Tamilnadu

News April 22, 2024

திருச்சி அருகே முன் விரோதத்தில் ஒருவர் அடித்து கொலை

image

லால்குடி அருகே நன்னிமங்கலத்தை சேர்ந்த அருண்ராஜ் (40). இவருக்கும் இதே பகுதியைச் சோ்ந்த தயாளன் (43)  என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் தயாளன் அவரது நண்பர்கள் 5பேருடன் சேர்ந்து அருண்ராஜை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அருண்ராஜ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

News April 22, 2024

நாமக்கல் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

image

கேரளாவில் பறவை காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டு இருப்பதால்,நாமக்கல் சுற்றுவட்டார கோழி பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.பண்ணைகளில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.மேலும் தீவனம் ஏற்றி வரும் வாகனங்களும் கிருமிநாசினி மருந்து தெளித்த பின்னரே பண்ணைகளுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

News April 22, 2024

விருதுநகர் அருகே விபத்து; மரணம் 

image

அருப்புக்கோட்டை ஜெயராம் நகரை சேர்ந்தவர் நாகசுந்தரேஸ்வரன் (18).காந்தி நகரில் உள்ள தனியார் டிசைனர் கம்பெனியில் வேலை செய்து வந்த நாகசுந்தரேஸ்வரன் கம்பெனியிலிருந்து நேற்று முன்தினம் இரவு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.திடீரென நாய் குறுக்கே வந்ததால் பைக் நிலை தடுமாறி கீழே விழுந்து நாகசுந்தரேஸ்வரன் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.தாலுகா போலீசார் நேற்று ஏப்ரல் 21 வழக்கு பதிந்துள்ளனர்.

News April 22, 2024

சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு பேருந்துகள்

image

சித்ரா பௌர்ணமி விழா நாளை(ஏப்.23) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இன்றும், நாளையும் திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 527 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 30 பேருந்துகளும், ஏப்.23ம் தேதி கிளாம்பாக்கத்தில் இருந்து 628 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 30 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 22, 2024

கடலூர் அருகே விபத்து; மரணம் 

image

விருத்தாசலம் அடுத்த சாத்துக்குடல் கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (38).நேற்று பெரியவடவாடியில் உள்ள தனது உறவினர் வீட்டு காதணி விழாவிற்கு சென்று விட்டு நேற்று மாலை 4 மணி அளவில் பெரியவடவாடி பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார்.இப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதி வெங்கடேசன் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 22, 2024

நாகை: தீயில் கருகி 27 ஆட்டுக் குட்டிகள் பலி

image

திருமருகல், இடையாத்தாங்குடி ஊராட்சி அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் முருகராஜ் (38). இவா், 150-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளா்த்து வருகிறாா். இந்நிலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்த விளைநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 ஆட்டுக் குட்டிகள் தீயில் கருகி உயிரிழந்தன. திருமருகல் தீயணைப்பு நிலைய வீரா்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா்.

News April 22, 2024

பெண்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலை வாய்ப்பு அமைப்பு சார்பில் பெண்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் வரும் 28.04.24 (ஞாயிற்றுக்கிழமை) அன்று  காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 22, 2024

தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு

image

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் எல்கேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை பதிவு இன்று மதியம் ஆரம்பமாகிறது. தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். வரும் மே மாதம் 18ம் தேதி வரை இதற்கான இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தகுதியான மாணவ மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி தெரிவித்தார்.

News April 22, 2024

பாத்ரூமில் வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம்

image

கரூர் மாவட்டம் குளித்தலை ஏ சி டி நகர் பகுதியில் வசித்து வந்தவர் போத்துராஜ், மனைவி கமலா தேவி (81). இவர் உடல்நிலை சரியில்லாமல் மயக்கம் ஏற்பட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்துள்ளார். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று உயிரிழந்தார். இது குறித்து கமலாதேவி மகன் விவேகானந்தன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News April 22, 2024

ஈரோடு: தேடும் பணி தீவிரம்

image

ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (27). இவர் நேற்று மாலை நண்பர்களுடன், முடுக்கன்துறை – பவானி ஆற்றில் குளித்த போது நந்தகுமார் தண்ணீரில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டார். உடனடியாக தகவல் அறிந்த பவானிசாகர் தீயணைப்புதுறையினர் நந்தகுமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவாகியும் நந்தகுமார் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலையும் நந்தகுமாரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

error: Content is protected !!