Tamilnadu

News April 4, 2024

தஞ்சை: 214 நுண்பாா்வையாளா்கள் நியமனம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நுண்பாா்வையாளா்களுக்கான முதல் கட்டப் பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் நேற்று(ஏப்.3) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 8 சட்டப்பேரவை தொகுதிகளில், 114 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் வாக்குப்பதிவை கண்காணிக்க 214 நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

News April 4, 2024

ராமநாதபுரம்: 3566 பேருக்கு தபால் வாக்குகள்

image

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 தொகுதிகளில் AVSC (85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள்) சுமார் 1722 நபர்கள், AVPD (மாற்றுதிறனாளி வாக்காளர்கள்) 1844 நபர்கள் ஆக மொத்தம் சுமார் 3566 நபர்களுக்கு தபால் வாக்குச்சீட்டு வழங்கும் குழு ஏப்ரல் 5 முதல் 9 முடிய இல்லம் தேடிவருவர். அப்போது தங்களது தபால் வாக்கினை செலுத்தலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News April 4, 2024

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இன்று காலை யாகசாலை பூஜை நிறைவு பெற்ற பின்னர் மகாபூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க கடன் புறப்பாடு நடைபெற்று கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் நாகை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

News April 4, 2024

மாவட்டத்தில் 157 புகார்கள் பதிவு.

image

தேர்தலில் விதிமீறல் தொடர்பாக மக்கள் புகார் அளிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல ஏற்பாடுகளை செய்துள்ளது.அதன்படி கோவை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், சி விஜில் செயலி மூலமாகவும் புகாரினை தெரிவிக்க இயலும். அதன்படி இதுவரை 157 புகார்கள் வரப்பட்டுள்ளதாகவும்,அதற்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

News April 4, 2024

திருவாரூர்:துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு

image

மன்னாா்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, ஆலங்கோட்டை, மேலத்திருப்பாலக்குடி , மேலவாசல் ஆகிய பகுதியில் ஒடிஸா மாநிலத்திலிருந்து வந்துள்ள இந்திய துணை ராணுவப் படையினரின் 70 போ், தமிழக காவல்துறையினா் 30 போ் என 100 போ் பங்கேற்ற கொடி அணிவகுப்பு அந்தந்த பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் நடைபெற்றது. மன்னாா்குடி டிஎஸ்பி அ. அஸ்வத் ஆண்டோ தலைமை வகித்தாா்.

News April 4, 2024

திருவள்ளூர்: சரக்கு ரயில் மோதி 2 பேர் மரணம்

image

பொன்னேரி அடுத்த தச்சூரில் சேலத்தை சேர்ந்த 4 பேர் தங்கி பெயிண்டிங் பணி செய்துவந்தனர். பெயிண்டிங் வேலை முடிந்து 4 பேரும் சொந்த ஊர் செல்ல நேற்றிரவு பொன்னேரி ரயில் நிலையம் சென்றனர். அங்கு 4 பேரும் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அதில் ஒருவர் தவறி தண்டவாளத்தில் விழுந்தார். இதையடுத்து அவரும், அவரை தூக்கச் சென்ற மற்றொருவரும் சரக்கு ரயில் மோதி இறந்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 4, 2024

தயாராகும் வாக்கு எண்ணிக்கை மையம்

image

நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் மதுரை மாவட்டத்தில் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மக்களவை தொகுதியில் பதிவாகும் வாக்குகள் மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் வைத்து எண்ணப்படும் நிலையில் அந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணிக்கை செய்யும் தனி தனிஅரங்குகள், தடுப்புகள் அமைக்கும் பணிகள் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.

News April 4, 2024

புகையிலை விற்ற கடைகளுக்கு சீல்

image

திண்டுக்கல் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திண்டுக்கல் நகர், புறநகர், வேடசந்தூர், எரியோடு, ஆத்தூர், நிலக்கோட்டை பகுதி பெட்டிக்கடை, மளிகை கடைகளில் நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வில்
50kg புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளர்களான கமல்சேட் (65),வாசிக் அக்ரம் (28),சரவணன் (50),பாலசிங் (40) உள்ளிட்ட 10 பேருக்கு ரூ.1000 அபராதம் விதித்து கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

News April 4, 2024

மாவட்டத்தில் 157 புகார்கள் பதிவு.

image

தேர்தலில் விதிமீறல் தொடர்பாக மக்கள் புகார் அளிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல ஏற்பாடுகளை செய்துள்ளது.அதன்படி கோவை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், சி விஜில் செயலி மூலமாகவும் புகாரினை தெரிவிக்க இயலும். அதன்படி இதுவரை 157 புகார்கள் வரப்பட்டுள்ளதாகவும்,அதற்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

News April 4, 2024

தயாராகும் வாக்கு எண்ணிக்கை மையம்

image

நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் மதுரை மாவட்டத்தில் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மக்களவை தொகுதியில் பதிவாகும் வாக்குகள் மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் வைத்து எண்ணப்படும் நிலையில் அந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணிக்கை செய்யும் தனி தனிஅரங்குகள், தடுப்புகள் அமைக்கும் பணிகள் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!