்த இருவரை கைது செய்தனர். மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி இருவருக்கும் தலா 30 ஆயிரம் வீதம் மொத்தம் 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை செய்து விடுவித்தனர்.

News April 3, 2024

மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

image

ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், அனைவரும் 100% வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதனை ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

News April 3, 2024

மயிலாடுதுறை: கோவிலில் வழிபாடு

image

சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் எனும் குமர கோவிலில் பங்குனி மாத செவ்வாய்கிழமையை ஒட்டி நேற்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக முருகப் பெருமானுக்கு பால் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விசேஷ மலர் அலங்காரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

News April 3, 2024

சென்னை: இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

image

சென்னை, கதீட்ரல் சாலை அமராவதி ஓட்டல் முன்பு உள்ள சர்வீஸ் சாலை பாதாள சாக்கடை மேன்ஹோல் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இதனால், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் மேற்கண்ட இடத்தில் 7 நாட்களுக்கு பகல் மற்றும் இரவு நேரத்தில் சீரமைப்பு பணி நடைபெற உள்ளதால், இன்று(ஏப்.3) முதல் 7 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

News April 3, 2024

செங்கல்பட்டு:திமுக ஒன்றிய பெருந்தலைவர் மீது புகார்?

image

சித்தாமூர் திமுக ஒன்றிய செயலாளராகவும் சித்தாமூர் ஒன்றிய பெருந்தலைவராகவும் இருப்பவர் ஏழுமலை. இவர் மீது சித்தாமூர் ஒன்றியத்தில் உள்ள பெண் தலைவர்கள் பலர் ஒன்றினைந்து அடுக்கடுக்கான புகார்களை அரசு முக்கிய அலுவலர்களுக்கு நேற்று அனுப்பி வைத்தனர். அதில் அரசு முக்கிய திட்டங்களை அதிகார துஷ்பிரயோகம் செய்து தனக்கு வேண்டியவர்கள் மூலம் அதில் ஊழல் புரிவதாக புகார் அளித்துள்ளனர்.

error: Content is protected !!