Tamilnadu

News April 26, 2024

சேலம்: தந்தையை கொலை செய்த மகன் கைது

image

சேலம் அருகே சொத்து பிரச்னையில் தந்தையை, மகனே அடித்து கொன்ற சிசிடிவி காட்சி நேற்று(ஏப்.25) வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டம் கை.களத்தூர் போலீசார் நேற்று சக்திவேல் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். சொத்து பிரச்னையில் குழந்தைவேலுவை, அவரது மகன் சக்திவேல் அடித்துக் கொலை செய்த செய்தி அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

News April 26, 2024

நெல்லை: ஆணையர் அறிக்கை

image

திருநெல்வேலியில் பல்வேறு நிறுவனங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தற்பொழுது நடைபெற்று வரும் மக்களவை பொதுத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அவர்கள் மாநிலங்களுக்கு செல்ல விடுமுறை அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் முருகப்பிரசன்னா இன்று (ஏப்‌.26) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News April 26, 2024

நெமிலி: நேருக்கு நேர் மோதி 3 பேர் படுகாயம்

image

நெமிலி தாலுகா பன்னியூர் கிராமத்தை சேர்ந்த ஜலகண்டன், சதீஷ்குமார், உதயகுமார் ஆகிய 3 பேரும் ஒரே பைக்கில் நேற்று(ஏப்.25) இரவு வாலாஜா நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பன்னீர் கூட்ரோடு அருகில் செல்லும்போது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 3 பேரும் படுகாயம் அடைந்து 108 ஆம்புலன்ஸில் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பாணாவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 26, 2024

தூத்துக்குடியில் கடும் எச்சரிக்கை 

image

தற்போது மாம்பழ சீசன் என்பதால் விற்பனை அதிகரித்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ரசாயன கற்கள் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு கடைகளில் விற்பனை செய்யப்படும் மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்படுவதோடு விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 26, 2024

திருப்பூரின் அமைதியான பஞ்சலிங்க அருவி!!

image

உடுமலைப்பேட்டை அருகே திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இவ்விடம் தியானம், நீர்வீழ்ச்சி, கோவில் மற்றும் திருமூர்த்தி அணைக்கு பிரபலமானது. நவம்பர் முதல் ஜூன் மாதம் வரை அருவில் நீர் அதிகரித்து செழிப்பாக காணப்படுவதால் சுற்றுலாவிற்கு இதுவே ஏற்ற காலம். இந்த அருவி 5மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது. நெல்வயல்கள், சூரியகாந்தி தோட்டங்களுடன் அழகு செரிந்து இவ்வருவி காணப்படுகிறது.

News April 26, 2024

வேற்று மொழியில் அரசு பேருந்து

image

திண்டுக்கல் மாவட்டம் மதுரை கோட்டத்திற்குட்பட்ட TN57N2410 என்ற அரசு பேருந்தில் திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி செல்லும் அரசு பேருந்து என்று இடம் பெற்றிருக்கும் மின்னணு பெயர் பலகையில் வேற்று மொழி பெயர் பலகையுடன் திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு வந்தது. பொள்ளாச்சி பேருந்திற்காக காத்திருந்த பயணிகள் தமிழ் சொற்களுக்கு பதிலாக வேற்று மொழியில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

News April 26, 2024

திருப்பத்தூரின் ஜவ்வாது மலையின் சிறப்பு!!

image

கிழக்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான ஜவ்வாது மலை 260 ச.கி.மீ பரப்பளவு கொண்டது. மலையாளிகள் என்னும் பழங்குடியினர் இங்கு அதிகம் வசிக்கின்றனர். 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் இங்கு உள்ளன. இம்மலையிலுள்ள பாதிரி என்ற ஊரில் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த தடயங்களும், கீழ்செப்பிளி, மண்டபாறை ஆகிய இடங்களில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களும் உள்ளன. இங்கு சோழர்கால சிவன் கோவிலும், பவ்வேறு கால நடுகற்களும் கிடைக்கப் பெற்றன

News April 26, 2024

நெல்லைக்கு இயற்கை அளித்த கொடை!!

image

அகத்தியர் அருவி, பாபநாசம் நகருக்குத் தெற்கிலும், கீழ் பாபநாசத்துக்கு வடக்கிலுமாக மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்த அருவி நீரானது பாபநாசம் நீர்மின் உற்பத்தி நிலையத்தை அடைந்து, பின் அங்கிருந்து பாபநாசம் அணையின் நீர்பிடிப்புப் பகுதியைச் சென்றடைகிறது. அகத்திய முனிவருக்கு சிவன் பார்வதி இவ்விடத்தில் காட்சியளித்ததாக நம்பப்படுகிறது. நெல்லையின் பிரதான சுற்றுலாத் தலமாக இவ்வருவி உள்ளது.

News April 26, 2024

நாகையில் ஆண் சடலம் மீட்பு 

image

வேளாங்கண்ணி வெள்ளையாற்றின் முகத்துவாரத்தில் செருதூர் மீனவ கிராம கடற்கரையோரம் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 26, 2024

மதுரை மக்களே இன்றே கடைசி நாள்

image

மதுரை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றும் பணியாளா்கள் நிகழ் நிதியாண்டுக்கான காப்பீட்டுத் தொகை செலுத்துவதற்கு வெள்ளிக்கிழமை (ஏப்.26) கடைசி நாள் என மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளா் க. வாஞ்சிநாதன் அறிவித்துள்ளார். கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் போது மரணம் ஏற்பட்டால் குழு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பணியாளா்களுக்கு ரூ. 3 லட்சம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!