India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி நேற்று முதல் 3 நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று போலீஸார் நேற்று நடத்திய சோதனையில் 16 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 506 மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் குழந்தைகளுக்கான 2024-2025 ஆம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25% இட ஒதுக்கீட்டில் நுழைவு நிலை வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கு (www.rte.tnschools.gov.in) என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி வெயில் வெளுத்து வாங்கு வரும் நிலையில், நேற்று(ஏப்.17) மட்டும் 14 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 101.12 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்தாலும், பல இடங்களில் வெயிலின் தாக்கல் அதிகரித்தே காணப்படுவதால் முதியவர்கள், குழந்தைகள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி வெயில் வெளுத்து வாங்கு வரும் நிலையில், நேற்று(ஏப்.17) மட்டும் 14 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்துள்ளது. இதன்படி மதுரை மாவட்டத்தில் நேற்று 103.46 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்தாலும், பல இடங்களில் வெயிலின் தாக்கல் அதிகரித்தே காணப்படுவதால் முதியவர்கள், குழந்தைகள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 24 வகையான சிவில் சர்வீஸ் பதவிகளுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த 9 ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதில் திண்டுக்கல் சுபதர்ஷினி(30) 83 ஆவது இடம்,ஆசிக்உசேன்(25) 845 ஆவது இடம், ஓவியா 796 ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி வெயில் வெளுத்து வாங்கு வரும் நிலையில், நேற்று(ஏப்.17) மட்டும் 14 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்துள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று 106.52 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்தாலும், பல இடங்களில் வெயிலின் தாக்கல் அதிகரித்தே காணப்படுவதால் முதியவர்கள், குழந்தைகள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையில் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு வரும் 20 ஆம் தேதி தூத்துக்குடி ஜேஎம்சி கிரிக்கெட் பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சிவகுமார் நேற்று தெரிவித்துள்ளார்.
நெல்லை மக்களவைத் தொகுதியில் 1,197 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும், கூடுதலாக பாதுகாப்பு படையினரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்றைய தின (ஏப்.18) நிலவரப்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து பதற்றமான வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மக்களவை தொகுதிக்குட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 7 லட்சத்து 97 ஆயிரத்து 201 ஆண்கள், 8 லட்சத்து 25 ஆயிரத்து 529 பெண்கள், 219 மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட 16 லட்சத்து 22 ஆயிரத்து 949 வாக்காளர்களாக உள்ளனா். வாக்காளா் பட்டியலில் 18 முதல் 19 வயதுக்கு உள்பட்ட பிரிவில் 14,193 ஆண்கள், 11,602 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 4 என மொத்தம் 25,799 இளம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
மதுரை மக்களவை தொகுதி வாக்குப்பதிவிற்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்குச்சாவடிகளிலிருந்து அரசியல் கட்சியினர் 200 மீட்டர் தூரம் தள்ளி இருக்க வேண்டும் என்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளை வலியுறுத்தும் வகையில் மதுரை மேல வெளி வீதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வரும் சாலையில் மாநகராட்சி ஊழியர்கள் இன்று பெயிண்டால் அடையாளபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.