India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அனைத்து பகுதிகளிலும் நேற்று பார்லி பார்லிமென்ட் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது. இதில் நெல்லை பார்லிமென்ட் தொகுதியில் பாளை பகுதியில் குறைவான ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. கடும் வெயில் காரணமாக வாக்காளர்கள் ஓட்டு சாவடிக்கு வந்து வாக்கு அளிப்பதை தவிர்த்து உள்ளனர். பலருக்கு பூத் சிலிப் கிடைக்காததால் வாக்களிக்க வரவில்லை என அதிகாரிகள் இன்று (ஏப்.20) தெரிவித்தனர்.
பார்லிமென்ட் தேர்தல் ஓட்டுப் பதிவை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி முதல் நெல்லை, பாளை உட்பட அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன. ஓட்டுப்பதிவை முன்னிட்டு நேற்று வரை மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபான கடைகள் அனைத்தும் இன்று திறக்கப்படும். வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை அன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படும். இவ்வாறு நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஏப்.20) தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. நெல்லை, பாளை பகுதிகளில் உள்ள ஓட்டுச் சாவடிகளில் போலீசார், ஊர்க்காவல் படையினர் ஒலிபெருக்கி மூலம் வாக்காளர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி கொண்டிருந்தனர். இதனால் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் ஓட்டுப்பதிவு சுமுகமாக நடந்ததாக அதிகாரிகள் இன்று (ஏப்.20) தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் நேற்று(ஏப்.19) மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. அப்போது, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச்சாவடியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேர் ஒன்றாக சென்று வாக்களித்தனர். மேலும், 1977ம் ஆண்டு முதல் அனைத்து தேர்தல்களிலும், குடும்பத்துடன் ஒன்றாக சென்று வாக்களித்து வருவதாக கூறி அனைவரையும் நெகிழ வைத்தனர். பின்னர் 21 பேரும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
நீலகிரியில் குறும்பர், இருளர், தோடர், கோத்தர் போன்ற பல்வேறு பழங்குடியினர் வசித்து வருகின்றனர். நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் கோத்தகிரி பகுதியில் உள்ள கோத்தர் இன பெண்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். தங்களுக்கான வாக்கு சாவடியில், வாக்களித்து ஜனநாய கடமையை நிறைவேற்றினர். வாக்களிப்பது எங்கள் உரிமை என்று கூறினர்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் முதல்வர் OPS-இன் இளைய மகன் ஜெயபிரதீப் நேற்று (ஏப்ரல் 19) தனது தந்தையின் சின்னமான பலாப்பழத்துடன் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில், சேதுக்கரை ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் ஆகியவற்றில் சாமி தரிசனம் செய்தார். திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் உடையத்தேவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் ஏழாம் நாளான இன்று (ஏப்ரல்.20) திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து, சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை,கந்தா்வகோட்டை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் திருச்சி மக்களவைத் தொகுதியிலும்,விராலிமலை சட்டப் பேரவைத் தொகுதி கரூா் மக்களவைத் தொகுதியிலும்,அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியிலும்,ஆலங்குடி திருமயம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் சிவகங்கை மக்களவைத் தொகுதியிலும் வருகின்றன. மக்களவைத் தோ்தலில் விறுவிறுப்பான வாக்குபதிவில் புதுக்கோட்டையில் 71.72% பேர் வாக்களித்தனா்
மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராமன் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச்சாவடிகளை கண்காணிக்கும் பணியில் இருந்தார். இந்நிலையில் திருவள்ளரை புண்டரீ காட்சபெருமாள் கோவில் அர்ச்சகராக வேலை பார்த்த ஒருவரை இன்ஸ்பெக்டர் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார். இதனால் இன்ஸ்பெக்டர் ரகுராமனை விதிகளை மீறியதாக அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்ற உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்,
சிவகாசி தென்றல் நகரை சேர்ந்தவர் சித்திரைஜோதி 75. இவர் நேற்று சிவகாசி சிறுகுளம் பகுதியில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த கிரேன் சித்திரை ஜோதியின் மீது பலமாக மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் கிரீன் ஓட்டுநர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.