Tamilnadu

News January 8, 2026

பெரம்பலூர்: ஆட்சியர் தொடங்கி வைத்த சுற்றுலா

image

பெரம்பலூர் மாவட்ட இயற்கை மற்றும் காலநிலை மாற்றம் சார்பாக இரண்டு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவினை இன்று (08-01-2026) மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தொடங்கி வைத்தார். மேலும் முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட பசுமைத் தோழர் ஜாகிர்ஹுசைன், செல்வக்குமார், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் ஏற்பாடு செய்தனர். 50 மாணவ-மாணவிகள், 10 ஆசிரியர்கள் சுற்றுலா சென்றனர்.

News January 8, 2026

புதுக்கோட்டை கலெக்டர் தகவல்!

image

புதுகை மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமில் இதுவரை 30 முகாம்கள் நடந்துள்ளன. சராசரியாக ஒரு முகாமிற்கு 1400 பேர் பயனடைந்துள்ளனர். இம்முகாமில் ரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை, சிறுநீர் செயல்பாடு, பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் உள்ளிட்ட 17 சிறப்பு சிகிச்சை பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை மாவட்டத்தில் 43,519 பயன் அடைந்ததாக கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News January 8, 2026

கள்ளக்குறிச்சி: INDIA POST-ல் 30,000 காலிப்பணியிடங்கள்!

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News January 8, 2026

மதுரையில் இறைச்சி விற்க தடை

image

மதுரையில் திருவள்ளுவர் தினமான 16ஆம் தேதி மாநகரில் இறைச்சி விற்க தடை அறிவிப்பு இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி: திருவள்ளுவர் தினமான ஜனவரி 16ஆம் தேதி ஆடு, மாடு, கோழி, மீன் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்தால் பொது சுகாதார சட்டப்படி சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.

News January 8, 2026

தஞ்சை: இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

image

தஞ்சை மாவட்டத்தில் 7 லட்சத்து 10 ஆயிரத்து 131 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று (ஜன.8) முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு, ரொக்கம் ரூ. 3 ஆயிரம், வேட்டி, சேலை ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக நியாயவிலை கடைகளில் வழங்கப்படும். எனவே இதனை பெற்று கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News January 8, 2026

நீலகிரி: B.E, B.tech, MBA, M.sc முடித்தவர்களா நீங்கள்?

image

நீலகிரி மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து பதிவு செய்யுங்கள். (SHARE பண்ணுங்க)

News January 8, 2026

BREAKING: கரூர் எம்.பி கடும் கண்டனம்

image

விஜய் நடித்து வெளியாக இருந்த “ஜனநாயகன்” திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்றும், இது தமிழ் திரையுலகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்றும் எம்.பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தணிக்கை வாரியம் காலாவதியான அமைப்பாக மாறி, அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டி, அதனை கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

News January 8, 2026

மடத்துக்குளத்தில் அடித்துக் கொலை: ஒருவர் கைது

image

மடத்துக்குளம் அருகே அரியநாச்சிபாளையத்தில் நார் தொழிற்சாலை உள்ளது. இங்கு அசாமைச் சேர்ந்த 18 பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த 4ம் தேதி விடுமுறை காரணமாக தொழிலாளர்கள் மது அருந்தி உள்ளனர். அப்போது தகராறு ஏற்பட்டு பினயக் என்பரை பிஸ்திராம் தாக்கியுள்ளார். இதனையடுத்து அவரை கோவை GH-ல் சிகிச்சைக்கு அனுமதி அளித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார், பிஸ்திராமை கைது செய்தனர்.

News January 8, 2026

தேனி: ஓடும் பஸ்ஸில் 19 பவுன் நகை அபேஸ்..

image

வத்தலகுண்டு பகுதியை சேர்ந்தவர் சுமிதா. இவா் நேற்று (ஜன.7) தேனியிலிருந்து வீரபாண்டிக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளாா். வீரபாண்டியில் பேருந்தில் இருந்து கீழே இறங்கிப் பாா்த்த போது சுமிதாவின் பையில் வைத்திருந்த 19 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 8, 2026

குமரி: கால்வாயில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு!

image

குளச்சல் AVM கால்வாயில் நேற்று மாலை துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் அங்கு சோதனை செய்ததில் கால்வாயில் அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. சடலத்தை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்த போலீசார் முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் அப்பகுதியில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என தெரிய வந்துள்ளதாக கூறினர்.

error: Content is protected !!