Tamilnadu

News June 3, 2024

விருதுநகர்:நாளை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை

image

விருதுநகர் லோக்சபா தொகுதியில் அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, சாத்தூர்,திருப்பரங்குன்றம்,திருமங்கலம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இந்நிலையில் விருதுநகர் லோக்சபா தொகுதி தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில் ஓட்டு என்னும் மையத்திற்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன. மேலும் 252 அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். அதிகபட்சமாக 23 சுற்றுகள் வரை ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன.

News June 3, 2024

திருச்சி:சிறுமியின் விபரீத செயல் 

image

திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரத்தைச் சோ்ந்த தம்பதியின் மகள் கடந்த 2.5 ஆண்டுகளாக சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்த இளைஞா் தன்னிடம் பேசாததால் மனஉளைச்சலில் இருந்த சிறுமி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.இது குறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News June 3, 2024

தென்காசி அருகே டாஸ்மாக் கடைகள் அடைப்பு

image

தென்காசி பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை 4ம் தேதி எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி தென்காசி மாவட்டத்திலுள்ள அரசு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் (FL1 FL2 FL3 FL3A, & FL11) ஆகிய மதுக் கூடங்கள் நாளை 4 ம் தேதியில் மூடப்பட்டிருக்கும் மற்றும் அன்றைய தினம் விற்பனை ஏதும் நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

News June 3, 2024

பெண்ணிடம் சில்மிஷம்: வாலிபர் திடீர் உயிரிழப்பு

image

அரக்கோணம் அடுத்த தண்டலத்தை சேர்ந்தவர் சேட்டு (42). இவர் நேற்று இரவு வீட்டுக்கு வெளியில் படுத்திருந்த பெண் ஒருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை பெண்ணின் உறவினர்கள் தாக்கியுள்ளனர். இதில் மயங்கி விழுந்த அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், இன்று சேட்டு இறந்தார். மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News June 3, 2024

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: 3 பேர் காயம்

image

கடலூர், கோழியூரை சேர்ந்த 5 பேர் காரில் திருச்சி சென்று விட்டு மீண்டும் நேற்று சொந்த ஊர் சென்றுள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் சின்னாறு பகுதியில் சென்ற போது, கார் சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் ஏறி, ஒரு டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளாகி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் டூவீலரில் வந்தவர் உயிரிழந்தார். காரில் வந்த 3 சிகிச்சை பெற்று வருகின்றனர். 

News June 3, 2024

தி.மலை: உடல் கருகி பலி

image

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம், அருணகிரிமங்கலம் ஊராட்சியைச் சோ்ந்த நம்மந்தங்குட்டை கிராமத்தில் வசிப்பவா் ரஞ்சினி பூமிநாதன். விவசாயியான இவா் தனது நிலத்தில் பசு மாட்டை கட்டி வைத்திருந்தாா்.
இந்த நிலையில், நேற்று இரவு திடீரென இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
இதில், நிலத்தில் கட்டி வைத்திருந்த பசு மாடு இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தது.

News June 3, 2024

செங்கல்பட்டு: திடீர் தீ விபத்து

image

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த, கிழக்கு கடற்கரை சாலை சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதியில் நேற்று திடீரென தீ பற்றியது. இதனால் புதரில் வெயிலில் காய்ந்திருந்த செடிகள் மீது தீப்பிடித்து அருகில் உள்ள பனை மரங்கள் மீது தீ பரவியது. இதில் 150 க்கும் மேற்பட்ட பனை மரங்கள் கருகின. கல்பாக்கம் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.

News June 3, 2024

விழுப்புரம்: மழையால் வீடுகள் சேதம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஒரு சில இடங்களில் லேசான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்தது. சூரைக்காற்று வீசியதால் பல இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. அந்த வகையில் விழுப்புரம் அருகே உள்ள காணை குப்பம் கிராமத்தில் மழை மற்றும் சூறைக்காற்று காரணமாக வீடுகளில் போடப்பட்டிருந்த சிமெண்ட் சீட்டுகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. சுமார் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கடும் சேதத்தைச் சந்தித்தன.

News June 3, 2024

நள்ளிரவில் உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் வேதனை

image

நாங்குநேரி சுங்கச் சாவடியில் சுங்கக் கட்டணம் நள்ளிரவு உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் வேதனை அடைந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு நாங்குநேரி சுங்கச் சாவடியில் கட்டணம் உயர்ந்தது. அதன்படி ஒரு வழி பயணத்திற்கு கார், ஜீப் கட்டணம் ரூ.110, மினி பஸ், வேன் ரூ.180, பேருந்து ரூ.375, மூன்று அச்சு வாகனங்கள் ரூ.410, நான்கு அச்சு வாகனங்கள் ரூ.590, ஏழு மற்றும் அதற்கு மேல் அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு ரூ.715 என உயர்ந்தது.

News June 3, 2024

திருவள்ளூர் விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

திருத்தணி, திருவள்ளூர், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கரும்பு பயிரிட்டு பதிவு செய்யாத விவசாயிகளை தொடர்புகொண்டு கரும்பு ஆலையின் அலுவலர் பதிவு செய்துவருகிறார். திருவள்ளூர் மாவட்டத்தில் கரும்பு சாகுபடிக்கு இதுவரை பதிவுசெய்யாத விவசாயிகள் பதிவு செய்யலாம் என நேற்று திருவள்ளூர் ஆட்சியர் பிரபுசங்கர் அறிவித்துள்ளார். விவரங்கள் பெற 9943966322 என்ற எண்ணை தொடர்புகொள்க.

error: Content is protected !!