Tamilnadu

News April 18, 2024

தஞ்சாவூர்: 2,661 மது பாட்டில்கள் பறிமுதல்; 38 பேர் கைது

image

தேர்தல் நேரத்தில் குற்றச் சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் மதுவிலக்கு அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. அதன்படி, ஏப்.15ம் தேதி முதல் நேற்று(ஏப்.17) வரை நடந்த சோதனையில் 2,661 மது பாட்டில்கள், 4 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 38 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

News April 18, 2024

1788 வாக்குச் சாவடிகளில் நாளை வாக்குபதிவு

image

தேனி மக்களவைத் தொகுதியில் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம், மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 888 இடங்களில் மொத்தம் 1788 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நாளை (ஏப்.19) காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி 6 மணி வரை நடைபெற்றது.

News April 18, 2024

நீலகிரி: ஒரு குடம் தண்ணீர் 20 ரூபாய்!

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் மழையின்றி அணைகள் வறண்டு வருகின்றன. இந்த நிலையில் குன்னூர் நகர கடைகளுக்கு ஒரு குடம் தண்ணீர் ரூ.20-க்கு தினசரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக பலர் தங்களது கிணற்று நீரை தள்ளுவண்டியில் கொண்டு சென்று சப்ளை செய்வதால், வியாபாரிகளுக்கு ஓரளவு பயனுள்ளதாக உள்ளது.

News April 18, 2024

ராமநாதபுரம் கலெக்டர் வேண்டுகோள்

image

நாளை (ஏப்.19) நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்கள், பிற மாவட்டங்கள், மாநிலங்களில் வசித்து வரும் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஓட்டுரிமை உள்ள வாக்காளர்கள் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். வாக்களிப்பது நமது உரிமை மட்டுமின்றி கடமையும் ஆகும் என ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News April 18, 2024

தந்தை, மகன் போதை தடுப்பு காவல் சட்டத்தில் கைது

image

மரக்காணம் அருகே போதைப்பொருள் பதுக்கி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 85 கிலோ எடை கொண்ட குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஈபி சாலையை சேர்ந்த ரவிச்சந்திரன் (58) மற்றும் அவரது மகன் அரவிந்த் குமார் (31) ஆகியோரை கைதுசெய்தனர். ஆட்சியர் உத்தரவின்பேரில் இருவரும் தடுப்பு காவல் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டனர்.

News April 18, 2024

திருச்சி அரசு மருத்துவமணையில் புதிய வார்டு தயார்.

image

திருச்சி வெப்பநிலை உச்சத்தில் இருந்து வருகிறது. இதனால் பல்வேறு விதமான நோய்களுக்கு மக்கள் ஆளாகி வருகிறார்கள். அளவுக்கு அதிகமான வெப்பநிலையை உடல் தாங்கிக் கொள்ள முடியாத போது தலைவலி சோர்வு மயக்கம் போன்றவற்றால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க ,படுக்கை வசதியுடன் கூடிய புதிய வார்டு தயார் நிலையில் உள்ளது. என்று திருச்சி தலைமை மருத்துவர், செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.

News April 18, 2024

விருதுநகர் மாவட்டத்தில் 188 பதட்டமான வாக்குச்சாவடிகள்

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் பதற்றமானவை என 188 வாக்குச்சாவடிகள் தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் 188 பதட்டமான வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவினை நேரடியாக கண்காணிக்கும் வகையில் 148 தேர்தல் நுண் பார்வையாளர்களும் கூடுதலாக 26 தேர்தல் நுண் பார்வையாளர்களும் என மொத்தம் 174 தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஜெயசீலன் தகவல் தெரிவித்துள்ளார்.

News April 18, 2024

பசுமை வாக்குச்சாவடி: திருவள்ளூர் கலெக்டர் ஆய்வு

image

திருவள்ளூர் நகராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளியில் மக்களவைத் தேர்தல்-2024 ஐ முன்னிட்டு நேற்று (ஏப்ரல் 16) திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கான பசுமை வாக்குச்சாவடி மையம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலரும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருமான பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

News April 18, 2024

இன்று ஒரு நாள் இலவசம்

image

மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில், குடைவரை கோவில்கள், ஒற்றைக்கல் ரதங்கள், புடைப்பு சிற்ப தொகுதிகள் உள்ளிட்ட கலைப் படைப்புகள், நரசிம்மவர்ம பல்லவர்களால் செதுக்கப்பட்டவை. இன்று(ஏப்.18) உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சுற்றுலா பயணிகள், பார்வையாளர்களுக்கு இன்று ஒருநாள் இலவசமாக பார்வையிடலாம் என மத்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மாலை நட்சத்திர கலை சங்கமம் நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.

News April 18, 2024

 மழை பெய்தும் கண்மாய்களில் தண்ணீர் இல்லை

image

சிவகங்கை மாவட்டத்தில் மழை நீர் முழுமையாக பயன்படுத்தப்பட வில்லை. நீர் வரத்து கால்வாய்கள் சரிவர பராமரிப்பில்லாதது , ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் கண்மாய், குளங்களுக்கு நீர் வரத்து போதிய அளவில் இல்லை. எனவே கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கான வரத்து கால்வாய்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

error: Content is protected !!