Tamilnadu

News April 29, 2024

தூத்துக்குடி: 5 கிலோ ஆந்திரா கஞ்சா

image

தூத்துக்குடி சிப்காட் போலீசார் நேற்று நான்காம் ரயில்வே கேட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு தூத்துக்குடியைச் சேர்ந்த மகேஷ் குமார் என்பவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

News April 29, 2024

வாக்கு பெட்டி மையத்தினை ஆய்வு செய்த ஆட்சியர்

image

இன்று காஞ்சிபரம், பொன்னேரிக்கரை, அண்ணா பொறியியல் கல்லூரியில் 2024 பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்குகள் பெற்ற வாக்கு பெட்டிகள் பாதுகாப்பு மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.சண்முகம், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் மு.கலைவாணி ஆகியோர் உடனிருந்தனர்.

News April 29, 2024

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டார்

News April 29, 2024

சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில் உத்தரவு

image

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் அமைந்திருக்கும் கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கை, கோயில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. டி.ஆர்.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த இந்த வழக்கை நாளை சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News April 29, 2024

திருச்சி: கழிவறையில் துர்நாற்றம்.. பயணிகள் அவதி

image

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் மதுரை, தஞ்சை, கரூர், சேலம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான பஸ்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் சென்னை- தஞ்சை பகுதிகளுக்கு செல்லும் வழித்தடத்தில் உள்ள ஆண்கள் கழிவறையில் துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவறையை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

News April 29, 2024

கரூர் அரசு அருங்காட்சியகம் சிறப்புகள்!

image

1982 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கரூர் தொல்லியல் அருங்காட்சியகம் கரூர் நகரத்தின் மத்தியில் அமைந்துள்ளது. கரூர் பகுதியில் 1973,1977,1993 காலங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றது. அவ்வாய்வில் கிடைத்த ரோமானியர், சேரர், சோழர், பாண்டியர்களின் காசுகள், பல்லவர் காசுகள், பிற்கால பாண்டியர், ராசராசன், நாயக்கர் கால காசுகளை இங்கு காட்சிக்கு வைத்துள்ளனர். ஓலைச்சுவடிகள், செப்புத் தட்டுகள் போன்றவையும் உள்ளன.

News April 29, 2024

செங்கல்பட்டு: நூதன முறையில் செயின் பறிப்பு

image

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த விஐபி நகரைச் சேர்ந்த தம்பதி ராஜாராம் (68) – லட்சுமி (58), நேற்று காலை லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் வீடு வாடகைக்கு வேண்டும் என கூறியுள்ளார். லட்சுமி எதிர்பாராத நேரத்தில் திடீரென அவரது கழுத்தில் இருந்த 8 சவரன் தங்க சங்கிலியை பறித்து தப்பியோடினார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 29, 2024

அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி, தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 29, 2024

அரசு தலைமை மருத்துவமனையை ஆய்வு செய்த ஆட்சியர்

image

இன்று காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் திடீரென நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மேலும் உள்நோயாளிகளிடம் மருத்துவம் குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து பொதுவாக மருத்துவ ஆலோசனைக்காக காத்திருந்த முதியவரிடம் குறைகளை கேட்டறிந்தார். உடன் இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு.கோபிநாத் இருந்தார்.

News April 29, 2024

உலக செஸ் போட்டி: அரியலூர் சிறுமி சாம்பியன்

image

ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் 25.04.2024 முதல் 29.04.2024 வரை நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் under 10 Rapid பிரிவில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த சர்வாணிக்கா இந்தியா சார்பில் கலந்து கொண்டு மொத்தம் 11 சுற்றுகளில் 9 வெற்றிகளை பெற்று தங்கம் வென்று உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வண்ணமே இருக்கின்றன.

error: Content is protected !!