India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவை சந்தித்துள்ளார். திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட நவாஸ் கனி முன்னிலை பெற்றுவருகிறார்.
தென்காசி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆய்க்குடி தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதல் சுற்றில் தென்காசி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் 1126 வாக்குகள், அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி 618 வாக்குகள். பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ஜான்பாண்டியன் 971வாக்குகள் பெற்றுள்ளன.
2024 தேர்தலில் வேலூர் தொகுதியில் மொத்தம் 73.42% வாக்குகள் பதிவாகி உள்ளன. இன்று முதற்கட்டமாக காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் என்னும் பணி துவங்கியது. இதில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தும் 7215 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக சார்பில் ஏ.சி.சண்முகமும் 2695 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், அதிமுக சார்பில் பசுபதி 634 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளனர்.
தூத்துக்குடி மக்களவை தொகுதி வாக்குகள் என்னும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் இரண்டாவது சுற்றில் இந்தியா கூட்டணியில் உள்ள திமுக 15 ஆயிரத்து 952 வாக்குகளும், அதிமுக 4038 வாக்குகளும், பாஜக கூட்டணி கட்சியான தமாகா 600 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 3131 வாக்குகளும் பெற்றுள்ளது.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், மாவட்டத்தில் இரண்டாவது இடத்தில் அதிக வாக்குகளைப் பெற்ற கட்சியாக நாம் தமிழர் கட்சி உருவாகியுள்ளது. இந்த நிலையில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் நாம் தமிழர் கட்சி 1,423 வாக்குகள் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
விருதுநகர் மக்களவைத் தொகுதியின் வாக்குகள் எனப்படுகின்றன. வாக்கு என்னும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்சுற்று வாக்கு எண்ணிக்கையில் தற்போது தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் முன்னணியில் உள்ளார்.
நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு என்னும் படி அரசு பொறியியல் கல்லூரியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் 3817 வாக்குகள். அதிமுக வேட்பாளர் ஜான்சிராணி 522, பாரதிய ஜனதா வேட்பாளர் நயனார் நாகேந்திரன் 2157, நாம் தமிழர் 774 வாக்குகள் பெற்றுள்ளன.
திண்டுக்கல் நாடாளுமன்ற பொது தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தம் கடந்த சில நிமிடங்கள் முன்பு 5000-த்தை தாண்டிய நிலையில் தற்பொழுது நிலையில் 9- ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
நாகை நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8:00 மணி முதல் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி முடிந்த நிலையில் தபால் வாக்குகளில் சிபிஐ வேட்பாளர் வை. செல்வராஜ் தொடர்ந்து முன்னிலை வைத்து வருகிறார். அதனைத் தொடர்ந்து முதல் சுற்று வாக்குகள் எண்ணும் பணியில் சுமார் 8400 வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஐ வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் முதல் சுற்றில் திமுக 5343 வாக்குகள், நாம் தமிழர் 1423, பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் 1388 வாக்குகள் பெற்றுள்ளது. தற்போது 2-வது சுற்று வாக்குகள் என்னும் பணி நடைபெற்று வருகிறது. நாம் தமிழர் கட்சி மாவட்டத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதிமுக நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.