India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 24 பேர் ஏப்.14 பழனி முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் விழுப்புரம் செல்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2:30 மணியளவில் பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்தில் வேன் சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

குலசேகரம் பெனியேல் பகுதியைச் சேர்ந்தவர் ரப்பர் பால்வெட்டுத் தொழிலாளி ஜகவர். இவரது மூன்றரை வயது மகன் ஜெல்டோன் ஜே. ஆல்பன் வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்தார். அப்போது தோட்டத்திலிருந்த பாம்பு குழந்தையைக் கடித்துள்ளது. உடனே தக்கலை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்ற நிலையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடி மாவட்ட விளையாட்டு துறை ஒன்றிய செயலாளர் பொன் தனுசுவின் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று அதிமுக மற்றும் பாமக, பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

குலசேகரம் பெனியேல் பகுதியைச் சேர்ந்தவர் ரப்பர் பால்வெட்டுத் தொழிலாளி ஜகவர். இவரது மூன்றரை வயது மகன் ஜெல்டோன் ஜே. ஆல்பன் வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்தார். அப்போது தோட்டத்திலிருந்த பாம்பு குழந்தையைக் கடித்துள்ளது. உடனே தக்கலை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்ற நிலையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

ஆலங்குளம் அருகே மருதப்பபுரத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் உள்ள நாய் நேற்று கட்டை அவிழ்த்து தெருவில் சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த செல்லத்தாய் (80) என்ற மூதாட்டியை 20 இடங்களில் கடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அதே பகுதியில் 7 பேரை நாய் கடித்துள்ளது. அவர்கள் நெல்லை GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு.

குலசேகரம் பெனியேல் பகுதியைச் சேர்ந்தவர் ரப்பர் பால்வெட்டுத் தொழிலாளி ஜகவர். இவரது மூன்றரை வயது மகன் ஜெல்டோன் ஜே. ஆல்பன் வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்தார். அப்போது தோட்டத்திலிருந்த பாம்பு குழந்தையைக் கடித்துள்ளது. உடனே தக்கலை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்ற நிலையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.