Tamilnadu

News January 4, 2026

பெரம்பலூர்: முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

image

பெரம்பலூர் சங்குபேட்டையில், ஸ்ரீ முத்துமாரியம்மன் திருகோயில் மார்கழி மாதம் பௌர்ணமியையொட்டி நேற்று(ஜன.3) மகா தீபம் , சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைப்பெற்றது. இதில் பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், தேன், இளநீர், திருமஞ்சனம், ஜவ்வாது, உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து, வன்ன மலர்களால் அலங்கரித்து மாலை அணிவித்து சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனைகள் காண்பித்து பொதுமக்கள் வழிபட்டனர்.

News January 4, 2026

கிருஷ்ணகிரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

கிருஷ்ணகிரி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

News January 4, 2026

செங்கை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

செங்கல்பட்டு மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

News January 4, 2026

BREAKING புதுக்கோட்டை: இளைஞர் துடிதுடித்து பலி

image

அறந்தாங்கி அடுத்த விச்சூர் அருகில் உள்ள ஒட்டாங்கரை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சுமன் (22). இவர் இன்று காலை தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய போது தாழ்வாக சென்ற உயர் மின்னழுத்த கம்பியை, கேட்ச் பிடிக்க சென்ற போது பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News January 4, 2026

கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் முதல்வர்

image

கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை (ஜன.5) சென்னையில் தொடங்கி வைக்கிறார். ‘உலகம் உங்கள் கையில்’ என்ற பெயரில் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. முதல் கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல், ஏசர், ஹெச்பி போன்ற மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது.

News January 4, 2026

அரியலூர்: மாற்றுத்திறனாளி நலத்துறை ஆணையர் ஆய்வு

image

அரியலூர் மாவட்டம், 149-அரியலூர் சட்டமன்ற தொகுதி மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில், நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாமினை, சிறப்பு தீவிரத் திருத்த (SIR) வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆணையர் லட்சுமி, மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமியுடன் ஆய்வு மேற்கொண்டார்.

News January 4, 2026

FLASH: கள்ளக்குறிச்சி ஆட்சியரின் X- பக்கம் HACKED!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 15 மணி நேரமாக அதிகாரபூர்வ பக்கத்தில், ஆன்லைன் சூதாட்டம் குறித்த பதிவுகள் பகிரப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அதிகாரிகள் ஆட்சியரின் எக்ஸ் தள பக்கத்தை மீட்க முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 4, 2026

புத்தாண்டையொட்டி குமரியில் மது விற்பனை அதிகரிப்பு

image

குமரி மாவட்டத்தில் 97 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. புத்தாண்டையொட்டி குமரி மாவட்டத்தில் மது விற்பனை அதிகரித்தது. டிசம்பர் 31.ம் தேதி ரூ.4,32,94,260, ஜனவரி 1.ம் தேதி ரூ4,08,2640, ஜனவரி3.ம் தேதி ரூ.3,22,16,650 என மொத்தம்  ரூ11 கோடியே 63 லட்சத்து 13 ஆயிரத்து 550க்கு மதுபானங்கள் குமரியில் விற்பனையாகி உள்ளது. பீர் வகைகளை விட மதுபான வகைகளே அதிகம் விற்பனையானது என டாஸ்மாக் அதிகாரிகள் நேற்று கூறினர்.

News January 4, 2026

பெரம்பலூர்: தாயுமானவர் திட்டம் மூலம் ரேசன் பொருள்

image

பெரம்பலூர் மாவட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் வீடுகளுக்கே சென்று, ரேசன் பொருட்கள் வழங்கும்” தாயுமானவர்” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இன்று (ஜன-4) முதல் 3 நாட்கள் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

News January 4, 2026

ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக திருமணத் தகவல் செயலி குறித்து எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. திருமணத்திற்காகக் காத்திருப்பவர்கனே இவர்களின் இலக்கு.
அவர்கள் இனிமையான வார்த்தைகளால் பேசுவார்கள். திருமணம் நடக்கும் என்று நம்ப வைப்பார்கள். அவசரம் என்று கூறி பணம் கேட்பார்கள். இதுபோன்று கூறிக்கொண்டு இருப்பவர்களை நம்ப வேண்டாம் என்று ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது.

error: Content is protected !!