Tamilnadu

News April 24, 2024

தெப்பத்திருவிழாவை தொடங்கி வைத்த சபாநாயகர்

image

 ராதாபுரம் வரகுண பாண்டீஸ்வரர் சமேத நித்திய கல்யாணி அம்பாள் கோயிலின் தெப்பத்திருவிழா, இன்று இரவு நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு தெப்பத்திருவிழாவை ,
தொடங்கி வைத்தார்.
நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர்
வி.எஸ்.ஆர்
ஜெகதீஷ்,
ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்
சவுமியா ஜெகதீஷ் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

News April 24, 2024

கடலூரில் பதனீருக்கு மவுசு 

image

கடலூரில் இன்று வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் சுட்டெரிக்கும் வெயிலில் தலைகாட்ட முடியாமல் அவதி அடைந்தனர். மேலும் சாலைகளிலும் வாகன போக்குவரத்து குறைந்தே காணப்பட்டது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட கடலூர், மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானம் அருகே விற்கப்பட்ட பதநீரை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி பருகின்றனர்.

News April 24, 2024

திருவண்ணாமலையில் 105 இடங்களில் அன்னதானம்

image

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்வதற்கான அனுமதியை திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் இன்று வழங்கினார். மொத்தம் 105 இடங்களில் நாளை பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

News April 24, 2024

அதிரடி காட்டிய கலெக்டர்… கிடுகிடுத்து போன வியாபாரிகள்

image

கிரிவலப் பாதையில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று ஆய்வு செய்தார். இதில், பாதையில் உள்ள கடைகளில் பக்தர்களுக்கு காலாவதியான பொருட்கள் விற்கப்படுகிறதா இரவு நேரத்தில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து கடைகளுக்கு அபராதம் விதித்தார்.

News April 24, 2024

கோரிக்கையை நிறைவேற்றிய தேனி கலெக்டர்

image

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் தலைமையில் பல அமைப்புகள் இணைந்து மாவட்ட நிர்வாகத்திற்கு வைத்த கோரிக்கையை ஏற்று கண்ணகி கோவில் திருவிழாவை மாவட்ட நிர்வாகம் நடத்துவது என முடிவெடுத்தது. அதற்காக அந்த அமைப்பினர் இன்று மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் கூறினர். லோயர் கேம்பில் இருந்து கண்ணகி கோவில் வரை பாதை அமைத்து கொடுக்க கோரிக்கை வைத்தனர்.

News April 24, 2024

ரூ.36.16 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

image

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.36.16 லட்சத்துக்கு, பழனி கோயில் சாா்பில் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது. இதில் ஒரு மூட்டை சா்க்கரை ரூ.2,510 முதல் ரூ.2,600 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் ரூ.36.16 லட்சத்திற்கு 20 கிலோ கரும்பு சா்க்கரை பழனி கோயில் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News April 24, 2024

கடலூர் கோவிலில் வரும் 27-ம் தேதி பட்டாபிஷேகம்

image

கடலூர், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோதண்டராம கோயிலில் கடந்த 17-ம் தேதி முதல் வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி வரை என 11 நாட்கள் ராமநவமி மகோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை விசேஷ திருமஞ்சனமும் மாலை வீதி உற்சவமும் நடைபெற்றது. இந்த நிலையில் சிகர நிகழ்ச்சியான ராமர் பட்டாபிஷேக வைபவம் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.

News April 24, 2024

சிவகங்கை: சித்திரை திருவிழா தனியார் பள்ளி விடுமுறை

image

திருப்புவனம் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின் சித்திரத் திருவிழாவை முன்னிட்டு நாளை 22 ஆம் தேதி வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் லாடனேந்தல் வேலம்மாள் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு லோக்கல் விடுமுறை விடப்பட்டுள்ளது. குழந்தைகள் சித்திர திருவிழாவை கொண்டாடும் விதமாக விடுமுறை அறிவித்திருப்பதாக பள்ளியின் முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

News April 24, 2024

பழனி முருகன் கோயிலில் அமைச்சர் பிடிஆர்

image

பழனி முருகன் கோவிலுக்கு அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் அவ்வப்போது வந்து தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில்  அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பழனி கோயிலுக்கு வருகை தந்து முருக பெருமானை தரிசனம் செய்தார். முன்னதாக அடிவாரத்தில் ரோப் கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

News April 24, 2024

பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

திண்டிவனம் அடுத்த தென்பசியார் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று (ஏப்ரல் 22) குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை சுமதி தலைமை தாங்கிட அதே கோம் குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி (ம) ரேவதி முன்னிலையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு குழந்தை திருமணம், நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

error: Content is protected !!