India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் இருந்து குழந்தை அறுவை சிகிச்சை, நரம்பியல், சிறுநீரகவியல், இதயவியல் மற்றும் மனநல மருத்துவம் சம்பந்தமான சிறப்பு மருத்துவர்கள் வரும் மே.3ஆம் தேதி அன்று காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வருகை தந்து காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புக்கு ஏப்.30 கடைசி தேதி என வெளியான செய்திக்கு முதுகலை படிப்புக்கு என்று எந்த கடைசி தேதியும் நிர்ணயிக்கவில்லை என்றும், மாணவர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் அதிகாரப்பூர்வ இணையதளமான www.pondiuni.edu.in கிடைக்கும் தகவல்களை நம்புமாறு தெரிவிக்கப்பட்டது.
சென்னை: நாளை (மே.1) அரசு விடுமுறை என்பதால் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, காலை 8 முதல் நண்பகல் 11 வரையும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியிலும் காலை 5-8 மணி வரை, நண்பகல் 11 முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8-10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடைகாலத்தை ஒட்டி காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் உதவி ஆய்வாளர் ராஜிவ் ஏற்பாட்டில், வெப்பத்தை தணிக்கும் வகையில் பொதுமக்களுக்கு இன்று மோர் வழங்கப்பட்டது. பொதுமக்கள் அதிகம் பயணிக்கும் பகுதியான மூங்கில் மண்டபம் பகுதியில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில் போக்குவரத்து காவல்துறையின் சேவையை பாராட்டி, அவர்களுக்கு சமூக ஆர்வலர் ஒருவர் கூலிங் கிளாஸ் வழங்கினார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பெளா்ணமியையொட்டி வருகை தந்த பக்தர்களின் காணிக்கை இன்று எண்ணப்பட்டது. ரூ.2 கோடியே 23 லட்சத்து 71, 962 ரொக்கமும், 365 கிராம் தங்கமும், 2.838 கிலோ வெள்ளியும் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
கோடை கால ஓய்வுக்காக முதல்வர் ஸ்டாலின் தனது குடும்பத்துடன் நேற்று கொடைக்கானல் வந்தார். இந்நிலையில், இன்று மாலை வேளையில் பசுமை பள்ளத்தாக்கு அருகே உள்ள கால்ப் கிளப் மைதான பகுதிகளில் நடைபயிற்சி மேற்கொண்டார். மேலும் தொடர்ந்து கால்ப் விளையாடினார்.
கடும் கோடை வெப்பத்தின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் விதமாக, மேல்மலையனூர் வட்டம், வளத்தி ஊராட்சியில் சுகாதாரத் துறை சார்பில் ORS கரைசலை பொதுமக்களுக்கு திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் இன்று (ஏப் 30) வழங்கினார்.
இந்நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன், வளத்தி ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி ஜெயக்குமார், துணைத் தலைவர் கோவிந்தன் உள்ளிடோர் உடனிருந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே துவரை பயிர் பயிரிடப்படுகிறது. பொய்கை அருகே பிள்ளையார்குப்பம், கந்தனேரி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் துவரை பயிர் பயிரிட்டு வருகின்றனர். இந்தநிலையில் வேலூர் அருகே பிள்ளையார்குப்பத்தில் பயிரிடப்பட்டுள்ள துவரை பயிர்கள் வெயில் காரணமாகவும், தண்ணீரின்றியும் கருகி உள்ளது.
இதனால் வேதனையடிந்து அந்த செடிகளை விவசாயிகள் அழித்து வருகின்றனர்.
குன்னூர் நகர மன்ற தலைவர் விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை செயலாளர் பா.மு.வாசிம் ராஜா அவர்கள் இன்று
குன்னூர் நகராட்சி 10வது வார்டு டைகர் ஹில் பகுதியில் 28 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்ட தார் சாலையினை அப்பகுதி நகரமன்ற உறுப்பினர் ஐ.பாக்கியவதி அவர்களுடன் ஆய்வு செய்தார். உடன் மாவட்ட பிரதிநிதி எஸ்.மணிகண்டன் MC, ஒப்பந்ததாரர் உள்ளனர்.
மண்டபம் குஞ்சார்வலசையை சேர்ந்தவர் ராஜேஷ் (42). ராமேஸ்வரம் கிளை அரசு போக்குவரத்து கழக மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மண்டபம் போலீசார் ராஜேஷை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விரைவு மகளிர் கோர்ட்டு நீதிபதி கோபிநாத் மேற்கண்ட ராஜேஷுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Sorry, no posts matched your criteria.