India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சீர்காழியில் திருச்சபை மற்றும் வழிபாட்டு தலங்களிலிருந்து வழிபாட்டை நிறைவு செய்து வந்த பொதுமக்களிடம் அமைச்சர் மெய்ய நாதன், எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார். திமுக நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஆகியோர் மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதா அறிமுகம் செய்து வைத்து வாக்குகள் சேகரித்தனர்
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மதுபான விடுதியில் கடந்த 28 ஆம் தேதி மாலை முதல் மாடியின் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது இச்சம்பவம் தொடர்பாக 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விடுதி மேலாளர் சதீஸ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பின் விடுதி உரிமையாளர் அசோக் குமார் காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ காங்கிரஸ்- திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். தொடர்ந்து, அவர் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராபர்ட் குரூஸுக்கு ஆதரவாக வருகிற 6 ஆம் தேதி இரவு 7 மணிக்கு நெல்லையில் நடைபெறும் பொது கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுவார் என காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெள்ளகுட்டை பகுதியில் அனுமதி இன்றி பெட்டிக்கடை சுவற்றில் இரட்டை இலை சின்னம் வரைந்ததாக திருமூர்த்தி என்பவரும், குருகப்பட்டி பகுதியில் அனுமதியின்றி கைச்சின்னம் வரைந்ததாக தமிழ்வாணன் என்பவர் மீதும் தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். நேற்று (மார்ச் 30) இவரது வீட்டில் மின் கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி வீட்டில் இருந்த பிரிட்ஜ், பேன், மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமாகின. இதையடுத்து அப்பகுதி மக்கள் குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
புதுச்சேரி, மரப்பாலம் வசந்த் நகரில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வாய்க்கால் தூர்வாரும்போது பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் சிக்கிச் கொண்டனர். அதில் சம்பவயிடத்திலே ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் உயிரிழந்தனர்.
காங்கேயம் சிவன்மலையைச் சேர்ந்தவர் சிவ பாரத், பூ வியாபாரி. அதே பகுதியைச் சேர்ந்த பூர்ணிமா. இருவரும் ஓராண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது சிவ பரத் தன்னை அடித்து துன்புறுத்தியதாக பூர்ணிமா அளித்த புகாரில் சிவபாரத்தை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நேற்று போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்காத சின்னங்களை சுயேட்சை வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலின் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் சுயேட்சை வேட்பாளர் அருணா தேவிக்கும்,மக்கள் நீதி மையத்தின் டார்ச் லைட் சின்னம் சுயேட்சை வேட்பாளர் என்.பி. ராஜாவுக்கு கிடைத்துள்ளது.
காந்திமதி அம்பாள் உடனுறை சுவாமி நெல்லையப்பர் கோவிலில்
கருஉருமாரி சுப்பிரமணியர் முன்பாக
“வேல் விருத்தம்
மயில் விருத்தம்”
நிகழ்ச்சி நாளை (ஏப்ரல்.1) மாலை 5:30 மணிக்கு நடைபெற உள்ளது.
திருவுரு மாமலை
பன்னிரு திருமுறை வழிபாட்டுக் குழுவின் திருமுறை ஆசிரியர் வள்ளிநாயகம் தலைமை தாங்குகிறார். இதில், பங்கேற்குமாறு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு திருமணமாகி குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சமூகநலத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று சிறுமியின் வீட்டிற்கு சென்று நடத்திய விசாரணையில் கோபி என்பவர் 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளது தெரியவந்தது. குழந்தை திருமணம் செய்த கோபி என்ற இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.