India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 10 மணி வரை) சேலம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தருமபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் கோடை காலத்தில் சீரான குடிநீர் வழங்குவது குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில், தருமபுரி கலெக்டர் சாந்தி, கிருஷ்ணகிரி கூடுதல் ஆட்சியர் வந்தனா கார்க், சேலம் கூடுதல் ஆட்சியில் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிலை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி வருவாய் துறையினர், காவல்துறையினர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
திண்டுக்கல்லில் கடந்த 29 ஆம் தேதி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவை காணவில்லை என திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் ஏ.எஸ்.பி.சிபின் அவர்கள் தலைமையில் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளின் மூலம் ஆய்வு செய்து சந்தானம் என்ற ஆட்டோ திருடனை இன்று காவல்துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர்.
நாமக்கல்லில் கடந்த 30 ஆம் தேதி சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் சண்முகநாதன் மற்றும் அவரது மகள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விசாரணையில் நதியாவின் மகன் பகவதி விஷம் வைத்தது தெரியவந்தது. இதில் முதியவர் சண்முக நாதன் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது நதியாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பெற்ற மகனே தாய்க்கு விஷம் வைத்து கொன்றது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. இன்று (மே.3) அதிகபட்ச வெயிலாக 108.5°F வெயில் பதிவானது. இது நேற்றை விட வெயில் அளவு இன்று சற்று குறைந்து காணப்பட்டது. மேலும் இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு புதியதாக மனநல இல்லம் அமைப்பதற்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (மே.3) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், மாவட்ட மனநல மருத்துவர் சிவாஜிராவ், மாவட்ட சமூக நல அலுவலர் உமா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி கருங்குளத்தை சேர்ந்த ரங்கசாமி, ஜஸ்டின் ஆகியோர் அருகே வசிப்பவர்கள். இவர்கள் இருவரும் நேற்றும் மது அருந்திவிட்டு வாய் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சனை பெரிதாகவே இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது ஜஸ்டின், ரங்கசாமியை கடுமையாக கடித்துள்ளார். இதனை அடுத்து ரங்கசாமி அளித்த புகாரின் பேரில் போலீசார் ஜஸ்டினை நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் பதிவானது. சாலைகளில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள், வாகனங்களை சரிவர இயக்க முடியாமல் அவதிப்பட்டனா். உணவகங்கள், வணிக நிறுவனங்களில் வியாபாரம் குறைந்து காணப்பட்டது.
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் நிறுவனம் மூலம் ஒரு ரூபாய்க்கு மோர் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும். மே, ஜூன் மாதங்களில் 300 யூனிட் இலவச மின்சாரத்தை தமிழக அரசு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.