India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுவையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட தலைமை துணை தேர்தல் சான்றளிப்பு குழுக்களிடம் அனுமதி பெறாத விளம்பரங்களை தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் வெளியிட வேண்டாம். சான்றிதழ் பெறாத விளம்பரங்கள், காணொலிக் காட்சிகளை வெளியிடுவது தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறும் செயலாகும். எனவே, சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஜவஹா் கூறினார்.
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சுப்பராயன் மீண்டும் போட்டியிடுகிறார். தேர்தல் தயாரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக திருப்பூர் ராஜாராம் வீதியில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான செல்வராஜ் தலைமையில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
தோ்தல் விதிமீறல்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படை உள்ளிட்ட குழுவினா், ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான பணத்தைக் கைப்பற்றும்போது, உடனுக்குடன் பிரத்யேக செயலியில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஐ.சா.மொ்சி ரம்யா நேற்று அறிவுறுத்தினாா். புதுகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு கூட்டத்தில் தெரிவித்தார்.
திருப்பூர் அடுத்து முத்தூர் ஈரோடு சாலை ரவுண்டானா அருகில் பேரூராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான காலி இடத்தில் மயானம் மற்றும் குப்பை கிடங்கு உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எறிய தொடங்கியது. இந்த தீ கோடை வெயில் உக்கிர தாக்கத்தினால் மளமளவென்று கொட்டிக் கிடந்த காய்ந்த குப்பைகள் முழுவதும் வேகமாக பரவி தீ விபத்து ஏற்பட்டது.
ஆரணி அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் அசோக்குமார், சந்திரகலா என்பவருடைய கோழிப் பண்ணை கொட்டகையின் மேலே சென்ற மின் கம்பிகள் உரசியதில் கோழி பண்ணை மீது தீப்பொறிகள் பட்டு கடும் தீ விபத்து ஏற்பட்டது. பண்ணையில் இருந்த 100 க்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் எரிந்து நாசமாகியது.
ஆரணி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் கடும் சேதாரம் தவிர்க்கப்பட்டது.
சங்கரன் கோவில் சேர்ந்த ஆறுமுகம் மனைவி லட்சுமி (70) என்ற மூதாட்டி பொதிகை தெப்பக்குளத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக குளத்தில் தவறி விழுந்து பலியானார். தகவல் அறிந்த சங்கரன்கோவில் போலீசார் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.இது குறித்து சங்கரன்கோவில் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கடலூர் அருகே விருத்தாசலத்தில் உள்ள கொளஞ்சியப்பர் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் எளிதாக கோயிலுக்கு சென்றுவர அரசு சிறப்பு பேருந்துகள் இன்று(மார்ச்.24) காலை முதல் விருத்தாசலம் பேருந்து நிலையம் முதல் கொளஞ்சியப்பர் கோவில் வரை இயக்கப்பட்டு வருகின்றது.
தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார் என செய்திகள் வந்த வண்ணம் இருந்த நிலையில் இன்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேனி பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 1999 முதல் 2004 வரை தேனி மக்களவை உறுப்பினராகவும் 2004 முதல் 2010 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். இவருக்கு வயது 60.
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலைய அருகே உள்ள சின்ன மேலமையூர் ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு சின்ன முத்துமாரியம்மன் கோவிலில் இன்று (மார்ச்-24) 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
வார இறுதி நாள் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு நேற்றிரவு திருவண்ணாமலை செல்வதற்காக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர். ஆனால் 4 மணி நேரத்திற்கும் மேலாக திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இல்லாததால் தென் மாவட்டம் செல்லும் பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Sorry, no posts matched your criteria.