India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டம் சேனவிளை பகுதியில் இரு அரசு பேருந்துகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் பகுதி வழியாக இயங்கி வந்த 3 அரசு பேருந்துகளை முற்றிலுமாக நிறுத்தி, தனியார் வாகனங்களுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக குற்றச்சாட்டி பேருந்து முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் இன்று நடைபெற்றது. ஏலத்தில் மூலனூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 492 பேர் கலந்து கொண்டு பருத்தி விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு 8,366 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இதன் மதிப்பு சுமார் 1.25 கோடி ஆகும்.
செங்கம் அடுத்த பழைய குயிலம் கிராமத்தில் மாரியம்மன் ஆலயத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் நேற்று பெண்கள் வேப்பிலை தோரணம் கட்டி வீதியில் தோறும் உலா சென்று கூல் ஊற்றி அம்மனை வழிபட்டனர். ராஜபாளையம் காமாட்சி அம்மன் ஆலயம் அருகே சிலம்பாட்ட கலைஞர்கள் மனித உடல் மீது தலைகீழாக நின்று தங்களுடைய தனி திறமையை வெளிப்படுத்தி மக்களை மகிழ்வித்தனர்.
சிதம்பரத்தில் உள்ள தில்லை நடராஜர் கோயில், தில்லை கூத்தன் கோயில் என்றும் அறியப்படுகின்றது. இவ்வூர் தில்லை என புராணகாலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. இத்தலம் 4000 ஆண்டுகளுக்கும் பழமையானதாக கருதப்படுகிறது. சைவ குரவர்கள் நால்வராலும் தேவாரம் பாடப்பட்ட தலமாகும். மனித உடலே கோயில் என்பதைக் குறிக்கும் வகையில் இக்கோவில் அமைக்கப்படிருக்கிறது. கிழக்கு கோபுரத்தில் 108 சிவதாண்டவச் சிற்பங்கள் செதுக்கப்படுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து கொச்சுவேலி செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் மே 1ம் தேதியில் இருந்து 29ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரயில் மே 12ம் தேதியில் இருந்து 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரும் வாராந்திர சிறப்பு ரயில் (06012) மே 5ம் தேதியில் இருந்து 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
மேலப்பாளையத்தில் மிக முக்கிய சாலையான நேதாஜி சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக குழிகள் தோண்டப்பட்டு பணிகள் இன்று (ஏப்.27) துவங்கப்பட்டது. ராட்சத எந்திரங்கள் மூலம் குழாய்கள் பணிக்கு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் காவல் நிலையம் வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது.ஓரிரு வாரங்களில் இந்த பணிகள் முடிவடைந்ததும் மீண்டும் போக்குவரத்து துவங்கும் என கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளது. இந்நிலையில் கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகுகள் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் பெரியதாழை வரையில் கடலோர காவல் படையினர் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
சிவகங்கை அரசு மருத்துவமனை அருகேயுள்ள தனியார் ஹோட்டல் அருகில் ஆதரவற்ற 70வயது முதியவர் சாலையில் செல்வோரிடம் யாசகம் கேட்டு கொண்டிருந்ததை பார்த்த ஹோட்டல் உரிமையாளர் ராஜேந்திரன் முதியவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த முதியவர் சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிந்து இன்று விசாரித்து வருகின்றனர்.
புதுவை கடற்கரை சாலையில் சிற்றுண்டி கடை வைத்து நடத்தி வரும் சமூக ஆர்வலரான அருண் தன்னுடைய வாகனத்தில் ஐஸ் பெட்டியில் மோர், நன்னாரி சர்பத், இளநீர், குடிநீர், லெமன் ஜூஸ் ஆகியவற்றுடன் வெயிலில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், போக்குவரத்து போலீசார் ஆகியோருக்கு அவர்கள் பணிபுரியும் இடத்துக்கே சென்று அவர்கள் விரும்பிய குளிர்பானங்களை இலவசமாக கொடுத்து வருகிறார்.
வாணியம்பாடி அடுத்த அளிஞ்சிகுளம் கிராமத்தில் உள்ள ஊதுபத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். உடன் எம்எல்ஏ செந்தில்குமார், ஒன்றிய கழக செயலாளர் சாம்ராஜ் உள்ளிட்ட பலரும் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.