India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்கு பெட்டி மின்னணு இயந்திரங்களை நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மருத்துவர் ச.உமா இன்று திருச்செங்கோடு வட்டம், எளையாம்பாளையம் விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரி, குளம், ஆற்றுப்படுகைகளில் அரசு அனுமதியின்றி நடைபெற்று வரும் மணல் கொள்ளையை தடுக்கக்கோரி இன்று (ஏப்ரல்-29) பாமக சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறையில் உள்ள தரங்கம்பாடி கடற்கரையில் டேனிஷ்பர்க் கோட்டை உள்ளது. தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் மே, ஜூன், ஜீலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் ஓசோன் ஆற்று வீசும். மன்னன் மாறவர்மன் குலசேகர பாண்டியனால் நிலம் வழங்கப்பட்டு 1306 ஆம் ஆண்டு மாசில்லாமணி நாதர் கோவில் கடற்கரை ஓரம் கட்டப்பட்டது. இந்த கடற்கரைக்கு மக்கள் வருகை அதிகமாகி வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் பொதுமக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள மிகவும் சிரமப்படுகிறார்கள். தினசரி வெப்பநிலை 105.5 தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது. வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் வெப்ப அலை வீசி வருவதால் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
சென்னை கடற்கரை – வேலூர் கண்டோன்மெண்ட் இடையே இயக்கப்பட்டு வரும் தினசரி மின்சார ரயில், மே 2ம் தேதி முதல் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரையில் மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் நள்ளிரவு 12 மணிக்கு திருவண்ணாமலை சென்றடைகிறது. அங்கிருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் ரயில், காலை 9.50க்கு சென்னை கடற்கரை வந்தடையும்.
மாமல்லபுரம் அருகே இடைக்கழிநாடு, கூவத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தனியார் தோப்புகளில், ருமானி, பங்கனபள்ளி , நீலம் உள்ளிட்ட மாம்பழ வகைகள் பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் மாம்பழங்கள் இயற்கையாக பழுக்க வைப்பதால் இந்த பழங்களை வாங்க மொத்த வியாபாரிகள், சில மாதங்கள் முன்பே, குறிப்பிட்ட தொகைக்கு குத்தகை பெறுகின்றனர். இந்நிலையில் தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால் விற்பனை களைகட்ட துவங்கியுள்ளது.
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, 9 பயனாளிகளுக்கு ரூ.8,16,731 மதிப்பில் செயற்கை கால்களை அரசு வேலூர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இன்று (ஏப்ரல் 29) நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். இந்நிகழ்வின்போது மருத்துவ கல்லூரி முதல்வர் பாப்பாத்தி, மருத்துவ கண்காணிப்பாளர் ரதிதிலகம் ஆகியோர் உடனிருந்தனர்.
கேரளாவில் பறவை காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், பந்தலுார் அருகே சேரம்பாடி சோலாடி சோதனை சாவடியில் கால்நடை டாக்டர் நவீன் தலைமையிலான குழுவினர் கேரளாவில் இருந்து தமிழக எல்லைக்குள் வரும் சரக்கு வாகனங்கள் அனைத்தையும் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கின்றனர். கிராம பகுதிகளில் கோழிகள், வாத்துக்கள் வளர்ப்போர் மத்தியில் பறவை காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தகுதி 4- (Group-IV) பணிகளுக்கான போட்டித் தேர்வு வருகின்ற ஜூன் 9 தேதி அன்று தருமபுரி மாவட்டத்தில் நடைபெறுவதையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தலைமையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் பொதுமக்களுக்கு ஜூன் மாதம் வரை நாள்தோறும் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சியை இன்று (ஏப்ரல் 29) ஆட்சியர் ச.அருண்ராஜ் தொடங்கி வைத்தார். மகளிர் திட்ட இயக்குனர் மணி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.