India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆண்டிபட்டி, டி.பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராம்குமார். இவரிடம் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை சேர்ந்த சந்திரசேகரன் (77) என்பவர், தான் ஓய்வு பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி என்று ராம்குமாரிடம் அறிமுகமாகி அரசு வேலை வாங்கி தருவதாக, ஆவணத்தை போலியாக கொடுத்து ரூ.2.50 லட்சம் பணம் பெற்றுள்ளார். இந்த மோசடி சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

BOI வங்கியில் 514 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். 2. மாத சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். 3. விருப்பமுள்ளவர்கள் <

BOI வங்கியில் 514 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். 2. மாத சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். 3. விருப்பமுள்ளவர்கள் இங்கே க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 4. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.05. சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ண வேண்டாம். டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

BOI வங்கியில் 514 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். 2. மாத சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். 3. விருப்பமுள்ளவர்கள் <

தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (40) என்பவர் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள வீட்டில் மின்சார வேலை பார்ப்பதற்காக சென்றபோது அங்கு உள்ள சிறுமியிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் வழக்கு பிரிந்து அவரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓசூர், மத்திகிரி, போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் வரும் ஜன.6ஆம் தேதியும் தண்டரை, தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் ஜன.8 ஆம் தேதியும் மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பின்தடை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை அமலில் இருக்கும். ஷேர் பண்ணுங்க.

தி.மலை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க டோக்கன் வழங்கப்படுகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் அனைவருக்கும் டோக்கன் வந்து சேரும். மேலும், டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரம் பிரகாரம் சென்று சிரமம் இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பான ரூ.3000, முழு கரும்பு, வேஷ்டி, சேலை, பச்சரிசி உள்ளிட்டவற்றை வாங்கிக்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

வாணியம்பாடி தில்லைநாதன், ஆதவன் நாட்டிய பள்ளி, மற்றும் சிகரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து போதை விழிப்புணர்வு பரதநாட்டியம் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு திமுக நகர கழக செயலாளர் சாரதி குமார் இன்று (ஜன.4) பரிசுகள் வழங்கினார். உடன் பள்ளி செயலாளர் வெற்றி வேலன், தலைவர் திரு.கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 699 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் உள்ள 4,55,498 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் இன்று (ஜன.5) முதல் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் இன்னும் சில நாட்களில் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்றும் சில தினங்களுக்குள் பொங்கல் பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கிளியனூர் அருகே, திண்டிவனம் – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த புதுச்சேரியைச் சேர்ந்த ஹரீஷ் கர்ணா என்ற இளைஞர், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்த நண்பர்கள் இருவர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து கிளியனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.