Tamilnadu

News April 24, 2024

ராம்நாடு: அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ராமநாதபுரம், திருப்பூர், கோவை, திருவாரூர், தஞ்சாவூர், தேனி, தென்காசி, நெல்லை, சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 24, 2024

திருப்பூர்: அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், திருப்பூர், கோவை, திருவாரூர், தஞ்சாவூர், தேனி, தென்காசி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 24, 2024

நெல்லை: அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நெல்லை, திருப்பூர், கோவை, திருவாரூர், தஞ்சாவூர், தேனி, தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 24, 2024

தர்மபுரி அருகே விபத்து

image

காரிமங்கலம் காவேரிபட்டிணம் சாலையில் இருந்து மாரண்டஅள்ளி செல்வதற்காக காரில் வந்த இரு நபர்கள் எதிரே வந்த தண்ணீர் வாகனம் பிக்கப் மீது தனது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த வாகனத்தின் மீது மோதி சாலையோர இருந்த பனைமரத்தின் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த இரு நபருக்கும் பலத்த ரத்த காயங்களுடன் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அருகில் இருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News April 24, 2024

விருதுநகர்: தீயில் எரிந்த நபர்

image

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த வடமாநில தொழிலாளி சுனில் குமார்(22). இவர் விருதுநகர்- மதுரை சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் நேற்று வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது குப்பைகளை எரிப்பதற்காக டீசலை பயன்படுத்தும் பொழுது எதிர்பாராத விதமாக டீசல் கேன் வெடித்ததில் சுனில் குமார் மீது தீப்பற்றி எரிந்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News April 24, 2024

தென்காசியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு

image

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கோவை, திருவாரூர், தஞ்சாவூர், திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், குமரி ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News April 24, 2024

மயிலாடுதுறை: மிதந்து வரும் முதலை..

image

சீர்காழி அருகே கூப்பிடுவான் உப்பனாறு அமைந்துள்ளது. இந்த ஆற்றில் முதலை நடமாடுவதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதனால் அச்சமடைந்த உள்ளூர்வாசிகள் முதலை நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் வனத்துறை அலுவலர்கள்,முதலை நடமாட்டம் இருப்பதாகவும், இதனால் ஆற்றின் உட்பகுதியில் பொதுமக்கள் இறங்கவோ மற்றும் கரைப்பகுதியில் நடக்கவோ கூடாது எனவும் இன்று எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.

News April 24, 2024

திருச்சி: சம்பவ இடத்திலேயே பலி 

image

திருச்சி கே.கே நகர் பகுதிக்கு உட்பட்ட டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இன்று சிமெண்ட் கலவை ஏற்றி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென டூவீலரில் எதிரே வந்த பெண் மீது மோதியது. இதில், கீழே விழுந்த பெண் லாரி டயரில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 24, 2024

தஞ்சாவூர் மாவட்டத்தில் மழை

image

தென் இந்தியப்ப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடுகிறது. இதன் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 24, 2024

தென்காசி: பள்ளி மாணவர்களை பாராட்டிய எஸ்பி

image

தென்காசி மாவட்ட, எஸ்பி அலுவலகத்தில் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற நெடுவயல் சிவசைலநாதர் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா இன்று நடந்தது. விழாவில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்து பாராட்டி பரிசுகள் வழங்கினார்.மேலும் மாணவர்கள் நன்கு படித்து அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

error: Content is protected !!