India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கரன் மற்றும் மாவட்ட பொது செயலாளர் செந்திலரசன் ஆகியோர் கட்சியின் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கபடுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். பாஜக நிர்வாகி மதுதுசூதனன் அரிவாளால் வெட்டப்பட்ட விவகாரத்தில் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கரன் போலீஸாரால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்த்கக்கது.
குரூப் 1 தேர்வுக்கு விருதுநகரில் 4 நாட்கள் மாதிரி தேர்வு நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் மாநில அளவிலான மாதிரி தேர்வுகள் நாளையும்(ஜூன் 23) அதை தொடர்ந்து ஜூன் 27 மற்றும் ஜூலை 3 , 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. எனவே விருப்பமுள்ளோர் கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் ஐ.பெரியசாமியின் சீரிய முயற்சியால், ஆத்தூர் ஒன்றியம், சுதனாகியபுரத்தில் 8 ஏக்கரில் சுமார் ரூ.100கோடி செலவில் நவீன கட்டமைப்புடன் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது.
75 % பணிகள் முடிந்த நிலையில், மீதமுள்ள பணிகள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடியும் தருவாயில் உள்ளது. இக்கல்லூரியை விரைவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலத்தூர் தாலுகா ஆதனூர் கிராமத்தில் இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக புதிய கொடிக்கம்பம் அமைத்து கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பெரம்பலூர் கிழக்கு மா.செயலாளர் தங்க இரத்தினவேல் கொடியேற்றி வைத்தார், மா.தலைவர் மைக்கேல், தெற்கு தொகுதி செயலாளர் சரவணன், சிதம்பரம் தொகுதி நாதக வேட்பாளராக போட்டியிட்ட ஜான்சிராணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதுமைப்பெண் திட்டம் 2024-2025 ஆம் கல்வி ஆண்டு தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியில் பயின்ற மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. உங்கள் கல்லூரியில் நியமிக்கப்பட்ட புதுமைப்பெண் திட்ட கல்லூரி அலுவலர் மூலம் (www.puthumaipenn.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் இன்று ஞாயிற்றுகிழமை வார விடுமுறை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகாலையிலே குவிந்தனர். அவர்கள் கடலில் இருந்து எழும் சூரிய உதயத்தை கண்டு ரசித்து, தங்களது செல்போனில் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் கடலில் கால்களை நனைத்து குடும்பத்துடன் விளையாடி வருகின்றனர்.
சட்டசபையில் நீர்வளத் துறை மானிய கோரிக்கையின் போது, வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன் பேசியதாவது, வேடசந்தூர் பகுதியில் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அபாயகரமான பகுதியாக மாறி உள்ளதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர். காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தவும் மக்கள் பிழைக்க வழியின்றி வெளி மாநிலங்களுக்கு குடி பெயர்ந்து வருவதாக தெரிவித்தார்.
திருச்சி ஆர் சி பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் சாம்ரோஜ் என்ற மாணவன் நேற்று கொள்ளிடம் ஆற்றில் நண்பர்கள் 5 பேருடன் குளிக்கச் சென்ற போது சாம்ரோஜ் நண்பர்கள் கண் முன்னே நீரில் மூழ்கினார். இதனால் நேற்று முதல் சிறுவனை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் சாம்ராஜ் இன்று சடலமாக மீட்கப்பட்டார். அவனது உடலைப் பார்த்து அவனது நண்பர்கள் மற்றும் பெற்றோர்கள் கதறி அழுதனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போது, இடிந்தகரை மற்றும் கூடங்குளம் பகுதி மக்கள் மீது போடப்பட்டது. வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள் மனு கொடுத்துள்ளனர். ஆனால், இதுவரை சில வழக்குகள் மட்டுமே வாபஸ் பெறப்பட்டுள்ளன. மீதி வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நேற்று கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டையில் வரும் ஜூலை 27 முதல் ஆக 5 வரை நடைபெறவுள்ள புத்தகத் திருவிழா குறித்த தகவல்கள் மற்றும் புத்தக தேவை பற்றியான விழிப்புணர்வ்வை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் அனைத்து ஒன்றியங்களிலும் இன்று முதல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முடிவு செய்துள்ளது.புதுக்கோட்டையில் நடைபெற்ற அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.