Tamilnadu

News March 31, 2024

தூத்துக்குடி அருகே கோர விபத்து

image

சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் சேகர்.அவரது மனைவி நித்தியகலா,மகள் தீக்ஷித், மகன் ரித்திக் மற்றும் வனஜா,,கார்த்திக் ஆகியோர் காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து சென்னை திரும்பும் போது பழையகாயல் அருகே கார் எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியது. இதில் 6 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

News March 31, 2024

அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் திருக்கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து அதிக அளவில் அண்ணாமலையார் பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். இதனால் அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

News March 31, 2024

திருச்சி: 25 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

image

திருச்சி கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 25 நபர்களுடன் சட்ட விரோதமாக ஒன்று கூடி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தினர். மேலும், அனுமதி பெறாத வாகனங்களில் ஊர்வலமாக சென்று சட்டவிரோதமாக வாக்குகள் சேகரித்ததாக வேட்பாளர் ராஜேஷ், தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் பிரபு உள்ளிட்ட 25 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

News March 31, 2024

மயிலாடுதுறையில் கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு

image

மயிலாடுதுறையில் வாக்காளர் பட்டியிலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் தொடர்பான விவரங்களை பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வாக்காளர் தொடர்பு மையம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தேவையான விபரங்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News March 31, 2024

தேர்தலை புறக்கணிக்கும் பேனரால் பரபரப்பு    

image

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் சிங்காரக்கோட்டை ஊராட்சி S. பாறைப்பட்டியில் திமுக பிரமுகர்கள் மூவரின் அட்டூழியத்தால் நடைபெற இருந்த கோவில் திருவிழா தடை செய்யப்பட்டதால்  ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்து அப்பகுதியில் தேர்தல் புறக்கணிப்பு பேனரை வைத்துள்ளனர்.பேனர் வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 31, 2024

புதுக்கோட்டை: ஓபிஎஸ் மீது 3 பிரிவில் வழக்கு பதிவு

image

ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் ஓபிஎஸ் மீது அறந்தாங்கி காவல்நிலையத்தில் 3 பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெண்கள் ஆரத்தி எடுத்துபோது ஓபிஎஸ் பணம் வழங்கியதாக புகார் எழுந்தது. மேலும், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே கூட்டம் நடத்தியது உள்ளிட்ட காரணங்களால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

News March 31, 2024

தென்காசி: 6 பெண்கள் உட்பட 10 பேர் கைது

image

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் அப்பகுதியை சேர்ந்த சிலர் பழைய தீயணைப்பு நிலையம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலில் பேரில் வாசுதேவநல்லூர் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைத்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 6 பெண்கள் உட்பட 10 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News March 31, 2024

மனைவிக்கு வீடியோகால் செய்து கணவன் தற்கொலை

image

மதுராந்தகம் தாலுகா பவுஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் தாவூத்(42). இவர் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த
மேவளூர்குப்பம்‌ பகுதியில் வசித்துக் கொண்டு வெல்கம் டிரான்ஸ்போர்ட் நடத்தி வந்தார்.இந்நிலையில் இன்று காலை சுமார் 6 மணியளவில் தாவூத் மனைவியான நூர்ஜஹானுக்கு வீடியோ கால் மூலம் போன் செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

News March 31, 2024

கடலூர்: வேட்பாளர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும், தாங்கள் வேட்பு மனுதாக்கல் செய்த நாளிலிருந்து, வாக்குப்பதிவு நாள் வரையிலான தேர்தல் செலவின கணக்குகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியீட்டுள்ள உள்ள அறிவுரைகளின்படி, குறைந்தபட்சம் மூன்று முறை தேர்தல் செலவின பார்வையாளர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

News March 31, 2024

வேளாங்கண்ணியில் போக்குவரத்து மாற்றம்

image

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட தமிழக மட்டுமல்லாமல் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் வந்துள்ளனர். இந்நிலையில் போக்குவரத்தை நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பேருந்துகள், கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் அனுப்பி வைக்கப்பட்டு ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. 

error: Content is protected !!