India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட சிபிஐ கட்சி எம்எல் ஊழியர் கூட்டம் இன்று ரோஸ் மஹாலில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார் சிபிஐ எம்எல் நிர்வாகிகள் சுப்பிரமணியன், பழ ஆசைத்தம்பி, சங்கரபாண்டியன், வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தேர்தல் வெற்றி குறித்து ஆலோசனை நடத்தினர்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ., பேராலயத்தின் ஆல் சோர்ஸ் தேவாலயம் உள்ளது. இங்கு பணியாற்றிய சாம்ராஜ் மற்றும் ராஜேஷ் ஆகிய பாதிரியர்கள் ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு தேவாலயத்தின் உள்ளே திடீரென வந்து கதவு மற்றும் சிசிடிவி கேமராக்களை உடைத்து சூறையாடினர். பின் நேற்று அளித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் 2 பாதிரியர்களை கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் அரசு பள்ளிகளை நோக்கி மாணவர்கள் மாணவியர்கள் சேர்க்கை அதிகரிக்கும் மேற்கொள்ளும் வகையில் அந்தியூர் மலைப்பகுதியில் அரசு பள்ளியில் பயிலும் பழங்குடி இன மாணவ, மாணவியர்கள் 22 பேர் கோவையில் இருந்து சென்னைக்கு விமான மூலம் கல்வி சுற்றுலா சென்றனர். அவர்களை அரசு பள்ளி ஆசிரியர் நவநீதன் அழைத்துச் சென்றார்.
விக்கிரமங்கலம் அருகே சாத்தம்பாடி ஊராட்சி கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சரவணன், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆப்ரேட்டர் மனோகரன் ,தூய்மை காவலர் அன்புமணி ஆகியோர் குஞ்சு வெளி கிராமத்திற்கு வீட்டு வரி வசூல் செய்வதற்கு சென்றுள்ளனர்.அப்பொழுது குஞ்சு வெளி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் என்பவர் அவர்களை திட்டியாதகவும் இது குறித்து ஊராட்சி செயலர் அளித்த புகாரில் முருகானந்தம் கைது செய்யப்பட்டார்.
தஞ்சையை அடுத்துள்ள சிவாஜி நகர் ஆபிரகாம் பண்டிதர் நகரை சேர்ந் தவர் கஸ்தூரி (வயது62). நேற்று முன் தினம் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கஸ்தூரி அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்துள்ளனர். இதுகுறித்து கஸ்தூரி கொடுத்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
திமுகவுக்கு மாற்று பாஜக தான் திமுகவும் அதிமுகவும் கள்ள உறவு வைத்துள்ளது. திமுகவை மக்களவை தேர்தலில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதற்காக அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகி சென்றது. திமுக கிணத்து தவளை கும்மிடிப்பூண்டியை தாண்டினால் அடுத்த ஸ்டேஷன் தெரியாது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை சூசை பாண்டியா புரத்தை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவரது 9 வயது மகள் சிவநிகிலா நேற்று குளியல் அறையில் கழுத்தில் டவலை கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று துண்டு கழுத்தில் இறுக்கி மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.
நாளை ( ஏப்ரல் 1) முதல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பகவான் மேல்நிலை பள்ளியில் நடைபெறவுள்ளது. இதில், முதன்மை தேர்வர்கள் மற்றும் கூர்ந்தாய்வாளர்கள் என அனைத்து ஆசிரியர்களும் பணி விடுப்பு அளித்து விடைத்தாள் திருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
31.03.2024 முதல் 04.04.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என்றும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வேளாங்கண்ணியில் உதவிக்கரங்கள் அறக்கட்டளை சார்பில் ஈஸ்டர் பெருவிழா நடைபெற்றது. இதில் மும்மதத்தினர் பிரார்த்தனை செய்யப்பட்டு 1000 ஏழை எளியோருக்கு சுட சுட பிரியாணி வழங்கப்பட்டது. இதில் நிறுவனர் ஆண்டோ பிராங்கிளின் ஜெயராஜ் ,பங்குத்தந்தை அற்புதராஜ், ரஜதநீலகண்டன், ஜமாத் ஜகபர் சாதிக் ,ஜூலியட் அற்புதராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.