India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு,தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் பெய்த கனமழையில் மேட்டுப்பாளையம்- குன்னூர் மலை ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு தண்டவாளங்கள் சேதமடைந்தன. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் முடிந்து 2 நாட்களுக்கு பின் இன்று முதல் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு,தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

சிவகாசியை சேர்ந்த 15 வயது சிறுமி பிளஸ் 1 படித்து வந்தார். இச்சிறுமி தனக்கு வயிறு வலிப்பதாக கூறியதால் அவரது தயார் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்ததில் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. விசாரணையில் முதலிப்பட்டியை சேர்ந்த ராஜகுமாரன் 23, சிறுமியுடன் பழகி கர்ப்பமாக்கியது தெரியவர மகளிர் போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதுகை மாவட்டத்தில், இன்றே (ஜன.04) கடைசி நாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1681 ஓட்டு சாவடி மையங்களிலும் புதிய வாக்காளர் சேர்ப்பு நடைபெற உள்ளது. இதில் விடுபட்ட வாக்காளர்கள், SIR படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம் எனவும் 18 வயது முடிந்தவர்கள் தங்களது பெயரை சேர்த்துக் கொள்ளலாம். இதனை பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

பெருந்துறை பகுதியைச் சேர்ந்தர் கருப்பசாமி. இவர் நேற்று மாலை ஈரோடு ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி எதிரே பைக்கில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, அரசு பேருந்து கருப்புசாமியின் மீது மோதியது. இவ்விபத்தில் படுகாயம் அடைந்த கருப்பசாமி-யை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவனையில் சேர்த்தனர். ஆனால், அவர் செல்லும் வழியிலே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

புதுகை மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமில் இதுவரை 28 முகாம்கள் நடந்துள்ளன. சராசரியாக ஒரு முகாமிற்கு 1400 பேர் பயனடைந்துள்ளனர். இம் முகாமில் ரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை, சிறுநீர் செயல்பாடு, பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் மார்பக புற்றுநோய் உள்ளிட்ட 17 சிறப்பு சிகிச்சை பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை மாவட்டத்தில் 40,888 பயன் அடைந்ததாக கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் அகரகீரங்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் நீக்கல் திருத்தம் குறித்த சிறப்பு முகாம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடர்பாக பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களை பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார்

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் <
Sorry, no posts matched your criteria.