Tamilnadu

News April 25, 2024

கடலூர்: சேலம்.. கடலூர் வரை நீட்டிப்பு

image

சேலத்திலிருந்து தினமும் புறப்படும் சேலம் – விருத்தாசலம் பாசஞ்சர் DEMU ரயில் (06122/06121) கடலூர் துறைமுகம் சந்திப்பு வரை வரும் 3-ம் தேதி முதல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது சேலத்தில் இருந்து விருத்தாசலம், ஊத்தங்கால் மங்கலம், நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி வழியாக கடலூர் துறைமுகம் சந்திப்பை வந்தடைகிறது. முன்பு இந்த ரயில் சேலம் – விருத்தாசலம் வரை மட்டுமே இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News April 25, 2024

கடலூர்: கொலை வழக்கு.. காவல்துறை அறிக்கை

image

கடலூர், ஸ்ரீமுஷ்ணத்தில் கடந்த 19ம் தேதி கோமதி என்பவர் கொலை வழக்கில், கைதானவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்திலும் வழக்கு தொடர்ந்ததால் நேற்று மேலும் 3 பேர் கைது எனவும் காவல்துறை அறிக்கை வெளியிட்டது. 2021ல் ஏற்பட்ட தகராறு தொடர்பாகவே தற்போது கோமதி மரணம் நடந்துள்ளது என அவரின் குடும்பத்தினரே தெரிவித்துள்ளனர். இதுதவிர வேறு எந்தக் காரணமும் இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

News April 25, 2024

திருச்சி அரங்கநாதர் கோயிலில் உண்டியல் காணிக்கை

image

வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்நிலையில் இன்று தற்போது பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது.

News April 25, 2024

அரியலூர் அருகே கத்தி குத்து 

image

ஜெயங்கொண்டம் கல்லாத்தூர் பகுதியை சேர்ந்த சூர்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜயராகவன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த விஜயராகவனும் அவரது சகோதரர் பரமேஸ்வரன் சூர்யாவை கத்தியால் குத்தினர். இதில் காயமடைந்த சூர்யாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து வழக்கு பதிந்த போலீஸார் இருவரையும் நேற்று இரவு கைது செய்தனர்.

News April 25, 2024

நாசரேத் பள்ளியில் கால்பந்து பயிற்சி

image

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் இலவச கால்பந்து பயிற்சி முகாம் வருகின்ற 01.05.2024 முதல் 10.05.2024 வரை  நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி கால்பந்து மைதானத்தில் 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கால்பந்து பயிற்சி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.  இதில் மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 25, 2024

தாணுமாலையன் சுவாமி கோவில் சிறப்புகள்

image

கேரளாவில் உள்ள இந்துக்களால் போற்றப்படும் 108 சிவாலயங்களில் சுசீந்திரமும் ஒன்று. 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கோவில் 30 சன்னதிகள் உள்ளன. மும்மூர்த்திகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் இக்கோவில் 9ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. தமிழ் மற்றும் கேரள பாணி கட்டடக்கலையில் அமைந்துள்ளது தனி சிறப்பாகும். மேலும் ஒரே கல்லால் செதுக்கப்பட்ட நான்கு இசைத்தூண்கள் கோவிலுக்கு அழகு சேர்க்கின்றன.

News April 25, 2024

பிஎஃப் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி துறை சார்பில் குறைதீர்க்கும் கூட்டம் ஏப்ரல் 29ஆம் தேதி கூடங்குளத்தில் நடைபெற உள்ளது. இங்குள்ள ஹெப்ரான் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் முகாம் நடைபெறும் என வருங்கால வைப்பு நிதி மண்டல உதவி ஆணையாளர் குமாரவேல் தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

தஞ்சாவூர் அருகே வெடிகுண்டு மிரட்டல்

image

நேற்று முன் தினம் காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு போன் செய்த ஒருவர் பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயில் தெப்பக்குளம் அருகே வெடிகுண்டு உள்ளதாக கூறியுள்ளார். இதனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நேற்று தொலைபேசி எண்ணை ஆய்வு செய்த போலீசார் மயிலாடுதுறையை சேர்ந்த சிங்காரவேலு என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் போதையில் செய்து உள்ளார்.இன்று (ஏப்,24) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News April 25, 2024

முதலமைச்சர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள்,3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டுக்கான விருதுக்கு மே.1 முதல் மே.15 வரை www.sdat.tn.gov.in இல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 25, 2024

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சிறப்பு

image

வரதராஜ பெருமாள் கோயில், திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம். இது சென்னைக்கடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள 31ஆவது திவ்ய தேசமாகும். நூறுகால் மண்டபத்தின் மூலைகளில் தொங்கும் கற்சங்கிலிகள் சிற்பக்கலையின் உற்சம். திருமங்கையாழ்வாரால் நான்கு பாசுரங்களாலும், பூதத்தாழ்வாரால் இரண்டு பாசுரங்களாலும், பேயாழ்வாரால் ஒரு பாசுரத்தாலும் இத்தலத்தை போற்றியுள்ளனர்.

error: Content is protected !!