Tamilnadu

News March 17, 2024

தேர்தல் ஆணையத்திற்கு நெல்லை முபாரக் வலியுறுத்தல்

image

பாராளுமன்ற தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (மார்ச் 17) வெளியிட்டுள்ள அறிக்கையில், 19, 26 தேதிகள் வெள்ளிக்கிழமையில் வருவதால், அன்று இஸ்லாமியர்கள் ஜும்மா தொழுகை மேற்கொள்வார்கள். எனவே அன்றைய தேதியை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தியுள்ளார்.

News March 17, 2024

தென்காசி: 2,220 ஆண்டு பழமை வாய்ந்த பானை!

image

தென்காசி மாவட்டம் அருகே கடையம் பகுதியில் சுமார் 2,220 ஆண்டுகளுக்கு முற்பட்டு மிகப்பழமையான மக்கள் வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னோர்கள் வாழ்ந்த இடத்தில் கல்லூரி பேராசியர்கள் மற்றும் மாணவர்கள் ஆய்வு நடத்தியதில் பழமையான வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதில் பானைகள், தங்கவளையம், கிண்ணம் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

News March 17, 2024

திருச்சி பயணிகள் உடைமைகளில் தீவிர சோதனை

image

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் கடத்தல் சம்பவங்களை தடுக்கும் வகையில் இன்று ரயில்வே பாதுகாப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதையொட்டி சுமார் 15க்கும் மேலான போலீசார் இந்த ரோந்து பணியில் ஈடுபட்டு, ரயில் நிலையத்தில் சந்தேகப்படும் படியாக நபர்களை விசாரித்தும், அவர்கள் உடைமைகளை வாங்கி பரிசோதனை செய்தனர்.

News March 17, 2024

திருவாரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருவாரூர், நாகை நாடாளுமன்ற தொகுதி பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில். 11 வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி கேமரா மக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு உள்ளதாகவும் தேர்தல் நடைமுறை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் 50 ஆயிரத்திற்கு மேல் தனிநபர் பணங்கள் எடுத்துச் செல்லக்கூடாது என தேர்தல் நடைமுறையில் சட்டம் அமல்படுத்தப்பட்டதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க

image

திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க, பொதுமக்களுக்காக 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை 14.03.2024 முதல் இயங்கி வருகிறது. பொதுமக்கள் 044-27660641, 044-27660642, 044-27660643, 044-27660644 மற்றும் 1800 425 8515 என்ற இலவச தொலைப்பேசி எண்ணிலும் தங்கள் புகார்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

தென்காசி மக்கள் குறைதீர் நாள் முகாம் ரத்து 

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் 24ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் ஆணையத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் கிராமப்பகுதியில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மறு அறிவிப்பு வரும் வரை நடைபெறாது என தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

புதுகை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

image

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 தொடர்பாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News March 17, 2024

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அறிக்கை

image

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் உமா தேர்தல் விதிமுறை நடைமுறையில் உள்ளதால் ஏற்கனவே தங்கள் சுய பாதுகாப்பிற்காக தக்க உரிமம் பெற்று வைத்துள்ள அனைத்துவிதமான துப்பாக்கிகள் மற்றும் அதன் இதர பொருட்களையும் அங்கீகரிக்கப்பட்ட ஆயுத கிடங்கு மற்றும் காவல்நிலையத்தில் ஒப்படைக்குமாறு ஆட்சியர் அறிக்கை இன்று  வெளியிட்டார்.

News March 17, 2024

சென்னையில் புதிய டாஸ்மாக் கடை மூடல்

image

சென்னை முகப்பேர் மேற்கு, ரெட்டி பாளையம் சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது. நேற்று புதிய மதுக்கடை திறக்கபட இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடை உடனடியாக மூடப்பட்டது.

News March 17, 2024

10 மணி நேரம் மச்சாசன யோகா செய்யும் சிறுவன்

image

திருவள்ளூர் மாவட்டம் சின்ன சோழியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார், செல்வி தம்பதியரின் மகன் சிவமணி தொடர்ந்து 10 மணி நேரம் கிணற்றில் மிதந்து மச்சாசன யோகா செய்த உலக சாதனை நிகழ்த்தும்
நிகழ்வில் பங்கேற்றுள்ளார். பொதுமக்கள் உற்சாகமாக ஆதரவளித்து அவரை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகின்றனர். மருத்துவர் உதவி மற்றும் பாதுகாப்புடன் சாதனை நிகழ்வு நடத்தப்படுகிறது.

error: Content is protected !!