Tamilnadu

News July 4, 2024

இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி – ஆட்சியர்

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளிலிருந்து விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழிலுக்கு இலவசமாக மண் மற்றும் வண்டல் மண்ணை எடுக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் tnesevai.tn.gov.in என்ற இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் இணைய வழியில் அனுமதி வழங்குவார்கள் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

புதுக்கோட்டை இளைஞர்களே யூஸ் பண்ணிக்கோங்க

image

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியின்
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம், புதுக்கோட்டை தன்னார்வ பயிலும் வட்டம் இணைந்து நடத்தும் அரசுப் பணியாளர் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜூலை 7ம் தேதி தொடங்குகிறது. இதில் சேர விரும்புவோர் 9786441417, 9445955451, 9943832324 இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தன்னார்வ பயிலும் வட்ட ஒருங்கிணைப்பாளர் பா.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

கிராமிய கலை பயிற்சி – ஆட்சியர் தகவல்

image

நாட்டுப்புற கலைகளை வளர்க்கும் விதமாக தூத்துக்குடியில் உள்ள அரசு இசைப்பள்ளியில் ஒயிலாட்டம், வில்லிசை, நாட்டுப்புற பாடல், புலியாட்டம் போன்றவை பயிற்றுவிக்கப்பட உள்ளது. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 9487739296 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

News July 4, 2024

நெல்லை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

நாட்டுக்கோழி வளர்ப்பதில் திறன் கண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 % மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் அணுகி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

கடந்த 4 ஆண்டுகளில் பட்டாசு விபத்தால் பலியானோரின் எண்ணிக்கை

image

சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 63 விபத்துகள் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 63 விபத்தில் 148 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 108 பேர் காயமடைந்திருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு உற்பத்தியை அதிகரிக்க ஒப்பந்த முறையை பின்பற்றுவதால் தான் விபத்துகள் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

News July 4, 2024

ஆதி திராவிட நலத்துறை தொடக்க பள்ளியில் 27 காலியிடம் – ஆட்சியர்.

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் எஸ்.புதூர், திருநீலக்குடி, கோனோரிராஜாபுரம் , ஆலக்குடி, பெரம்பூர், அனைக்குடி , செய்யாமங்கலம், சித்தர்காடு, ஆடுதுறை பெருமாள்கோவில், பூதலூர், பிள்ளையார்பட்டி, மருதக்குடி, ராயந்தூர் , தோகூர், வடக்கால் உள்ளிட்ட 27 இடங்களில் உள்ள அரசு ஆதி திராவிட நல தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தல்.

News July 4, 2024

தருமபுரியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்காக விவசாயிகளின் குறைதீர் கூட்டம் (05/07/2024) வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளும் என அனைவரும் கலந்து கொள்ளுமாறு வருவாய் கோட்ட அலுவலர் காயத்ரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

திண்டுக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில், 2024-25ம் ஆண்டிற்கு கிராமப்புறங்களில் சிறிய அளவிலான 100 நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 % மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. எனவே தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பம் பெற்று, உரிய ஆவணங்களுடன் 15.07.2024-க்குள் கால்நடை மருந்தகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

வேலூர் விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் விவசாய நிலத்தை மேம்படுத்துதல், மண் பாண்டங்கள் செய்தல், வீடு கட்டுதல் உள்ளிட்ட சொந்த பயன்பாடு மற்றும் இதர பயன்பாட்டிற்கு தேவையான வண்டல் மண், களிமண், கிராவல் மண் ஆகியவற்றை தங்கள் கிராம ஏரி, குளங்களில் இருந்து எடுத்துக்கொள்ள tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து அனுமதி பெற்று பயனடையுமாறு கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று (ஜூலை 4) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

கள்ளக்குறிச்சி எஸ்பி எச்சரிக்கை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்கள் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி இன்று (4-7-2024) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!