India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூரில் அமைந்துள்ள கிபி.14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரஞ்சன்குடிகோட்டை விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. பின் ஆற்காடு நவாப் வழி வந்தவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்தது. தற்போது இந்திய தொல்பொருள் அளவை கழகத்தின் பராமரிப்பில் உள்ளது. கற்கோட்டையான இதில் 3 அடுக்கு அரண்களும், மாளிகை, குடியுருப்பு கட்டடங்கள், மசூதி, சுரங்க அறைகள் ஆகியவை உள்ளன.
சிக்கல் சிங்காரவேலன் கோவில் என்றழைக்கப்படும் நவநீதீஸ்வரர் கோவில் சிக்கல் என்னும் ஊரில் அமைந்துள்ளது. 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவில் சிவனும் விஷ்னுவும் ஒரே இடத்தில் அமைந்திருக்கும் தொன்மையான கோவில்களில் இதுவும் ஒன்று. 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில் தமிழ் கட்டடக்கலையில் வடிவமைக்கப்படுள்ளது. மூலவர், 12 கைகளைக் கொண்டு ஆறுமுக வடிவில் காட்சிதருகிறார். இங்கு சரவணப் பொய்கை குளமும் உள்ளது.
புனித இதய பசிலிக்கா ஆலயம் புதுச்சேரி ரயில் நிலையத்தில் அமைந்துள்ளது. 1902- 1907ஆம் ஆண்டு இவ்வாலயம் கட்டப்பட்டது. மேதகு.காந்தியால் 1907 இல் அருட்பொழிவு செய்து முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. 2008-2009 இவ்வாலயத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. குறிப்பாக பசிலிக்காவை சேர்த்து தமிழகத்தில் 6, இந்தியாவில் 20 மற்றும் ஆசியாவில் 50 பசிலிகாக்களும் உள்ளன.
பிச்சாவரம் சிதம்பரத்துக்கு அருகே வங்க கடலை ஒட்டி அமைந்துள்ளது. இவ்வூரில் உள்ள சதுநில காடுகள் அல்லது மங்குரோவ் காடுகள் உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடுகளாகும். இந்த பிச்சாவரம் காடு 2800 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.சிறுசிறு தீவாக காட்சியளிக்கும் இக்காடுகளில் 41 குடும்பங்களைச் சேர்ந்த 177 வகையான சிற்றினங்கள் வாழ்கின்றன. இக்காடுகளில் சுரபுன்னை மரங்கள் நிறைந்திருக்கின்றன.
மயிலாடுதுறை காவல் நிலையம் அருகே மற்றும் காந்திஜி சாலையில் நகராட்சி சார்பில் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகள் இன்று நடைபெற்றது. தொடர்ந்து இந்த பணிகளை நகர் மன்ற தலைவர் செல்வராஜ் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து பணிகளை துரிதமாக முடிக்க உத்தரவிட்டார்.
சென்னை பீமனாம்பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், குடிநீர் வசதிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். சுகாதாரப் பணியாளர்கள் மூலம் 75 பொது இடங்களில் ஓ.ஆர்.எஸ். கரைசல் இன்று (திங்கட் கிழமை) முதல் வழங்கப்படுகிறது.
மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்தினர் இன்று திருச்சி கோட்ட மேலாளரை நேரில் சந்தித்தனர். அப்போது, மயிலாடுதுறையில் இருந்து காரைக்குடிக்கு சென்ற ரயிலை மயிலாடுதுறையில் உள்ள பயணிகளும் பயன்படுத்துவதற்கு வசதியாக ஏற்கனவே இயக்கப்பட்ட நேரத்தில் இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினர்.
மன்னார்குடியில் இருந்து ஜோத்பூர் வரை செல்லும் பகல் கீ கோத்தி விரைவு ரயில் வண்டிகள் இன்று முதல் எல் ஹெச் பி பெட்டிகள் கொண்டதாக மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படுகிறது. வழக்கமான கன்வென்ஷனல் கோச் – க்கு பதிலாக எல் ஹெச் பி கோச் -கள் மிகவும் பாதுகாப்பானவை. அதிக வேகத்தில் செல்லும். அதிக எடை சுமக்கும் ஆக சிறந்த பயண அனுபவத்தை தரதக்கவையாகும் எனவே, இன்று மாலைகள் அணிவித்து சிறப்பாக வழியனுப்பி வைக்கப்பட்டது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மேல் நாரியப்பனூர் கிராமத்தில் ரயில்வே நிலையம் உள்ளது. இந்த ரயில்வே நிலையத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ரயில்வே நிலையத்தை சுற்றி அதிக அளவு குப்பைகள் காணப்படுகின்றன. இதனால் ,ரயில்வே நிலையத்தின் தூய்மையானது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே இதை அகற்ற ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா லாலாபேட்டை ஆண்டியப்பன் நகரை சேர்ந்தவர் வீராசாமி (70). இவர் மீன் வியாபாரம் செய்து வருகின்றார். நேற்று முன்தினம் இவரின் வீட்டின் கேட்டை சிலர் தட்டிக் கொண்டிருந்துள்ளனர். இதுகுறித்து கேட்ட வீராச்சாமி, மனைவி பாப்பாத்தியை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தமிழரசன், மோகன் உள்ளிட்ட 5 பேர் மீது லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.