Tamilnadu

News April 27, 2024

தலைக்கவசம் அணிந்து செல்ல டிஎஸ்பி அறிவுறுத்தல்

image

இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. இருப்பினும் நாகை மாவட்டத்தை பொருத்தவரை பலர் அதனை காற்றில் பறக்க விட்டு தலைக்கவசம் அணியாமல் சென்று வருகின்றனர். தற்பொழுது கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என டிஎஸ்பி பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

News April 27, 2024

மதுரை விமான நிலைய பாதுகாப்பு குறித்து ஆலோசனை

image

கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார், விமான நிலைய முதன்மை பாதுகாப்பு அலுவலர் கணேசன், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டண்ட் விஸ்வநாதன் தலைமையில் இன்று பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு மேற் கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

News April 27, 2024

கரூர் : லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

image

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த சுருளிராஜ் மற்றும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவரும் வேலுச்சாமிபுரத்தில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்த கரூர் மாநகர போலீசார் லாட்டரி விற்ற 2 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 5 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1500 பறிமுதல் செய்துள்ளனர்.

News April 27, 2024

சேலம்: ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

image

சேலம் – விருத்தாசலம் ரயில் மார்க்கத்தில் சின்னசேலம், ஆத்தூர் வழியாக பயணிகள் ரயில் இயங்கிக் கொண்டிருந்தது. இந்நிலையில் இந்தப் பயணிகள் ரயிலை கடலூர் வரை நீட்டிக்க வேண்டும் என மக்கள் நீண்ட ஆண்டுகளாகவே கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்ற ரயில்வே நிர்வாகம், வடலூர், நெய்வேலி வழியாக மே 2 முதல் கடலூருக்கு நீட்டித்துள்ளது. இதனால் மக்களின் நீண்ட ஆண்டு கால கோரிக்கை நிறைவேறி உள்ளது.

News April 27, 2024

கோவையில் தண்ணீர் தட்டுப்பாடு; ஆணையர் எச்சரிக்கை 

image

கோவையில் உள்ள பெரும்பாலான குளங்களும் வற்றிவிட்டது.குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆழ்துளை கிணறுகள் அமைத்து,குடிநீர் அல்லாத தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. கோவைக்கு குடிநீர் வழங்கும் அணைகளிலும் தண்ணீர் மட்டமும் குறைந்து கொண்டே வருவதாக இன்று கோவை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்

News April 27, 2024

கொடைக்கானல் வரும் முதல்வர்

image

முதல்வர் ஸ்டாலின் மாலத்தீவுக்கு சென்று குடும்பத்துடன் ஓய்வு எடுப்பதாக தகவல் வெளியான நிலையில், அதனை திமுக மறுத்துள்ளது. அதேநேரம் ஸ்டாலின் கொடைக்கானல் வர உள்ளார். ஏப்ரல் 29ம் தேதி குடும்பத்துடன் மே 4 வரை தங்கி ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து கொடைக்கானல் பாம்பார்புரம் தனியார் விடுதியில் ஒருவாரம் தங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

News April 27, 2024

திண்டுக்கல் : மாநில அளவிலான பெண்கள் கபாடி போட்டி

image

திண்டுக்கல் மாவட்டம் மொட்டணம்பட்டி ரோடு வன்னியர் திடலில் பெண்களுக்கான மாநில அளவிலான கபாடி இன்று (27.4.2024) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெற்ற முதல் நான்கு அணிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். காலிறுதியில் வாய்ப்பினை இழந்த அணிகளுக்கும் ஆறுதல் பரிசு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 27, 2024

கொடைக்கானல் வந்த அண்ணாமலை

image

தமிழக பாஜக தலைவரும் கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தனது குடும்பத்தினருடன் இன்று கொடைக்கானலுக்கு வருகை தந்துள்ளார். பாம்பார்புரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். நாளை மறுநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ள நிலையில் அண்ணாமலை இன்று கொடைக்கானலில் இருந்து தனது சொந்த ஊருக்கு செல்கிறார்.

News April 27, 2024

புதுவை ஜவகர் சிறுவர் இல்லத்தில் கோடை வகுப்புகள் துவக்கம்

image

புதுவை அரசு பள்ளிக் கல்வி இயக்ககத்தின் ஜவஹர் சிறுவர் இல்லத்தில் இலவச கோடை வகுப்புகள் மே 2 முதல் தொடங்குகிறது. இந்த ஆண்டு, கோடை விடுமுறையை முன்னிட்டு, ஜவகர் சிறுவர் இல்லத்தில் குழந்தைகளுக்காக பல்வேறு கலைகளை கற்பிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்புவோர் 0413 – 2225751 தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்

News April 27, 2024

அரசு பள்ளிகளில் 6417 பேர் சேர்க்கை

image

திருவாரூர் மாவட்டத்தில் வரும் கல்வி ஆண்டிற்காக ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் வரை 3697 மாணவ மாணவிகளும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை 2306 மாணவ மாணவிகளும் 9,10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் 414 மாணவ மாணவிகளும் என மொத்தம் 6417 பேர் புதிதாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை சேர்ந்துள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!