India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் மக்களவைத் தேர்தலுக்குப் பிந்தைய ஆய்வுக் கூட்டம் பாஜக சார்பில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமையில் மதுரை பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீநிவாசன் மற்றும் மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள் மதுரை நகர் தலைவர் திரு மகா சுசீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். வாக்கு பதிவின் போது தங்கள் கட்சிக்கு கிடைத்துள்ள ஆதரவு, வாக்கு சதவீதம் குறித்து ஆலோசனை நடத்தினர்.
தேனி கம்பம் அருகே உள்ள சுருளி மலையில் கைலாசநாதர் கோயில் பூத நாராயண கோவில் அமைந்துள்ளது. இந்த சுருளி அருவி தமிழ்நாட்டின் மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு மக்கள் அனைவரும் வருகை வந்து தன் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்து அருவியில் குளித்து நீராடி செல்வது வழக்கம். தற்போது வெயிலின் அளவு அதிகரித்துள்ளதால் சுருளி அருவி வறண்டு காணப்படுகிறது.
ஈரோடு, திண்டல் மலையில் முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி, ராஜகோபுரம் அமைக்கும் பணியை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதன் மதிப்பு ரூ.2.11 கோடி ஆகும். இந்நிலையில், 5 நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் தற்போது விரைவாக நடைபெற்று வருகிறது.
திருச்சியில் நேற்று (ஏப்.25) 104 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மே 1ஆம் தேதி முதல் திருச்சியில் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
கரூரில் நேற்று (ஏப்.25) 106.7 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மே 1ஆம் தேதி முதல் கரூரில் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
நாமக்கல்லில் நேற்று (ஏப்.25) 105 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மே 1ஆம் தேதி முதல் நாமக்கல்லில் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கடலூரில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், திருச்சியில் ஓடும் பஸ்சில் இருந்து இருக்கையுடன் கண்டக்டர் விழவில்லை. பஸ் இருக்கையை கண்டக்டர் சரி செய்தபோது தான் கழன்று விழுந்துள்ளது. இதற்கு அதிமுக ஆட்சியில் புதிய பஸ்கள் வாங்காததே காரணம். தற்போது 7 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 350 பஸ்கள் இயக்கப்பட உள்ளது என் கூறினார்.
சேலத்தில் நேற்று (ஏப்.25) 107 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மே 1ஆம் தேதி முதல் சேலத்தில் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
அருப்புக்கோட்டையில் சில தினங்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது.அருப்புக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவு வெள்ளரிக்காய் விவசாயம் நடைபெறுவதால் வெயிலின் வெப்பத்திலிருந்து காக்க பொதுமக்கள் ஆர்வத்துடன் வெள்ளரிக்காய் வாங்கி செல்கின்றனர்.பஜார் பகுதியில் விவசாயிகள் சாலையோரம் வெள்ளரிக்காய் வியாபாரம் செய்கின்றனர்.ஒரு கட்டு வெள்ளரிக்காய் ரூ.10 முதல் ரூ.20 வரை இன்று விற்பனை செய்யப்படுகிறது.
உலகப் புகழ் பெற்ற நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் ஆலயத்தில் சித்திரை மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு இன்று ஆஞ்சநேயருக்கு காலை பஞ்சாமிர்தம், தேன், பால் தயிர், மஞ்சள், சந்தனம் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பின்னர், சிறப்பு அலங்காரமாக முத்தங்கி சாற்றப்பட்டு துளசியால் அர்ச்சனை செய்த பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் பல்வேறு மாவட்ட மாநில பக்தர்கள் தரிசனம் பெற்றனர்.
Sorry, no posts matched your criteria.