Tamilnadu

News April 27, 2024

நெல்லை மாநகராட்சி ஆணையர் சலுகை அறிவிப்பு

image

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் இன்று (ஏப்ரல் 27) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து விதமான கட்டிடங்களுக்கும் 2024-25ஆம் ஆண்டு முதல் அரையாண்டிற்கான சொத்து வரியை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு அவரது சொத்து வரியில் இருந்து 5% தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

News April 27, 2024

திருவள்ளூர் அருகே ஒருவர் அடித்து கொலை

image

திருவள்ளூர் அருகே கீழச்சேரி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (70), அதே பகுதியில் இரவு காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு பணிக்கு வந்த செல்வம் வீட்டிற்கு செல்லவில்லை. அவரது உறவினர்கள் இன்று காலையில் சென்று பார்த்தபோது அவர் தலை பகுதியில் பலத்த வெட்டு காயங்களுடன் கீழச்சேரி அருகே இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து மப்பேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 27, 2024

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று முதல் மே.1ஆம் தேதி வரை வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3-5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும். வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம். வெளியில் செல்லும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் குடை மற்றும் தண்ணீர் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 27, 2024

மதுரை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

image

மதுரை மாவட்டத்தில் இன்று முதல் மே.1ஆம் தேதி வரை வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3-5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும். வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம். வெளியில் செல்லும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் குடை மற்றும் தண்ணீர் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 27, 2024

தி.மலை: மளமளவென குறையும் அளவு

image

செங்கம் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் சாத்தனூர் அணையின் முழு கொள்ளளவு 109 அடியாகும். தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து மிகக் குறைவாக உள்ளது. தற்போது அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்றைய நீர்மட்டம் 80.8 அடியாக உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 27, 2024

கரூர்: அதிகப்படியான வெப்ப அலை இருக்கும்

image

கரூர் மாவட்டத்தில் மே ஒன்றாம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து காணப்படும் எனவும், கடந்த 24 மணி நேரத்தில் கரூரில் 40 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது எனவும் கூறியுள்ளது.

News April 27, 2024

கடும் வெயில்: பெற்றோர்களின் கவனத்திற்கு

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், குழந்தைகளை பெற்றோர்கள் கவனமுடன் கண்காணித்துக் கொள்ள வேண்டும் என்றும். வெயில் நேரங்களில் குழந்தைகள் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார்.

News April 27, 2024

புதுக்கோட்டை: பாம்பு கடித்து சிறுவன் பலி

image

காரையூர், விளாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ்(6) நேற்று மாலை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த பாம்பு கடித்ததில் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.  அவரை மீட்டு அருகிலிருந்தவர்கள் புதுகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மாதேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து காரையூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். 

News April 27, 2024

கடலூர்: கடும் எச்சரிக்கை 

image

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள நடைபாதையில் ஏராளமான கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியருக்கு புகார் வந்தது. இதனைத்தொடர்ந்து இன்று வருவாய் கோட்டாட்சியர் அபிநயா நேரடியாக பேருந்து நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்பொழுது நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைத்திருந்தவர்களை உடனடியாக அகற்றுமாறு எச்சரிக்கை விடுத்தார்.

News April 27, 2024

திருப்பத்தூர்: திமுக நிர்வாகி தம்பி மரணம்

image

வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை பகுதியில் ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தம்பி சதீஷ்குமார் இன்று உடல்நல குறைவால் உயிரிழந்தார்.  இச்செய்தி அறிந்த ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ் நேரில் சென்று மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

error: Content is protected !!