Tamilnadu

News April 27, 2024

ட்ரோன்கள் பறக்க தடை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரக்கோணம் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாலாஜா AAA கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மையத்திலிருந்து சுமார் 3கி மீ சுற்றளவு வரை ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் வாக்கு எண்ணும் நாட்கள் (04.06.2024) வரை பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

News April 27, 2024

விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி

image

பெரம்பலூர் மாவட்டத்தில் விளையாட்டு வீரர்களுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி வரும் ஏப்ரல் 29/4/2024 முதல் 13/5/2024 வரை நடைபெறவுள்ளது. இதற்கு ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் 18-வயதிற்கு கீழ் உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். விளையாட்டு அரங்கில் நுழைவு கட்டணமாக ரூ:200 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு 7401703516 என்ற எண்ணை தொடர்பு கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News April 27, 2024

“ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் கவலை இல்லை”

image

சர்.பிட்டி தியாகராயர் 173வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்ட படத்திற்கு இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்தியில் ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு கவலை இல்லை. சென்னையில் போடப்பட்ட தரமற்ற சாலைகள் குறித்து மாநகராட்சி பதில் சொல்ல வேண்டும் என்றார்.

News April 27, 2024

திருப்பத்தூர்: கோடைகால பயிற்சி

image

ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மே 13ஆம் தேதி வரை மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகள் தடகளம், கபடி,கூடைபந்து, கால்பந்து மற்றும் கைப்பந்து என 5 போட்டிகளுக்கு பயிற்சிகள் நடைபெற உள்ளது. ரூ.200 கட்டணம் செலுத்தி மாணவர்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News April 27, 2024

ஈரோடு பண்ணாரியம்மன் கோயில் சிறப்புகள்!

image

சத்தியமங்கலம் அருகே பண்ணாரி என்னும் ஊரில் ஸ்ரீ பண்ணாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. சுற்றி வனமாக இருக்கும் இப்பகுதியின் நடுவின் பெரிய அரண்மனை போன்று காட்சியளிக்கிறது இக்கோவில். இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இக்கோவிலின் வரலாறாக செவிவழிச் செய்தியாக கதைகள் கூறப்படுகின்றன. அழகிய கோபுரத்துடனும், அர்த்த, மகா, சோபன மண்டபத்துடன் இக்கோவில் உள்ளது.

News April 27, 2024

கொடைக்கானல்: 7 கி.மீ தூரம் போக்குவரத்து பாதிப்பு

image

கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ள நிலையில், தரைப்பகுதிகளில் நிலவும் வெப்பத்தை சமாளிக்கவும் சுற்றுலாப்பயணிகளின் வருகை காலை முதலே அதிகரித்துள்ளது. இதனால் நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  ஏரிச்சாலை, கலையரங்கம், மூஞ்சிக்கல், கல்லறை மேடு, அப்சர்வேட்டரி, சென்பகணூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக 100- க்கணக்கான வாகனங்கள் அணி வகுத்து சென்றன. 

News April 27, 2024

தி.மலை: கோடைகால விளையாட்டு பயிற்சி

image

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் தி.மலை மாவட்ட விளையாட்டரங்கத்தில் வரும் 29ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி கட்டணம் ரூ. 200-ஐ ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

News April 27, 2024

திண்டுக்கலின் அழகிய கோக்கர்ஸ் வாக்!

image

கொடைக்கானல் ஏரிக்கு அருகில் உள்ளது கோக்கர்ஸ் வாக். ஒரு கிலோமீட்டர் நடைபாதையே கோக்கர்ஸ்வாக், இருப்பினும் மற்ற நடைபாதைவிட இது சிறப்பாக விளங்குகிறது. இந்த நடைபாதை 1872 இல் லெப்டினன்ட் கோக்கரால் செங்குத்தான மலைச்சரிவில் கட்டப்பட்டது. இங்கு உள்ளூர் வாசிகளின் மலையில் உற்பத்தியான பொருட்களும், பழங்களும் கிடைக்கின்றன. இங்கு வாடகைக்கு கிடைக்கும் சைக்கிள்களில் சுற்றி பார்த்து இயற்கையின் அழகை அனுபவிக்கலாம்.

News April 27, 2024

நீர், மோர் பந்தல் திறப்பு

image

விருதுநகர், காரியாபட்டி என்.ஜி.ஓ நகர் பகுதியில் கோடை வெயிலை தவிர்க்க நண்பர்கள் சார்பாக சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்காக நீர், மோர் பந்தலினை காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் ஆர்.கே.செந்தில் மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன் ஆகியோர் இன்று திறந்து வைத்து. பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி தண்ணீர் வழங்கினார்கள்.

News April 27, 2024

வேலூரில் ஆட்சியர் ஆய்வு

image

வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வே. இரா.சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (27.04.2024) தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் அதிகாரிகள் உடனிருந்தனர்.

error: Content is protected !!