India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மார்ச் 29ஆம் தேதி புனித வெள்ளி மற்றும் வார இறுதி விடுமுறைகளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்டம் சார்பில் நாளை முதல் வரும் 1ம் தேதி வரை 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் பொன்முடி தெரிவித்துள்ளார். சேலம், பெங்களூர், சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் மலையரசன் இன்று காலை முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது டீக்கடையில் டீ ஆற்றி பொதுமக்களிடம் டீ கொடுத்து விட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து பெண்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். உங்கள் ஓட்டை எனக்கு அளிக்க வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்
மாதாவரம் அடுத்த ஆசசி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் மஞ்சம்பாக்கம் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வளர்மதி. இவர்களது கோவிந்தன், பிரபு என 2 குழந்தைகள் 8ம் வகுப்பு படிக்கும் நிலையில், பிரபு நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பநத்தம் அணையில் சேமித்து வைத்திருந்த மழை நீர் மார்ச் 2 முதல் 27-ம் தேதி வரை 25 தினங்களுக்கு பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது. இன்று அணையில் 25 கன அடி நீர் இருப்புடன் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுவதாகப் பொதுப் பணித் துறை நிர்வாகம் பொதுமக்கள் & விவசாயிகளுக்கு அறிவித்தனர்.
திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கான அதிமுக தலைமை தேர்தல் அலுவலகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளின் நிலை குறித்து இன்று அதிமுக வேட்பாளர் கருப்பையா, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். உடன் இப்பகுதி அதிமுகவினர் இருந்தனர்.
தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை கேயம்பேடு பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தள்ளுவண்டி கடை ஒன்றில் வடை சாப்பிட்டு, பணத்தை செல்போனில் அனுப்பினார். தொடர்ந்து, தள்ளுவண்டி கடை வரை டிஜிட்டல் பேமெண்ட் வந்துள்ளதாக கூறி வாக்கு சேகரித்தார். இதற்கு முன்னதாக பெரிய உணவகங்களில் மட்டும் டிஜிட்டல் பேமெண்ட் இருந்த நிலையில், தற்போது சிறிய கடைக்கு கூட டிஜிட்டல் பேமெண்ட் முறை இருப்பதாக தெரிவித்தார்.
தேனி மக்களவை தொகுதியின் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர், டிடிவி தினகரன் தேனி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார் . உடன் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் டி.ஆர்.பாலு மீண்டும் அவர் இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.டி.ஆர்.பாலு செய்யாத பல திட்டங்களை நான் வெற்றி பெற்றால் செய்வேன் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேணுகோபால் இன்று தெரிவித்தார்.
வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட
இந்து எழுச்சி பேரவை சார்பில் சதீஷ் கண்ணா என்பவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று வருகை புரிந்தார். பின்னர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பூங்கொடியிடம் தனது வேட்பு மனுவை வழங்கினார். உடன் நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பூமாரக்கெட் பின்புறம் மருத்துவமனை செல்லும் சாலையில் இன்று இருசக்கர வாகனங்கள் சாலையில் அத்துமீறி நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இவ்வழியாக நாள் தோறும் கனரக வாகனங்கள் பஸ்கள் போன்றவை செல்லும். இச்சாலையில் அடிக்கடி இதுபோன்று இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
Sorry, no posts matched your criteria.